வள்ளியூர்தான் என் அம்மா ஊரு. கல்லிடைக்குறிச்சி அப்பா ஊரு. நான் பிறந்ததுமட்டும் வள்ளியூர்.வளர்ந்ததுஎல்லாமகல்லிடையில்தான்.அம்மாவின் அப்பா,அவங்க அப்பா என்று தலை முறை தலை முறையாக வள்ளியூரில் கிராம முன்சீப்பாகவும், சிவன்கோவில் தர்மகர்த்தாவாகவுமிருந்து வந்தார்கள். ஒவ்வொரு வருடமும் ஆடி முதல்வெள்ளியன்றும்பெரிதாக கொடைவிழா எல்லாம் சிறப்பாக நடத்துவார்கள்.சிவன்கோவில்என்றால் சிவனை எல்லை சாமியாக ஸ்தாபிதம் பண்ணி பிரதிஷ்டை பண்ணி இருக்காங்க.
அம்பாளுக்கு இசக்கி அம்மன் என்னும் பேரு, ஆண்டவருக்கு சுடலை ஆண்டவர்னு பேரு.வள்ளியூரில் அந்த சமயத்தில் அதாவது ஒரு 50, 55- வருடங்களுக்கு முன்னெல்லாம் கீழத்தெரு, மேலத்தெருன்னு ரெண்டே தெருக்கள்தான் இருந்தது. சின்ன ஊருதான். கன்யாகுமரி, நாகர்கோயில் பக்கம் இந்த ஊரு இருக்கு. அம்மகூட பிறந்தவங்க 12பொண்ணுஒரேஒரு பையன்.(அப்பாடா????????????). அம்மாவ்ழி குடும்பத்தினர் எல்லாரும் எந்த ஊர்களில்
இருந்தாலும் இந்தக்கொடை விழாவில் வந்து கலந்துப்பாங்க. தாத்தாபாட்டி வீடு கீழத்தெரிவில்இருந்தது. பழயகால முறைப்படி, வாசல் திண்ணை, நடை ,ரேழி,கூடம் அடுக்களை, தாவாரம், பட்டாசாலை,கொல்லைப்புறம் என்று ரயில் கம்பார்ட்மெண்ட் போல நீளமாக இருக்கும். அம்மாவின் கூடப்பிறந்தவங்க எல்லாருமே பெணகள் அதிகமில்லியா அவங்க குழந்தைகளும் ஒவ்வொருவருக்கும்7, 8 க்கு குறையாம இருக்கும். என்கூட பிறந்தவங்களும் 7 பேரு. எல்லாரையும் அந்தவீடுதாங்காது. அக்கம் பக்கம் உள்ள வீடுகளிலும் பாதிபேரு தங்கிப்போம்.
அப்பல்லாம் அங்க யாரு வீட்டிலும் குளிக்க பாத்ரூமோ, டாய்லெட்டோ கிடையாது. கோவில்குளத்துலதான் எல்லாரும் குளிக்கபோகனும். வயல் வெளிகளில்தான் காலைக்கடன்கள் கழிக்கனும்
(இதுனாலயே எனக்கு அந்த ஊருக்கு போகப்பிடிக்காது.) வயக்காட்டுல பன்னிகள்வேறு கூட்டமாவந்து நம்மை ஓடஓட விரட்டிகிட்டே இருக்கும்.( ஹா ஹா).வீட்டில் ஒரேபொம்பிள்ளைகள் கூட்டமாஇருக்குமா சோப்பு வாசனை பவுடர் மணம் பூக்களின்மணம் என்று கலவையான மணங்கள் மூக்கில்
வந்துவீசிக்கொண்டே இருக்கும். பூஜை ரூமிலிருந்து விளக்கு எரியும் நெய்யின் வாசனை ஊதுபத்திசாம்பிராணி, தசாங்கவாசனைகள் வீடுபூரா நிறம்பி இருக்கும் ஒரேபுகை மூட்டமா இருக்கும். பெரிய
வீடே தவிர எல்லாரூமும் இருட்டாகவே இருக்கும். லைட் எப்பவும் எரிந்துகொண்டே இருக்கனும்.அடுக்களையில் இருந்து இட்லி, சாம்பார் சட்னிமணம் சமையல் மணம் எல்லாம் கலந்துகட்டி வரும்.
