Pages

Wednesday, April 27, 2011

மலரும் நினைவுகள்(11)



அந்த அமர்க்களமெல்லாம் ஒருமாதத்தில் ஓய்ந்தது. இவரும் புது வேலையில்சேர்ந்துபோஆரம்பித்தஅடுத்தவருடம்மாமியாரும்போயிட்டாங்க. ஒருதீபாவளி நாளில். அதுபற்றி விவரமாக ”காஃபி” என்றபதிவில் ஏற்கனவேபோட்டிருக்கேன்.அதுக்கும்( கடைசி காரியங்களுக்கு) ஏகச்செலவு ஆனது.இவ்ரோட ஒரு சம்பளத்தில் குடும்பம் நடத்தி ஆகணும்.என்வரை வரவு செலவுசொல்லமாட்டார். என்னை வெளியிலேயே அனுப்பமாட்டார். எல்லா சாமான்களும் காய்கறிகளும்பாலும் அவரேதான் வாங்குவார். என்ன வரவு என்ன செலவுன்னு அப்பவும் எனக்கு தெரியலை.குழந்தைகளை ஸ்கூலில் சேர்த்தோம். 5 குழந்தைகளை படிக்கவைத்து, துனிமணி எடுத்துக்கொடுத்துசாப்பாடு போட்டு வளர்ப்பது அவ்வளவு ஈசியான வேலை இல்லைதான். நானும் குழந்தைகள்படிக்கும்போது கூடவே உக்காந்து படிக்க ஆரம்பித்தேன்.மராட்டி, ஹிந்தி, இங்க்லீஷ் எல்லாம் ஆரம்பத்லேந்து படித்தேன். தமிழ் படிக்கத்தான் வாய்ப்பே கிடைக்கலை.5 வயசுல படிக்கவேண்டிய பாடங்கள் எல்லாம் 25 வயசில் படிக்க ஆரம்பிச்சேன். ஒன்னொன்னா தெரிய, தெரிய எனக்கே ரொம்ப சந்தோஷ்மா இருந்தது.கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் என்று எல்லாம் குழந்தைகள் மூலமாகதெரிஞ்சுண்டேன். நயாபைசா பற்றியும் ஓரளவு தெரிஞ்சுண்டேன். இவர் கடையில் இருந்து சாமான்வங்கிவந்ததும் இது என்ன விலை இது என்ன விலைன்னு கேட்டு தெரிஞ்சுப்பேன். மூடு இருந்தாசொல்வார். இல்லனா இதெல்லாம் தெரிஞ்சு என்னபண்ணப்போரேன்னுடுவர்.

Thursday, April 21, 2011

மலரும் நினைவுகள்.(10)

புது வேலையில் சேர ஒருமாதம் அவகாசம் இருந்தது. ஏற்கனவே
 பார்த்துவந்தவேலையும் செண்ட்ரல் கவர்மெண்ட் வேலைதான்.
 இன்னிக்கு சொல்லி நாளை வேலையை விட முடியாது. சில பார்
 மாலிட்டிஸ் எல்லாம் உண்டு. ஒருமாத நோட்டீஸ்கொடுக்கணும்.
 அந்த ஒருமாதமும் வேலைக்குப்போகணும்.எல்லாம் முறைப்படி
 செய்தார். அப்படி ஒரு நாள் காலை வேலைக்கு கிளம்பி போனதும்
 வீட்லேந்து 5, கிலோமீட்டர் உள்ள டெக்கன் ஜிம்கானா என்னுமிடத்தில்
 சைக்கிள் செயின் கட் ஆச்சு. சைக்கிளை அங்கு ஸ்டேண்டிலேயே
 வச்சுட்டு பஸ் பிடித்து கடக்வாசலா ஆபீஸ்போனார்.

Thursday, April 14, 2011

மலரும் நினைவுகள்.(9)



எப்படியோ முட்டி, முட்டி ஒன்னொன்னா கத்துகிட்டேன். ஒன்னுமேதெரியாம
 வந்த நான் ஓரளவுக்கு எல்லா வீட்டு வேலைகளும் தெரிந்து கொண்டேன்.
 அடுத்தவருஷம் மாமனாருக்கு ஹெல்த் ப்ராப்ளம் ஆகி ஆஸ்பிடலில் அட்மிட்
 செய்யும்படி ஆச்சு. ஒருவாரமா யூரின்போகாம வயறு வீங்கி ரொம்பவே கஷ்ட்டப்பட்டார். ஆஸ்பிடலில் ஆபரேஷனும் ச்ய்து பார்த்தார்கள். எதுவும்
 சரி ஆகலை. ஆஸ்பிடலிலேயே போயிட்டார். அவரின் கடைசி காரியங்கள்
 எல்லாம் முறைப்படி செய்தோம். மாமனார் சிறுக, சிற்க சேர்த்துவைத்த பணம் எல்லாமே அவரின் ஆஸ்பிடல் செலவுகளுக்கும் அவரின் கடைசி காரியங்களுக்குமே சரியாப்போச்சு. இப்ப கையில் சேவிங்க்ஸ் என்று எதுவுமே
 இல்லை.

