Pages

Thursday, March 31, 2011

மலரும் நினைவுகள்(6)



விழிப்புமில்லாம, தூக்கமும் இல்லாம இருக்கும்போதே கிணத்துக்குள்ளேந்து
 என்னமோ கினு, கிணுன்னு மணி அடிக்கறமாதிரி சப்தம் கேட்டுது.(பூனா)
இது என்ன பாதி ராத்திரி யாரு பூஜைலாம் பண்ராங்கன்னு நினைச்சேன். அப்பரம்
சமையல் ரூமில் லைட் எரிந்தது. தாத்தா எழுந்து நடமாடும் சப்தம் கேட்டுது.
 நான் இப்ப எழுந்துக்கரதா, என்னபண்ணரதுன்னு தெர்யலை. சரி அவங்க என்ன
 பண்ராங்க்ன்னு போயி பாக்கலாம்னு சமயல்ரூம்கதவு திறந்து அங்க போனேன்.
ரூம்பூரா ஒரே புகை, தாத்தா பாய்லர் பத்தவச்சிருக்காங்க. அது திகு திகுன்னு
 எரிஞ்சு ரூம்பூர புகை.தாத்தா, ஏன் இவ்வளவு சீக்கிரமா எழுந்தீங்க?, தூக்கம் வல்லியான்னேன். இல்லைமா, தினமுமே நாலரைக்கு எழுந்தாதான் வெலை
ஆகும் என்ரார்.இப்போ நாலரை மணியாஎன்ரேன். உனக்கு அலாரம் அடிச்சது
கேக்கலியா? என்ரார். அலாரம்னா என்னதுன்னுதெரியலை. அப்படின்னா என்ன? என்ரேன். சுத்தம். அலாரம்னா தெரியாதா. இதோ பாரு இது அலாரம்
டைம்பீஸ்.என்று குட்டியா ரவுண்டா நம்பர்லாம் போட்டிருந்த ஒரு விளையாட்டு சாமான்(!!!!!!!!!!!!!!1) காட்டினாங்க. இதுல காலேல எவ்வளவுமணிக்குஎழுந்திரிக்கணுமோ அவ்வளவு மணிக்கு அலாரம் ஸெட்
 பண்ணி வச்சோம்னா காலேல மணி அடிச்சு நம்மளை எழுப்பிடும்.என்ரார்.
 எங்க வீட்ல பெ,,,,,,,,ரி,,,,,,,,,சா,,,,,,, சுவர்க்கடிகாரம்தான் பாத்திருக்கேன்.










இது பாக்கவும் கேக்கவும் புதுசா இருந்தது. சரி வள வளன்னு பேசிட்டு நிக்காதே
வாளில தண்ணி எடுத்துண்டு பின்புறம் போயி பல் தேய்ச்சுட்டு,முகம், கை
கால் அலம்பிண்டுவா.அதுக்குள்ள வென்னீர் ரெடி ஆயிடும். நான் முதல்ல
குளிச்சுடரேன். என்ரார். வாளின்னா இப்பமாதிரி ப்ளாஸ்டிக் பக்கெட்லாம்
இல்லை. கனம், கனமா இரும்போ, த்கரமோ வாளிதான். கூடவே ஒரு பித்தளை
செம்பும் கொண்டுபோன்னார்.சரின்னு பின்புறமாக வாளியை தூக்கமுடியாம
தூக்கிண்டு போனேன். பல்தேய்க்கவும் பேஸ்ட் ப்ரெஷ்லாம் இல்லை. உமிக்கரி
தான் பல்தேய்க்கனும். நல்ல வெட,வெடன்னு குளிர் நடுக்கித்து.




எங்க ஊர்ல எப்பவுமே வெக்கைதான். அதனால இந்தக்குளிர் எனக்கு ரொம்ப
கஷ்டமா இருந்தது. நான் நடுங்கிண்டே பல்தேய்ச்சுட்டு இருக்கும் போதே வரிசையா 4, 5 பேர் பக்கத்து குடுத்தனக்காரா சின்ன வாளிலதண்ணி கொண்டு
வந்து லைன்ல க்யூவா நின்னாங்க.(டாய்லெட்டுக்காம்).அட கடவுளே, இது வேரயா? வேக, வேகமா பல்லை விளக்கிட்டு வீட்டுக்கு(!!!!!!!!!!!!!!!) போனேன்.
 அதற்குள்ள தாத்தாகுளித்து 8 முழம் வேஷ்டி கட்டிண்டு என்னமோஸ்லோகம்
 சொல்லிட்டே காய்கறி நறுக்கிண்டு இருந்தார். நான் வந்ததும், முதல்ல சாணி
கரைச்சு வாசல் தெளிச்சு ரெண்டுவாசலிலும்(சமையல்ரூம்,முதரூம்) கோலம்
போடு என்ரார்,ஐயே சாணியா என்று அறுவெருப்பா நினைச்சேன். எனக்கு
 இந்த அசிங்கம், அறுவெருப்பு எல்லாம் கொஞ்ச்ம் அதிகமாவே பிடிக்காது.




