என்கல்யாணம் ஆகி பூனா வரும்போது என் அத்தைபையனையும்
கூட்டி வந்தேன். S. S. C.முடிச்சுட்டு வீட்ல சும்மதான் இருந்தான்.
அப்ப அவனுக்கு 15 வயசு இருக்கும். அத்தை அவனுக்கு பூனாவில்
ஏதாச்சும் வேலை வாங்கி கொடுக்கச்சொன்னா. அப்பலாம்11- தான்
S. S. C. படிச்சிருக்கானே தவிர இங்க்லீஷ்ல பேச,எழுத படிக்க
ரொம்பவே யோசிப்பான்.கிராமத்தில்படித்தால் இப்படித்தான் ஆகும்.
அதிலயும் அவன் ரொம்பவே கூச்ச சுபாவி, வெகுளி.
செல்லாத்தா,செல்ல மாரியாத்தா,எங்க சிந்தையில் வந்து
அறையில் நாடி நில்லாத்தா.கண்ணாத்தா,உனை காணாட்டா,இந்த ஜன்மம் எடுத்துஎன்ன பயனென்று சொல்லடி நீ ஆத்தா. (செல்லாத்தா)
ஆசைதீர உன் அழகைக் காட்டு மாரியாத்தா,அந்த பாசத்தோடு
வந்தேனடி தாயே மாரியாத்தா.பொன்னும் பொருளும் தந்தருள்வாய் கருமாரியாத்தா. எனைப்புகழோடு வைத்திடுவாய் அதி சக்தி மாதா.அ.......ம்.......மா, ..அ.....ம்.......மா.
தென்னமரத்தோப்பினிலே தேங்காயப்பரிச்சுக்கிட்டு தென்னமரத்தோப்பினிலே
தேங்காயப்பரிச்சுக்கிட்டுதேடிவந்து உந்தலையில் சின்னாத்தா, நாங்க......
நீ இளனீர எடுத்துக்கிட்டு, எங்க குறை கேட்டுக்கிட்டு, வளமான வாழ்வுகொடு
தாயே மாரியாத்தா. அயிரம் கண் உடையவளே செல்லாத்தா,மக்களை
ஆதரிக்கவேணுமடி செல்லாத்தா, நல்லவழிதனையே காட்டிடு மாரியாத்தா.
உந்தன் பெருமை இந்த ஜகத்துக்கு எடுத்து பாடாட்டா,இந்த ஜன்மம் எடுத்து
என்னப்யனென்று சொல்லடி நீஆத்தா.
திரிசூலமுடன் வீற்றிருக்கும்செல்லாத்தா, பாமாலை உனக்குப்பாடிடுவேன்
செல்லாத்தா.
எங்க பெண்ணின்கல்யாணம் ஒரு 25 வருடங்களுக்கு முன்பு
மும்பையில் நடந்தது. மும்பையில் ஒரு வழக்கம், திருமணம்
தாலிகட்டி முடிந்ததும்,தம்பதிகள், இருவ்ரின் பெற்றோர்களுடன்
மஹாலஷ்மி கோவில்போயி அம்மனின் ஆசிர்வாதம் வாங்கணும்.
அதன் படி, நாங்க 6 பேரும் ஒரு டாக்சி பிடித்து ம்ஹாலஷ்மி
கோவில் போனோம். கோவில் வாசலில் இறங்கினதும் ஒரு கும்பல்
சுற்றிவளைத்ததுஎங்களை. எல்லாரும் அலிகள். இங்கு அவர்களை
(சக்கா) என்கிரார்கள்.
வால்மீகி முனிவர் ராமாயணம் எழுதி முடித்தார்.உடனே அது ,யாருக்கு சொந்தம்
என்ற கேள்வி எழுந்தது. எங்களுடையது, உங்களுடையது, என்று தேவர், அசுரர்,
மானிடர் அடித்துக்கொண்டார்கள். கடைசியில் வழக்கைத் தீர்க்க சிவ பெருமானைக் கூப்பிட்டார்கள். அவர் பாகப்பிரிவினை செய்யலானார். கோடிஸ்லோகத்தில் தேவருக்கு33 லட்சம், அசுரருக்கு 33 லட்சம், மனிதருக்கு
33 லட்சம், பாக்கி ஒரு லட்சம், அதையும் மும்மூன்று கூறுகளிட்டுக் கொண்டே வரும்போது இறுதியாக ஒரு ஸ்லோகம் மிஞ்சிற்று. ஒருஸ்லோகத்திற்கு 32
எழுத்துக்கள். அதையும் 10, 10, ஆக பிரித்துக்கொடுத்தார். 2 எழுத்துக்கள் மிஞ்சின.ரா............ம.............. அவற்றை என்ன செய்வது? வழக்கைத்தீர்த்ததற்கு
ஊதியம் வேண்டாமா? எனக்கு என்று சொல்லி எடுத்துக்கொண்டார். கோடி
ஸ்லோகங்களின் சாரம் அந்த 2 எழுத்துக்களில் இருந்தது.
அவற்றைப்பெற்றதால், ஞானத்தில் எந்த தேவனோ, அசுரனோ, எந்த மனிதனோ சிவபெருமானுடன் போட்டியிட்டு ஜெயிக்க முடியாமல் போயிற்று.