அந்த அமர்க்களமெல்லாம் ஒருமாதத்தில் ஓய்ந்தது. இவரும் புது வேலையில்சேர்ந்துபோஆரம்பித்தஅடுத்தவருடம்மாமியாரும்போயிட்டாங்க. ஒருதீபாவளி நாளில். அதுபற்றி விவரமாக ”காஃபி” என்றபதிவில் ஏற்கனவேபோட்டிருக்கேன்.அதுக்கும்( கடைசி காரியங்களுக்கு) ஏகச்செலவு ஆனது.இவ்ரோட ஒரு சம்பளத்தில் குடும்பம் நடத்தி ஆகணும்.என்வரை வரவு செலவுசொல்லமாட்டார். என்னை வெளியிலேயே அனுப்பமாட்டார். எல்லா சாமான்களும் காய்கறிகளும்பாலும் அவரேதான் வாங்குவார். என்ன வரவு என்ன செலவுன்னு அப்பவும் எனக்கு தெரியலை.குழந்தைகளை ஸ்கூலில் சேர்த்தோம். 5 குழந்தைகளை படிக்கவைத்து, துனிமணி எடுத்துக்கொடுத்துசாப்பாடு போட்டு வளர்ப்பது அவ்வளவு ஈசியான வேலை இல்லைதான். நானும் குழந்தைகள்படிக்கும்போது கூடவே உக்காந்து படிக்க ஆரம்பித்தேன்.மராட்டி, ஹிந்தி, இங்க்லீஷ் எல்லாம் ஆரம்பத்லேந்து படித்தேன். தமிழ் படிக்கத்தான் வாய்ப்பே கிடைக்கலை.5 வயசுல படிக்கவேண்டிய பாடங்கள் எல்லாம் 25 வயசில் படிக்க ஆரம்பிச்சேன். ஒன்னொன்னா தெரிய, தெரிய எனக்கே ரொம்ப சந்தோஷ்மா இருந்தது.கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் என்று எல்லாம் குழந்தைகள் மூலமாகதெரிஞ்சுண்டேன். நயாபைசா பற்றியும் ஓரளவு தெரிஞ்சுண்டேன். இவர் கடையில் இருந்து சாமான்வங்கிவந்ததும் இது என்ன விலை இது என்ன விலைன்னு கேட்டு தெரிஞ்சுப்பேன். மூடு இருந்தாசொல்வார். இல்லனா இதெல்லாம் தெரிஞ்சு என்னபண்ணப்போரேன்னுடுவர்.
Tweet | |||||