சரி வேர வழி இல்லை மூக்கைபொத்திண்டே சாணி கரைத்து வாசலில் தெளித்
து தென்னை விளக்கு மாரால் நன்கு பெருக்கி கோலமும் போட்டேன். நல்ல
வேளை கோலம்போடத்தெரிந்திருந்தது.உள்ளவந்ததும் தாத்தா நான் வாசல்ல
 உக்காந்து காயத்ரி ஜபிச்சுண்டு அடுப்பையெல்லாம் பத்தவைக்கரேன் நீயும்
 வென்னீர் எடுத்துண்டு மோரில(தொட்டி முற்றம்)குளிச்சுட்டு மடி புடவை
போட்டுக்கோ. என்றார்.சமையல் ரூமிலேயே மேல உருட்டு மரக்கம்பால் ரெண்டு கொடி தொங்கிட்டு இருந்தது. அதில் ஒரு கொடியில் தாதாவின் வேஷ்டியும், இன்னொரு கொடியில் என்புடவையும் இரவே காயப்போட்டிருந்தேன். அவர் சொல்லித்தான்.




தொட்டி முற்றம் மிகவும் சின்னது அதில் கஷ்டப்பட்டு குளித்து முடித்துபுடவை
மாற்றினதும் தாத்தா உள்ளே வந்தார். வாலில் வைத்தே நாலு கரி அடுப்பும்
 பத்த வைத்திருந்தார்.கரி அடுப்பே இப்பதான் பாக்கரேன்.கீழேசின்ன வாய் மாதி
ரி இருக்கும் இடத்தில் தேங்கா நார், பேப்பர் மண்ணெண்ணை ஊற்றிமேலே
 நிறைய கரி போட்டு பத்தவைத்திருந்தார். நாலு அடுப்பும் உள்ளே கொண்டு
வந்து வைத்து ஒரு பெரிய நீளமான பித்தளை அடுக்கை கொண்டு வந்தார்.
அதிலுள்ளே தண்ணீர் ஊற்றி, இன்னொரு வெங்கலப்பானையில் அரிசி அலம்பிபோட்டு தண்ணீர் ஊற்றி அந்தபெரிய பாத்திரத்திற்குள் வைத்தார்.
 அதன்மேல் இன்னொரு பாத்திரத்தில் ப்ருப்பும், அதன்மேல் இன்னொரு பாத்தி
ரத்தில் நறுக்கிய காயும் வைத்து டோம் போன்ற மூடியால் மூடி அடுப்பில் வைத்தார்.




அதன்பேரு ருக்மினி குக்கராம். அந்தகாலகட்டத்தில் அதுதான் .என்னிடம் ஒரு
 பனை ஓலை விசிறியைக்கொடுத்து இப்போ நீ நாலு அடுப்பையும் தணல்
குறைய விடாமல் வீசிண்டே இருக்கனும். முதல்லவிளக்கேத்திட்டுவான்னார்.
சமையல் ரூமிலேயே சின்னதா ஒருவிளக்குப்பிறையும்இருந்தது.விளக்கேத்தி
கஜானனம் சொல்லிட்டு(அதுமட்டும்தான் தெரியும்) அடுப்பு வீச ஆரம்பித்தேன்.
தாத்தா, லஷ்மி இந்த மூணு அடுப்பும் பத்து அடுப்பு, கடைசி அடுப்பு பத்தில்லாத
அடுப்பு என்ரார். எனக்கு என்ன சொல்ரார்னே புரியலை. வெருமனே தலையை
ஆட்டிவைத்தேன். எதுக்கு இவ்வளவு சீக்கிரமே சமயல் பன்ரேள். என்றேன்.




