Pages

Saturday, June 25, 2011

சிக்கனம்



தீபாவளிக்கு போனஸ் உண்டுதானே?ஏன் இல்லாம, வழக்கம் போல அதெல்லாம் உண்டு.ஏன் கேக்கரே? அதில்லே எல்லா வருஷமும் இங்க உள்ள ஒரே துணிக்கடையில்துனி எடுக்கரோம். அவன் என்ன விலை சொல்ரானோ அதுதான் விலை.எல்லாத்லயும் கூட்டி கூட்டி விலை சொல்லுவான்.இவன் கடையை விட்டாவேரகடையும் இங்க கிடையாது. எல்லாருமே இவன்கடையில் தான் துணிஎடுக்கரா இல்லியா. யூனிபார்ம் போல அனேகமா எல்லாருமே ஒரே டிசைனில்டிரஸ்போடுவோம். இந்த வாட்டி நாம் சிட்டில போயி துனி எடுக்கலாமே.

Tuesday, June 21, 2011

தனக்கொரு நீதி.

இந்த டீச்சர்கள் எல்லாம் என்னதான் வேலை ப்ண்ராங்களோ. ஒன்னாம் வகுப்பு
குழந்தைகளுக்கு எவ்வளவு ஹோம் ஒர்க் கொடுக்கரா.?குருவி தலெல பனங்காய்
 மாதிரி. வர, வர கேள்வி கேப்பாரே இல்லே.ஆனா அந்தப்பிஞ்சுகளுக்கு பாடம்
சொல்லிக்கொடுப்பதெல்லாம் அம்மாக்கள்தான்.

டீச்சருக்கு கொடுக்கர சம்பளமும் சலுகைகளும் சுத்த வேஸ்ட் தான். ஒரே
 வேளைதான் ஸ்கூலு, கை நிறைய சம்பளம்,சம்பளத்தோட ஒருமாச லீவு
வேர, இவ்வளவு சௌரியம் கிடைக்கரவா குழந்தைகளை கவனிச்சு பாடம்
சொல்லிக்கொடுக்கக்கூடாதோ? வருவா, போர்ட்ல பேருக்கு ஏதானும் கிறுக்கிட்டு பசங்களை காப்பி பண்ண சொல்லிட்டு அவங்க ஹாயா ஒரு
 நாவலோ, இல்லைனா ஏதானும் கை வேலைகளிலோ மூழ்கிடுவாங்க.
நம்ம காலத்திலயும் ஸ்கூல் போயிருக்கோம். இப்படியா? டீச்சர்னாலே
என்ன ஒரு மதிப்பு, மறியாதை பயம் எல்லாம் இருந்தது.அவங்களும் குழந்தை
களை கவனிச்சு பாடம் சொல்லிக்கொடுப்பாங்க.

வீட்ல சொல்லிக்கொடுத்தா பசங்க எங்க படிக்கராங்க?ஸ்கூல் அனுப்பினா நல்ல படிப்பு கிடைக்கும் அவங்க வயசொத்த குழந்தைகள்கூட பழக வாய்ப்பு
கிடைக்கும்,ஒருவரைப்பார்த்து ஒருவர் போட்டி போட்டு நல்ல படிப்பாங்கன்னுதானே ஸ்கூலுக்கே அனுப்பரோம். இதுக்கும் மேல பிரைவேட்
 டியூஷனுக்கு வேர அனுப்பவேண்டி இருக்கு.குழந்தைக எதிர்காலம் முக்கியம் இல்லியா? ஆரம்பத்திலேயே கோச்சிங்க் நல்லா இல்லைனா என்ன பண்ரது?

அன்று மரகதம் வீட்டில் கூடிப்பேசிக்கொண்டிருந்தவர்களின் காரசார உரை
 யாடல்தான் மேலே பார்த்தது.10-பேர்க சேர்ந்து மாதம் ஒரு தொகை சீட்டு
 போடுவாங்க. குலுக்கிப்போட்டு அந்தந்தமாசம் சீட்டு விழுந்தவங்க வீட்டில்
 எல்லாரும் கூடி இதுபோல ஏதானும் பேசிக்கொள்வார்கள். இன்று அவர்களின்
பேச்சில் பாவம் டீச்சர்கள் மாட்டிக்கொண்டார்கள்.அந்தமாதம் மரகத்துக்கு
 சீட்டு விழுந்தது. ஏக குஷியில் எல்லாருக்கும் ஸ்வீட், காரம், காஃபி கொடுத்து
 உபசரித்தாள் மரகதம்.

