Pages

Sunday, December 26, 2010

சைக்கோ

சைக்கோ

என்கல்யாணம் ஆகி பூனா வரும்போது என் அத்தைபையனையும்
கூட்டி வந்தேன். S. S. C.முடிச்சுட்டு வீட்ல சும்மதான் இருந்தான்.
அப்ப அவனுக்கு 15 வயசு இருக்கும். அத்தை அவனுக்கு பூனாவில்
ஏதாச்சும் வேலை வாங்கி கொடுக்கச்சொன்னா. அப்பலாம்11- தான்
S. S. C. படிச்சிருக்கானே தவிர இங்க்லீஷ்ல பேச,எழுத படிக்க
ரொம்பவே யோசிப்பான்.கிராமத்தில்படித்தால் இப்படித்தான் ஆகும்.
அதிலயும் அவன் ரொம்பவே கூச்ச சுபாவி, வெகுளி.

Friday, December 24, 2010

செல்லாத்தா.

Tuesday, December 21, 2010

                   செல்லாத்தா,செல்ல மாரியாத்தா,எங்க சிந்தையில் வந்து
அறையில் நாடி நில்லாத்தா.கண்ணாத்தா,உனை காணாட்டா,இந்த ஜன்மம் எடுத்துஎன்ன பயனென்று சொல்லடி நீ ஆத்தா. (செல்லாத்தா)
ஆசைதீர உன் அழகைக் காட்டு மாரியாத்தா,அந்த பாசத்தோடு
வந்தேனடி தாயே மாரியாத்தா.பொன்னும் பொருளும் தந்தருள்வாய் கருமாரியாத்தா. எனைப்புகழோடு வைத்திடுவாய் அதி சக்தி மாதா.அ.......ம்.......மா, ..அ.....ம்.......மா.
தென்னமரத்தோப்பினிலே தேங்காயப்பரிச்சுக்கிட்டு தென்னமரத்தோப்பினிலே
தேங்காயப்பரிச்சுக்கிட்டுதேடிவந்து உந்தலையில் சின்னாத்தா, நாங்க......
நீ இளனீர எடுத்துக்கிட்டு, எங்க குறை கேட்டுக்கிட்டு, வளமான வாழ்வுகொடு
தாயே மாரியாத்தா. அயிரம் கண் உடையவளே செல்லாத்தா,மக்களை
ஆதரிக்கவேணுமடி செல்லாத்தா, நல்லவழிதனையே காட்டிடு மாரியாத்தா.
உந்தன் பெருமை இந்த ஜகத்துக்கு எடுத்து பாடாட்டா,இந்த ஜன்மம் எடுத்து
என்னப்யனென்று சொல்லடி நீஆத்தா.
திரிசூலமுடன் வீற்றிருக்கும்செல்லாத்தா, பாமாலை உனக்குப்பாடிடுவேன்
செல்லாத்தா.

Thursday, December 16, 2010

நொறுக்ஸ்(1)

நொறுக்ஸ்.

போன பதிவுகொஞ்சம் சீரியுஸ்மேட்டரா ஆச்சு இல்லியா?அதனால இப்பகொஞ்சம்
நொறுக்குத்தீனி.(கொஞ்சம் மொக்கைதான்,பொருக்ஸ்)