நல்லா கேட்டாய்போ,இப்போஆரம்பிச்சாதான்ஆறறைக்குசாப்பாடுரெடிஆகும்
அப்பாவும் பிள்ளையும் காலை ஏழுமணிக்கு வேலைக்கு கிளம்பணும். ஆறறைக்க்கு கரெக்டா சாப்பிட உக்காந்துடுவா.அதுக்குள்ள ரெடி ஆக வேண்டாமா? என்கிறார். காலங்காத்தால 6 மணிக்கு ஃபுல் மீல்ஸா எப்படி
 சாப்பிட முடியும்னு நினைச்சேன். அதுவும் அந்தக்கால மனுஷா, எந்த வியாதி, வெக்கையும் இல்லாதவா, சாப்பாட்டுவிஷயத்தில் வேண்டாங்கர ஐட்டமே
எதுவுமே கிடையாது. சங்கோஜமோ, எதுவுமோபடாம வயறு ஃபுல்லா நல்லாவே சாப்பிடுவா.




நான் அடுப்பு வீசிண்டே தூங்கி வழிஞ்சுண்டே இருப்பேன். இடை,இடையே
தாத்தா குரல் கொடுப்பார்.இன்னம் வேகமா வீசு தணல் குறைஞ்சா சாதம் வேக
 நேரம் எடுக்கும். ஜோரா வீசு என்று சொல்லிண்டே, அடுத்தடுத்த அடுப்புகளில்
சாம்பாரும், பொரியலும் தயார்பண்ணுவார், விசிறின்னா இப்பமாதிரி லைட்
வெயிட் ப்ளாஸ்டிக் விசிறில்லாம் இல்ல. பனை ஓலை விசிறி. கைபிடிக்கும்
கம்பெல்லாம் கையைஅறுக்கும். வீசிண்டே நல்லாதூக்கமா வரும். நான்
வரும் முன்பு என் வீட்டுக்காரர்தான் வீசுவாராம். வீசிண்டே தாத்தாவிடம்
 நல்லா சமையலும் கத்துண்டார். இவர் ஐந்தரைக்கு எழுந்து வந்தார். பின் பக்கம்போய்வந்துட்டு சைக்கிள்எடுத்துண்டுபால்வாங்கப்போனார்.அப்பல்லாம்
பாட்டில்ல பால் வரும். தாத்தா என்னிடம் அவன்பால்வாங்கிண்டுவரதுக்குள்ள
பில்டரில் காபி டிகாக்‌ஷன் போட்டுவை. பத்தில்லாத அடுப்பில் தண்ணீர் கொதிக்கவை என்றார்.




ஓ, சமையல் எல்லாம் பத்து, பால் டிகாஷன்லாம் பத்தில்லை போலன்னு
 நினைச்சுண்டேன்.தாத்தா டிகாஷன் எப்படி போடனும் என்றேன். ஐயோ
 உன் மாமியார் காதுல கேட்டா போறும் வேர வினையே வேண்டாம். தண்ணி
 கொதிக்கவை. பில்டரில் மேபுறம் ஓட்டையா இருக்கு இல்லையா அங்க
ஐந்துஸ்பூன் காபி பொடி போட்டு கொதிக்கர தண்ணி அதன்மேல் விடனும்.
 என்றார். அதற்குள் இவர் பால் வாங்கி வந்தார்.பாலைக்காய்ச்சி காபி ரெடி
பண்ணுனு அடுத்தாஆர்டர்.வேரொரு பாத்திரத்தில் பாலைஊற்றிகாய்ச்சினேன்
அதுபொங்கி வரும்போது என்ன பண்ணனும்னே தெரியலை. அடுப்பை எப்படி
 அணைக்கனும்னு தெரியலை. தாத்தா பால் பொங்கி வழியுது எப்படி அடுப்பை அணைக்கனும் என்ரேன். அடுப்ப அணைக்கரதா,சரியாபோச்சு ஒருதுணி பிடிச்சு பாலைக்கிழே இறக்கிவை.அந்த அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தில்
 எல்லாருக்குமாக குடிக்க வென்னீர்வை என்றார்.