இப்படி மாதம் ஒரு மெம்பர்வீட்டில் கூடுவார்கள்.  பேசிமுடித்து காஃபி டிபன்
முடிந்து கலைந்து சென்றார்கள். அடுத்தமாதம் கல்யாணிக்கு சீட்டுப்பணம்
 குலுக்கலில் விழுந்தது. மறுபடியும் எல்லாரும் அவர்கள் வீட்டில் கூடி
 அரட்டையில். அன்றும் தொடராக டீச்சர்ஸ் பற்றிய பேச்சே ஆரம்பித்தார்கள்.
 உடனே மரகதம். என்ன நீங்கள்ளாம் ஒரு தலையாக டீச்சர்ஸ் மேலயே பழி
போடரிங்க. அவளும் மனுஷிதானே. ஒரு க்ளாஸ்ல புளிமூட்டை மாதிரி
 40, 50 குழந்தைகளைச்சேர்த்தா, அவதான் என்ன பண்ணுவா? ஒவ்வொருவரையும் தனிதனியா கவனிக்கவா முடியும். நம்மகாலத்ல எல்லாம் ஒருக்ளாஸ்ல மிஞ்சி, மிஞ்சி போனா 15, 20 குழந்தைகளுக்கு மேல
 இருக்கமாட்டா. ஒவ்வொரு குழதைகளையும் தனியா கவனிக்க முடியும்.


அதுதவிரஅன்னன்னிக்குஎன்னபாடம்நடத்தினா,என்னசொல்லிக்கொடுத்தான்னு
பிரின்சிக்கு நோட்ஸ் எழுதி சப்மிட் பண்ணனும். படம் வரைஞ்சு பாடங்களுக்கு
சார்ட் பேப்பர்லாம் ரெடிபண்ணனும், ஒருமாசம் லீவுலயும் அடுத்த வருஷத்தோட புதுஅட்மிஷனுக்கு எல்லாம் ரெடிபண்ணனும்னு அவாளுக்கும்
தலைக்குமேல வேலைகள் கொடுத்துடுவா.பரீட்சை சமயம் அந்த டீச்சர்கள்படும் அவதி சொல்லி முடியாது..பாவம் அவக்களைப்பற்றி வாய்க்கு
 வந்தபடி பேசாதீங்கன்னு பொரிந்து தள்ளி விட்டாள். மற்றவர்களுக்கோ ஒரே
ஆச்சரியம். என்னது இது,  நேத்துவரை டீச்சர்களை மட்டம்தட்டிண்டே இருந்தா
  இன்னிக்கு என்ன ஆச்சு? ஒரே அடியா அவங்களுக்கு சப்போர்ட்டா பேசரா?

இப்படி எல்லாரும் யோசித்துக்கொண்டிருக்கும் போது மரகதத்தின் பெரிய
 பெண் சுஜி ஒரு பெரிய சாக்லெட் டப்பாவுடன் அங்கு வந்து அனைவருக்கும்
 சாக்லெட் கொடுத்துவிட்டு ஆண்டி எனக்கு நம்ம ஸ்கூல்ல டீச்சர் வேலை கிடைச்சிருக்குன்னு சந்தோஷமாகச்சொல்லவும், எல்லார்முகங்களிலும்
 ஓ, அப்படியா விஷயம். அதான் மரகதம் டீச்சகளுக்கு சப்போர்ட்டா பேசராளா?
அப்போ சரிதான். என்று கலைந்து போனார்கள்.

Tuesday, June 14, 2011

சின்ன சின்ன ஆசை.



ஒரு குயர் ரூல்ட் பேபர், பார்க்கர், சியெல்லொ,ரேனொல்ட் என்றுவகைக்கு ஒரு
பேனா, ஃப்ளாஸ்க் நிறையா சூடாஸ்ட்ராங்கா காஃபி, கொறிப்பதற்கு கொஞ்சம்
கடலை, சாக்லெட் என்று டேபிள் பூராவும் பந்தாவாக பரப்பி வச்சுண்டு கூடவே
மாதாந்திர வாராந்திர தமிழ் பத்திரிக்ககளையும் எடுத்து வச்சுண்டு உக்காந்தேன்.நல்லா வசதியாக குஷன் சேரில் ஹாயாக சாய்ந்து உக்காந்துஐபாட்டையும்காதில் சொருகிண்டேன்.குன்னக்குடி, நாமகிரிபேட்டை,கத்ரி கோபால் நாத்காயத்ரி வீணை, மாண்டலின் சீனிவாஸ் எல்லாரையும் துணைக்கு வச்சுண்டேன்.
இது தவிர, ஹிந்தி ,தமிழ்,பாட்டுக்களையும் விட்டு வைக்கலை.

Tuesday, June 7, 2011

வலைச்சரம் ஆசிரியர்.

அன்பான நண்பர்களே இன்றுமுதல் என்னை வலைச்சர்த்தில் ஆசிரியராக
 நியமித்துள்ளார்கள்.எல்லாரும் அங்கும் வந்து கருத்துக்களைக்கூறி என்னை
உற்சாகப்படுத்தவும்.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_07.html

Sunday, June 5, 2011

சாப்பாடு



”ஒரு அவசரம் , அவசியம் என்றால் கூட அட்ஜஸ்ட் பண்ணிக்க மாட்டீங்களா?”

”எனக்கு வாய்க்கு ருசியா சமைச்சு போடுன்னு சொன்னா அது குத்தமா?”

”இன்னிக்கு எனக்கு சீக்கிரமா கிளம்பணும். அதுதான் சிம்பிளா பண்ணினேன்.”

“அவசரமென்றால் கொஞ்சம் சீக்கிரமா எழுந்து தயார் செய்துக்கணும். எதுக்கு

என்னை வாயைக்கட்டச்சொல்ரே?”

என்னை ஆதரிப்பவர்கள் . .