முதல் மொக்கை 1
என் பெண் வயிற்றுப்பேரனும், பெண்ணும் அம்பர்னாத்ல என்னப்பாக்க
வந்தாங்க.எல்லாரும் பம்பாயில் வேர, வேர இடத்ல இருக்கோம்.
அப்போ பேரனுக்கு2 வயசு இருக்கும். விளையாட்டு பேச்சு சிரிப்பு
எல்லாம் முடிந்து பால்கனி ஜன்னல்ல அவனைஉக்கார வச்சு பருப்பு
சாதம் ஊட்டிண்டு இருந்தேன். ஃப்ளாட்சிஸ்டம்தான். நாங்க மூணாவ்து
மாடி. வெளில வேடிக்கை பாத்துண்டே சாப்பிட்டு இருhந்தான் பேரன்.
காம்பவுண்ட் சுவருக்கு அந்தப்புரம் ஒரு குப்பம், சேரி இருக்கும். அங்கு
விளையாடும் குழந்தை களைப்பாத்துண்டே இருந்த்வன் சடன்னா அம்மா
இங்க ஓடிவா, ஓடிவான்னு கத்தவும், பயந்துபோன என் பொண்ணு உள்ளேந்து
வேகமா ஓடிவந்தா. என்னடா,என்னாச்சு இப்படி கத்தராய்?என்றா.
அம்மா அங்க பாரேன் 4 எலிபண்ட்.2 வெள்ளை, 2 கருப்பு எலிபண்ட் இருக்கு
பாரு, பாட்டி பாருன்னு சொல்லவும், இங்க ஏதுடா யானை என்று நானும்
என்பெண்ணும் எட்டிப்பாத்தா,எங்களுக்கு அடக்கமாட்டாம சிரிப்பு பொத்துகிட்டு

Saturday, December 11, 2010

கல்யாண கலாட்டா.

                 எங்க பெண்ணின்கல்யாணம் ஒரு 25 வருடங்களுக்கு முன்பு
மும்பையில் நடந்தது. மும்பையில் ஒரு வழக்கம், திருமணம்
தாலிகட்டி முடிந்ததும்,தம்பதிகள், இருவ்ரின் பெற்றோர்களுடன்
மஹாலஷ்மி கோவில்போயி அம்மனின் ஆசிர்வாதம் வாங்கணும்.
அதன் படி, நாங்க 6 பேரும் ஒரு டாக்சி பிடித்து ம்ஹாலஷ்மி
கோவில் போனோம். கோவில் வாசலில் இறங்கினதும் ஒரு கும்பல்
சுற்றிவளைத்ததுஎங்களை. எல்லாரும் அலிகள். இங்கு அவர்களை
(சக்கா) என்கிரார்கள்.

Wednesday, December 8, 2010

கற்பூர நாயகியே கனகவல்லி.



கற்பூர நாயகியே கனக வல்லி, காளி மஹமாயி கருமாரியம்மா.

பொற்கோவில் கொண்ட சிவகாமி அம்மா,பூவிருந்hத வல்லி தெய்வ

யானை யம்மா.

விற்கோலவேதவல்லி விசாலாஷி, விழிக்கோல மாமதுரை மீனாஷி

சொற்கோவில நானமைத்தேன் இங்குதாயே.

சுடராக வாழவைப்பாய் என்னை நீயே (அம்மா)

புவனமுழுதும் ஆளுகின்ற புவனேஸ்வரி,புறமெரித்தோர் புரமெரிக்கும்

பரமேஸ்வரி. நவ நவமாய் வடிவாகும் நாகேஸ்வரி, ந்ம்பியவர் கை விள்க்கே

ஜோதீஸ்வரி. (அம்மா)



Saturday, December 4, 2010

பிடித்தபாடல்கள்.

                      

வாணி ஜெயராம் அவர்களின்

கவிதை கேளுங்கள் இதுவும் ஒருவகை ராகம்

(புன்னகைமன்னன்)




பி. சுசீலா அவர்களின்

தங்கத்திலேஒருகுறையிருந்தாலும்,தரத்தினில்குறைவதில்லை.

( பாகப்பிரிவினை)

எல்.ஆர் ஈஸ்வரி அவர்களின்

அடி என்னடி உலகம் இதிலே எத்தனை கலகம்.

(அவள் ஒரு தொடர்கதை)

கல்யானி மேனன் அவர்களின்

நீவருவாயென நான் இருந்தேன். ஏன்மறந்தாயென நான்அறியேன்.

என்னை ஆதரிப்பவர்கள் . .