Saturday, March 26, 2011

மலரும் நினைவுகள்(5)

விழிப்பும் உறக்குமுமான ஒரு சொப்பன நிலையில் எப்படி கல்யாணம் நடந்தது
 என்று  நினைவுகள்வந்து போனது.எங்கதாத்தா பெரிய அப்பளா டிப்போ நடத்தி வந்தார்.அதில் வேலைபார்ப்பவர்களும்  ஆணும் பெண்ணுமாக சுமார் 50 பேர்வரையிலும்இருந்தார்கள். விருது நகரிலிருந்து மூட்டை மூட்டையாக உளுத்தம்பருப்பு லாரிகளில் வந்து இறங்கிய வண்ணமே இருக்கும். கல் இயந்திரத்தில் பருப்பு திரிப்பதில் ஆரம்பித்து அப்பளா பாக்கெட்டுகளாக ரெடி ஆகி வெளி மானிலங்கள், வெளி நாடுகள் எல்லாம் எல்லாம் அனுப்புவார்கள்.
அந்தசமயம் மாமனார் குடும்பத்தினர்ஸிலோனில்(ஸ்ரீலங்கா) இருந்தார்கள்.
எங்கள் அப்பளாத்திற்கு அவர்கள்தான் அங்கு ஏஜண்டாக இருந்தார்கள். அப்படி
பழக்கமானவர்தான் அவர். என் வீட்டுக்காரருக்கு 5 வயதாகும் வரை சிலோனில் தான் இருந்திருக்காங்க. அப்பரமா பிரிட்டிஷ்காரன் குண்டு போடரான்னு கிளம்பி இந்தியா வந்துபூனாவில் செட்டிலாயிட்டாங்க. பூர்வீகம் அவங்களுக்கும் எங்க கிராமம்தான்.

Tuesday, March 22, 2011

பெயர் காரணம். ( தொடர் பதிவு)





அமைதிச்சாரல் என்னையும் தொடர்பதிவு எழுத அழைச்சிருக்காங்க.நிறையப்பேரு நிறைய விதமா சொல்லியாச்சு. நான் என்ன சொல்ல?
எனக்கும் எங்க குடும்ப வழக்கப்படி அப்பாவின் அம்மா (பாட்டி) பெயர்வச்சாங்க. அப்படியும் இப்பவும் இந்தவயசிலும் எங்கவீட்டில் எல்லாருக்கும்
நான் ”கோந்தே” தான். நான் பிறந்ததும் என்னை வளர்க்க ஒரு வேலைக்காரி
ஏற்பாடு பண்ணினாங்க. அவங்கபேரு லஷ்மிதான். பின்னாடிகொல்லைப்புறமா நிக்கும் பசுமாடுகளில் ஒன்றின்பெயரும்லஷ்மிதான்.பாத்திரம்தேய்க்கவரும்வேலைக்காரிகளில்ஒருவர்பேரும்லஷ்மியே.








Saturday, March 19, 2011

மலரும் நினைவுகள்(4)



              
மேலே இருப்பது 1960-ல் நடந்த எங்க கல்யாணப்போட்டோ. கீழே வீட்டுக்காரரின் 60-வது வயசு சஷ்டி அப்த பூர்த்திபோட்டோ. ஏற்கனவே இந்தபடங்கள் ஃபேஸ்புக்ல போட்டிருக்கேன். ஆனா ப்ளாக் படிக்கிரவங்க எல்லாருமே ஃபேஸ்புக்ல வரமாட்டாங்களே. என்பதிவு படிக்கரவங்களுக்காக
இங்கயும் இன்னொரு முறை இந்தப்படங்கள் போட்டிருக்கேன்.
ஃப்ளாஷ்பெக் சொல்லிட்டு இருக்கும்போதே இன்னொரு ஃப்ளாஷ் பேக்குள்ள
போயிட்டேன்.திடீர்னு ஊர் நினைவு வந்திடுத்து. இப்ப திரும்ப பூனா வரேன்..
அந்த சமயம் எனக்கு எப்படி ரியாக்ட் பண்ணனும்னே புரியலை. இரவு 9 டு10
வரையிலும், காலை 9 டு 10 வரையிலும் தான் தண்ணி வருமாம். தண்ணீர்
பிடித்துவைக்கும் அண்டா, குண்டா,எல்லாமே பித்தளையில் தான் இருந்தது.
மாமியார் என்னிடம் லஷ்மி பாய்லரில் தண்ணி பிடிச்சு வை.காலேல வென்னீர்
போட சவுரியமா இருக்கும் என்றார்கள். 50 வருடம் முன்பு பூனாவில் 6
மாதங்கள் நல்ல பனியாக குளிராக இருக்கும். ஊர் பூரா ஏ, ஸி போட்டதுபோல 
அப்படி ஒரு ஜில்லிப்பா இருக்கும்.