ஒருகல்யாண வீடுபால கலகல்ப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கும். எல்லாரு நலம் விசாரித்து சிரித்துபேசிஎன்று நல்லாவே ரிலாக்ஸ் ஆயிடும்.இதெல்லாம் நல்லாதான் இருக்கும்.. வெள்ளிக்கிழமை கொடைவிழா
என்றால் நாங்க எல்லாருமே அதாவது வெளி ஊரில் இருந்து வருபவர்கள் வியாழக்கிழமை காலை போயி சேருவோம் அதுக்கும் முன்பே கால் நாட்டு விழா எல்லாம் நடத்தி இருப்பாங்க. அதுக்கு பக்கத்துஊர்களில் இருப்பவங்க போயி கலந்துப்பாங்க. கொடைவிழா பத்திரிகை எல்லாம் ஒருமாசம் முன்பே
எல்லாருக்கும் அனுப்பி இருப்பார்கள்
கொடை அன்று காலைமுதலே களைகட்டும். கீழத்தெருவில் இருந்து குழந்தைகள் பால்குடம் எடுத்து ஆடிக்கொண்டே கோவில் வரைபோவார்கள். கூடவே நாதஸ்வரம் மேளம் பாட்டுக்கள். சாமிக்கு பூஜைகள் பெண்கள்
மாவிளக்கு ஏற்றி வழிபட்டு, சாமிக்கு பாலபிஷேகம், சந்தன அபிஷேகம்
எல்லாம் சிறப்பாக நடத்துவார்கள்.என் அம்மா குடும்பதில் அம்மா கூடப்பிறந்தவங்கள் எல்லாருக்கும் சாமி அருள் வரும். எல்லாரும் சாமி ஆடி பக்தர்களுக்கு அருள் வாக்கெல்லாம் சொல்வார்கள்.பெரியம்மா பெண் லண்டனில் இருந்து இந்த கொடைவிழாவில் கலந்துகொண்டு சாமி ஆடுவார்கள். பூரா நாளும் கொட்டும் மேளமும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
கோவில் வாசலில் தப்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால்குதிரை ஆட்டம் என்று கிராமிய கலை விழாக்கள் அமர்க்கள்மாக இருக்கும்.
ஊரே திருவிழாகோலம் கொண்டு உற்சாகமாக இருக்கும்.இந்தக்கோவிலில் பிராமின்சும், நான் பிராமின்சும் கலந்துதான் இந்த கொடைவிழா தலை முறை தலைமுறையாக நடத்தி வருகிரார்கள். சாயந்தரம் வில்லுப்பாட்டில் சுடலை ஆண்டவர் கதை விஸ்தாரமாக சொல்லுவார்கள்.கூட்டம் நிறம்பி வழியும். இதெல்லாம் ஓக்கேதான். நானும் என் கூடப்பிறந்தவங்களும் பிறந்தவீட்டில் இருந்தவரையிலும் இந்த விழாவில் கலந்துகொண்டு பால்குடம்லாம் எடுத்திருக்கேன். கல்யாணமான பிறகு போக வாய்ப்பு கிடைக்காம போச்சு.ரொம்ப வருடங்களுக்குப்பிறகு என் வீட்டுக்காரருக்கு அந்தக்கொடைவிழாவில் கலந்துகொள்ள னும்னுதோனிச்சு. அப்புரம் வருடா வருடம் அவர்கூட போனேன். அவருக்கு அந்த சாமி மேல கண்மூடிதனமான நம்பிக்கை இருந்தது.
