Pages

Sunday, February 27, 2011

மிஸ்டர் ” எக்ஸ்” ஜோக்ஸ்.

இன்னிக்கு என்கிட்ட மாட்டினவங்க மிஸ்டர் எக்ஸ்.
(ஐயோ பாவம்.!!!!!!!!!!!).

 மிஸ்டர் எக்ஸுக்கு டீ குடிக்க ரொம்பவே பிடிக்கும் ஆனா எப்படி டீ போடனும்னு
தெரியாது, ஒரு ஹோட்டலில் டீ குடிக்கப்போனார்.கிச்சன் வரை போயி டீ
எப்படி போடராங்கன்னு நல்லா கவனிச்சுப்பார்த்து மனதில் பதிய வைத்துக்கொண்டார். சரி, இப்ப நாமே வீட்ல நாமே டீ போட்டுக்கலாம் என்று
கடையில்போயி ஜீனி,டீத்தூள்,பால், ஸ்டவ் எல்லாம் வாங்கிண்டு வீடு வந்தார்.
ரொம்ப குஷியாக அடுப்பை பததவைத்தார். அப்பரம்தான் அவருக்கு நினைவுக்கு
 வந்தது டீ போட பாத்திரமே வாங்கலைனு. சரின்னு ஜீனி, டீத்தூள் பால் எல்லாவற்றையும் ஆ.....ன்னு வாயைத்திறந்துண்டு வாயில் போட்டுக்கொண்டு
ஸ்டவ்வில் உக்காந்துட்டார். டீ கொதிக்கவேண்டாமா?  :))))))))))))))))))))

Thursday, February 24, 2011

குழந்தை மனசு.

குழந்தை மனது.


என் பெரிய மகனின் மகன் என்பேரன் பிறக்கும்போதே சிறிய
குறைபாட்டுடன் பிறந்தான்.இப்போது அவனுக்கு 15 வயது ஆகிரது.
அவன்பேசுவது வீட்டில் உள்ளவர்களுக்குமட்டுமே புரிந்து கொள்ள
முடியும்படி இருக்கும். நான் ஒரு சமயம் அவர்கள் வீடுபோனேன்.
பேரன் என்னிடம் ஒரு நாள் பாட்டி எனக்கு இப்பவே முறுக்கு வேனும்
பண்ணிக்கொடுங்க என்ரான். வீட்ல அரிசி மாவு இல்லைடா, அப்பரமா
பண்ணித்தரேனே என்ரேன். அவன் கேட்பதற்கு ரெடி இல்லை. இப்பவே
வேனும், என்கிட்ட காசு கொடுங்க நா கடைக்குப்போயி அரிசி மாவு
வாங்கிண்டு வரேன்னான்.

Saturday, February 19, 2011

நொருக்ஸ்(6)

நொறுக்ஸ்(6)


இந்த சம்பவமும் கிராமத்தில் தங்கை கல்யாணதுக்கு போனப்போ நடந்தது.
கிராம்த்ல லாம் கல்யாணமண்டபம் என்று தனியாக எல்லாம் கிடையாது.
வீட்டு வாசலில் தெருமுழுவதுமாக பந்தல் போட்டு வீட்டு வாசலில்தான்
கல்யாணம் நடத்துவார்கள். நாங்க போன அடுத்த நாள் குழந்தைகளுக்கு
டாய்லெட் போக வேண்டி இருந்தது.வீட்டின் பின் ஒரு ஒதுக்குப்புறம
இருந்தது. வாளியில் தண்ணி கொண்டு பின்னாடி பக்கமா போகச்சொன்னேன்.
அவர்களும் போன வேகத்திலேயே திரும்பி வந்தார்கள். என்னாச்சு? என்ரேன்
போ மம்மி, பெரிசு, பெரிசா 4 டாய்லெட் இருக்கு, நாங்கல்லாம் உக்காந்தா
உள்ளயே விழுந்துடுவோம். அவ்வளவு பெரிசா இருக்கு. அதுமட்டுமில்லை.
அதுமேல அழகா ரங்கோலில்லாம் போட்டு வச்சிருக்கா. எல்லாம் ஓபன் ப்ளேசுலஇருக்கு கதவே இல்லியே என்றார்கள்.

Saturday, February 12, 2011

நொறுக்ஸ்(5)




நொறுக்ஸ்(5)


நான் மத்தபாஷைங்க தெரியாம அசட்டுப்பட்டம் கட்டிண்டேன்னா
என் பசங்க தமிழ் தெரியாம படுதின காமெடி இன்னும் அதிகம்.
என் தங்கயின் கல்யாணம் எங்க கிராமத்தில் இருந்தது. நானும் அவரும்
எங்க 5 குழந்தைகளுடன் ஒருவாரம் முன்பே போனோம். வீடு நிறையா
சொந்தக்காரங்க நிறம்பி, வீடு ஒரே கல, கலப்பா இருந்தது. கிராமத்து வீடு
விஸ்தாரத்துக்கு கேக்கனுமா?அதுவும் எங்க வீடு ஏழு மாடிகளைக்கொண்டது.
அடுத்தடுத்து நான்கு வீடுகளும் எங்களோடதுதான்.குழந்தைகள் கும்மாளம்
அடிக்க கேக்கனுமா? என் அம்மா 32-வயடிலேயே என்குழந்தைகளால் பாட்டி
ஆகிட்டாங்க அதனால என்பசங்ககிட்ட என்னை பாட்டின்னு கூப்பிடக்கூடாது
அம்மம்மானு சொல்லுங்க இல்லைனா மாப்பிள்ளை( என்னவர்) கூப்பிடுவது
போல மாமின்னுதான் கூப்பிடனும்னு.சொல்லி வச்சிருந்தா.குழந்தைகளும்
சில சமயம் அம்மம்மான்னும், சில சமயம் மாமின்னும் கூப்பிடுவாங்க. பின்னால

Friday, February 4, 2011

நொறுக்ஸ்



நொறுக்ஸ்


இந்தப்பதிவில் ஹிந்தி தெர்யாம வாங்கின அசட்டுப்பட்டம் பற்றி.
கல்யாணம் ஆகி பூனா வந்து ஒருமாசம் ஆகியிருக்கும். ஹிந்தி,
மராட்டின்னுல்லாம் ஒரு பாஷை இருக்குன்னே தெரியாது.ஒரு மாலை
நேரம் அவர்களுக்கெல்லாம் காபி குடுத்துட்டு பேசிண்டு இருந்தோம்.
வாசலில் பழ வண்டிக்காரன் போனான். இங்கு பெரியவர்கள் இரவு
சாப்பாட்டுக்குப்பின் தினசரி ஒரு வாழைப்பழம் சாப்பிடுவார்கள்.
என் வீட்டுக்காரர், லஷ்மி வாசல்ல பழக்காரன் போரான் பாரு ஒரு
டசன் பழம் வாங்கிண்டு வான்னு சொல்லி மூன்று ரூபாய்கள் தந்தார்.

என்னை ஆதரிப்பவர்கள் . .