Monday, March 14, 2011

மலரும் நினைவுகள்.(3)



எங்க வீட்ல என் குழந்தைப்பருவம் குட்டி இளவரசி போல. என் அம்மா, அப்பாவுக்கு திருமணம் முடிந்து 5-வருடங்களுக்குப்பிறகு தான் நான் பிறந்தேனாம். அதனால பாட்டி தாத்தாவுக்கு நான் ரொம்பவே செல்லம்.அதிலும் பாட்டி பேரை எனக்கு வைத்திருப்பதால் இன்னும் அதிக செல்லம்.நான் பிறந்ததுமே, என்னை கவனிச்சுக்க ஒரு வேலைக்காரி ஏற்பாடு செய்துஅவளுக்கும் வீட்டி பின்புறமே ஒரு ரூமும்கட்டிக்கொடுத்து வீட்டோடு தங்கவைத்தார்கள். நிறைய நேரம் வேலைக்காரி இடுப்பில் தான் வாசம். அதனாலஎங்க பாஷையை விடஅவபாஷைதான் ஈசியாவந்தது,அவளைத்தான் ஆத்தாஎன்று அழைப்பேன்.

Friday, March 11, 2011

மலரும் நினைவுகள்.(2)



கல்யாணம் முடிந்து வருவதால் எக்கச்சக்க லக்கேஜ் இருந்தது.வெல்வெட்மெத்தை,தலகாணி போர்வைகள்மூட்டை, சீர்பாத்திர பண்டங்கள் ஒரு வண்டி,அதுபோக 5 பெரிய டின்களில் கல்யாண சீர் பட்சணங்கள்.ஆனை அடி முறுக்கு,அதிரசம், மனோகரம், லட்டு, மைசூர் பாகு என்று ஏகத்துக்கு.அந்தசாமான்களை வைக்கவே முதல் ரூம் கால்வைக்க இடமில்லாம நிரம்பிடுத்து.எனக்கும் 50 பவுனுக்கு நகை போட்டிருந்தார்கள். நானும் நகைக்கடைபொம்மை மாதிரி ஒரு ஓரமா நின்னுண்டு இருந்தேன்.




Tuesday, March 8, 2011

மலரும் நினைவுகள்.(1)



நான் திருமணம் முடிந்து பூனா வந்தது1960-ல். கிராமத்தில் எங்கவீடுரொம்பவும்
பெரிது. 7-மாடிகளுடன் விஸ்தாரமான வீடு. ஒரே தெருவில் சேர்ந்தாப்போல 4-வீடுகள் எங்களுக்கு உண்டு.அது தவிர கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தோம்.
குழந்தைகள் ஒரு டஜனுக்கு குறையாமல் இருப்பார்கள். பெரியவர்களும் அ ந்த
அளவுக்கு இருந்தார்கள்.அத்தை,சித்தப்பா, பெரியப்பா எல்லார் குழந்தைகளும்
ஒருதாய் வயிற்று பிள்ளைகளாகவே பழகுவோம்.வித்யாசமே கிடையாது.
அதற்குமேல சமையலுக்கு ரெண்டு வயதான மாமிகள்,வீட்டு வேலைகளுக்கு 3
வேலைக்காரிகள், குழந்தைகளை கவனிக்க ரெண்டு வேலைக்காரிகள் என்று 
வீடுநிறைய கல்யாண கல, கலப்புதான் எப்பவுமே.

Thursday, March 3, 2011

எது வெற்றி?.




எது வெற்றி?.






உலகம் திறமையைப்பார்த்து மதிப்பிடுவதில்லை. வெற்றியைத்தான் போற்றுகிறது.உள்ளுக்குள்ளே திறமைகளைப்போட்டுப்பூட்டி வைத்துக்கொண்டால் யாரும் வந்துநம்மைத்தட்டிக்கொடுத்து,சபாஷ் போட மாட்டார்கள். நாம் எடுத்துக்கொண்ட துறையில் போய்,அந்தத்துறையிலே வெற்றி எது என்பதைக்கண்டு அந்த வெற்றியைசாதித்துக்காட்டினால், புகழும், பணமும், பெயரும் பெருவது எளிது.

என்னை ஆதரிப்பவர்கள் . .