மும்பையில் தாணா என்னும் பகுதியில் இருந்து ஷீரடி( சாய்பாபா) சுமாராக
250 கிலோ மீட்டரில் இருந்தது. முதலில் பாபா தரிசனம். மதியம் சாப்பாடு
முடிந்து ஒர்மணி சுமாருக்கு கிளம்பினோம். பெரியவர்கள் 9 பேர்கள், குழந்தைகள்
6 பேர்கள். வண்டியில் பழைய ஹிந்தி பாட்டுக்கள் கேட்டுக்கொண்டே உல்லாசமாக
பயணம் துவங்கியது. கையில் நிரையவே டிட்பிட்டுகள்( சாப்பிட நொறுக்ஸ்தான்)
எடுத்துக்கொண்டோம். வழிபூராவும் சூப்பர், சூப்பர் சீனரிகள்.
முதலில் நாசிக் என்னும் இடம் போனோம். அதற்கே 3மணி நேரங்கள் ஆனது.
அங்கு மானசா ரிசார்ட் என்னும் ரெஸ்டாரெண்டில் ஃப்ரெஷப் பண்ணிண்டு காபி
ஸ்னேக்ஸ் சாப்பிட்டு திரும்ப பயணம்.வழியில் நிரைய பேர்கள் கால் நடையாக
ஷீர்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். பாம்பே டு ஷீரடி கால் நடையாகப்போக
ஒரு வாரம் ஆகுமாம். சிலர் நடந்து வருவதாக பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள்.
Tweet | |||||