Sunday, April 10, 2011

பெண் எழுத்து

ஆயிஷாபவுல் அவர்கள் என்னையும் தொடர்பதிவுக்கு அழைத்திருக்காங்க.
 அவங்களுக்கு நன்றி. இதுபற்றி பலரும் பலவிதமா கருத்துசொல்லிஇருக்காங்க.கூடிய மானவரை எல்லார் பதிவும் படிச்சிருக்கேன். பொதுவா பதிவுலகத்தைப்பொருத்தவைரை பெரும்பாலானவர்கள்,உண்மையான பெயரோ, முகமோ காட்டாமல் தான் இருக்காங்க. ஒரு சிலரே, உண்மையான பெயரும் முகமும்
காட்டுராங்க. வெரும் பதிவுகளைப்பார்த்து இந்தப்பதிவு ஆண் எழுதியதா, பெண்
எழுதியதா என்றுஅனுமானிப்பதுகொஞ்சம்சிரமம்தான்.இப்பபெண்களும்எல்லா
 விஷயங்கள்பற்றியும்எழுதிட்டுவராங்க.தங்களுக்குகிடைக்கும்அனுபவத்தால்
 சிலர்தைரியமாகதங்ககருத்தைவெளிப்படுத்தராங்க.அந்தஎழுத்துக்குக்கிடைக்குகிடைக்கும் அங்கீகாரத்தால்(பின்னூட்டம் மூலமாக) இன்னும் இன்னும் சிறப்பாக தங்களை வெளிப்படுத்துகிறார்கள்.

Friday, April 8, 2011

மலரும் நினைவுகள்.(8)



தாத்தாவுக்கு மமியார் ஒரே பொண்ணு. வேறயாரும் கிடையாது.அதனால
அவரும் இவங்க கூடவே தங்கி, சமையலும் வீட்டையும் நிர்வாகம் பண்ணி
வந்தார். மாமியாருக்கு என் வீட்டுக்காரர் ஒரே பிள்ளை.அப்பாவும் மகனும்
ஆபீஸ்போயி சம்பாதிக்கணும். மாமியார் உடம்பு முடியாதவங்க . தாத்தா
கூட இருந்தது அவங்களுக்கு சவுரியமாகவே இருந்தது. சமையல் பாத்திரங்கள்
 தேய்க்கப்போனேன். வைக்கொல்லில் சாம்பலும் சீக்காபொடியும் பிரட்டிண்டு
ஒவ்வொரு பாத்திரமாக் கவனமாக தேய்த்தேன்.சாதம் பண்ணவெங்கலபானை
குழம்பு பண்ண கையாசட்டி, ரசம் பண்ண ஈயசெம்பு, கீரை மசிக்க மண் சட்டி
எல்லாம் ஒன்னிச்சு வேக வைக்க பெரிய பித்த்ள்ளைக்குக்கர் என்று எல்லா
பாத்திரங்களும் ஏக கனம். ஒரு வழியா பாத்திரம்லாம் தேய்த்து கழுவி துடைத்
து அதனதன் இடதில் வைத்தேன்.


Sunday, April 3, 2011

மலரும் நினைவுகள்(7)



குடிக்க வென்னீரும் ஒரு பித்தளை தவலயில்தான்.அதையும் வச்சுட்டு டிகாஷன்
பால் எப்படி கலக்கனும்னு தாத்தாவிடம் கேட்டு முதல்முறையா காபி கலக்க
தெரிஞ்சுண்டேன். அளவாக ஜீனி போட்டு எல்லாருக்கும் காபி கொடுத்தேன்.
அதற்குள் மாமனார்,மாமியாரும் எழுந்து பல்தேய்த்துவிட்டு வந்தார்கள்.இவர்
காபி நல்லா இருக்கு லஷ்மின்னார். எனக்கு குஷி தாங்கலை. மாமனார் பேசி
பாத்ததே இல்லை, எல்லாத்துக்கும் ஒரு தலை ஆட்டலில்தான் பதில் வரும்.
மாமியாரும் எதுவும் சொல்லலை.முதலில் இவர் மோரியில் குளியல் அப்பரம்
மாமனார் குளியல் ஆகி இருவரும் ஸ்லோகம்லாம் சொல்லி காயத்ரி ஜபித்துகரக்டாக 6.30. க்கு சாப்பிட உட்கார்ந்தார்கள்.


என்னை ஆதரிப்பவர்கள் . .