நானும் வந்துதான் ஆகனும்னு சொல்லிடுவார்.எனக்கு அவ்வளவா விருப்பமில்லே. அங்க ஆடு கோழில்லாம் பலி கொடுப்பாங்க. அது எனக்கு பிடிப்பதில்லே. அந்த சாமியை கோவக்காரசாமியாக அதாவது பார்வதியைப்பிரிந்து சுடலையில் கோவமாக ஆடும் சாமியாக பிரதிட்ட்டை பண்ணினதால அவரை சாந்தப்படுத்த இந்தபலில்லாம் கொடுத்துதான் ஆகனும்னு ஒரு நம்பிக்கை. அந்த ஜனங்களுக்கு.வழி வழியாக செய்து வந்தபழக்கத்தை ஒரு பெரியவர் சொன்னார் என்று ஒருமுறை பலி கொடுக்காமல் விழா பண்ணினார்கள். சொல்லி வைத்தமாதிரி தாத்தா, குடும்பம் அவங்க கூடப்பிறந்தவங்க குடும்பத்தில் சின்னவயசு குழந்தைகள் 21 பேர் இறந்துட்டாங்க. இது சாமி குத்தம்தான் நாம வழக்கம்போல ஆடு கோழியே பலி கொடுத்துடலாம் என்று வருடாவருடம் அதையே செய்து வருகிரார்கள்.
பகல் நேரம் பூராவும் சாமிக்கு மாவிளக்கு, சக்கரைப்பொங்கல் எல்லாம்
நைவேத்தியம் பண்ணுவார்கள். இரவு கரெக்டாக சாமி ஆடி ஆவேசம் வந்து சுடுகாட்டுக்குப்போயி அங்கு சாம்பலில் புரண்டு ஆடிட்டு பெரிய கிண்ணம் நிறையா சுடுகாட்டு சாம்பலை(எலுபுதுண்டுகளும் இருக்கும் அதில்)எடுத்து தெரு பூராவும் ஆவேசம் வந்து ஆடிட்டே வருவார். வழியில் பக்தர்கள் அவர் காலில் விழுந்து நமஸ்கரிப்பார்கள். அவர்களுக்கெல்லாம் விபூதி கொடுப்பார். அதில் கல்ந்திருக்கும் எலும்புதுண்டுகள் யாருக்கெல்லாம் கிடைக்கிரதோ அவங்கல்லாம் அதை பயபக்தியுடன் வீட்டில் ர்க்ஷைபோல வச்சுப்பாங்க.இரவு நான் பிராமின்ஸ் படப்புதீபாராதனை என்று ஆடுகோழியைவச்சுதான் சமைச்சு சாமிக்கு படையல் போடுவாங்க.அந்தப்பிரசாதம் வாங்க நிறைய நான் பிராமின்ஸ் கூட்டமாக தூக்கு வாளில்லாம் வச்சுண்டு வரிசையில் நின்னு வாங்கி போவாங்க.
கொடைவிழா நடக்கும் இந்த நேரங்களில்தான் அந்த சாமிக்கு பந்தல் அலங்காரம் பூஜை அபிஷேகம் எல்லாமிருக்கும். பாக்கி 11 மாசமும் வெயிலிலும் மழையிலும்தன்ன் நனஞ்சுட்டு இருப்பார். பலதடவை கூரை போட்டு பார்த்தாங்க அது எப்படியோ இடிஞ்சு விழுந்துகிட்டே இருந்தது. அப்புஅரம் அப்படியே விட்டுட்டாங்க.
இந்த விஷயத்தை அந்த ஜனங்களின் முறட்டு பக்தின்னு நினைக்கவா,மூட நம்பிக்கைன்னு நினைக்கரதா தெரியல்லே. ஆனாகூட அவங்கவங்க நம்பிக்கைகளை யாரும் டிஸ்டர்ப் பண்ணக்கூடாது இல்லியா? நமக்கு விருப்பமில்லேனா ஒதுங்கி போயிடனும். என் வீட்டுக்காரர் இறந்து போயி 13 வருஷமா நான் அந்த ஊரு பக்கம் போரதே இல்லே.மத்த சொந்தக்காரங்கல்லாம் போயி கலந்துக்குராங்கதான்.