Pages

Friday, September 30, 2011

டீச்சர்

அன்று மரகதம் வீட்டில் மீட்டிங்க். 10- லேடீஸ் மாதம் ஒரு சிறு தொகையை சிட்பண்டுபோல போட்டு வருகிறார்கள். குலுக்கல் முறையில் ஆட்களைத்தேர்ந்தெடுத்து அவர்களுக்கு  சீட்டுத்தொகை வழங்கி வருவார்கள். அந்தமாதம்யாருக்கு சீட்டு விழுகிரதோ அவர்கள் வீட்டில் மற்ற மெம்பர்களும் ஒன்றுகூடி ஸ்வீட் காரம் காபி+ அரட்டையுடன் கலைந்து போவார்கள். ஏதானும் ஒரு விஷயத்தை எடுத்து கார சாரமாக விவாதமும் பண்ணூவார்கள். அன்று மரகதத்திறுகு சீட்டு விழுந்திருந்தது. எல்லாரும் அவர்கள் வீட்டில் கூடி ஸ்னாக்ஸ் சாப்பிட்டுவிவாதம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். அன்று அவர்கள் பேச்சில் மாட்டிக்கொண்டவர்கள் பள்ளிகளில் வேலை செய்யும் டீச்சர்கள்.

Wednesday, September 21, 2011

ஹாப்பி பர்த் டே.

மம்மி, ஹாப்பி பர்த்டே, அம்மா, மெனி மோர்ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆஃப்த டே,பிறந்த நாள் வாழ்த்துக்கள்மா. பெரிய பெண் பையன் கணவரின் வாழ்த்துக்கள் மனதுக்கு இதம்மாக இருந்தது. நன்றி சொல்லிட்டு வழக்கமான வீட்டு வேலைகளில் பிசியானா கல்பனா. பின்னாடியே வந்த பெண் ஏன்மம்மி புது சாரி எடுத்துக்கலே? பையன் ஏன் அம்மா ஸ்வீட் ஏதுமே பண்ணலே? கோவிலுக்கும் கூட வரமாட்டேங்கரேன்னு கணவர்  மூவரும் சேர்ந்து எங்க பர்த்டேன்னா க்ராண்டா கொண்டாடரோம் இல்லியா?  புதுசு போட்டுண்டு ஸ்வீட் சாப்பிட்டு சந்தோஷமா கொண்டாடரோம் இல்லியா? அட்லீஸ்ட் ஒரு பாயசம் கூட பண்ண மாட்ரே. ஏன் இப்படி பன்ரே மம்மின்னு துளைச்சு எடுத்துட்டா. கல்பனா பதில் ஏதுமே சொல்லாம வேலையைகவனித்தாள்.  அவள் எது சொன்னாலும் அவர்கள் அவளை ச்சரியாபுரிந்துகொள்ள மாட்டார்கள். கல்பனாவுக்கு என்று சில விஷயங்கள் மனசுக்குப்பிடிக்கும். ஆனா செயலபடுத்த முடியாத நிலை. சொன்னாலும் இவர்களின் கேலிப்பெச்சும் கிண்டலுக்கும் கேட்க வேண்டி வரும். அதனால் எதுமே பேசாமல் இருந்து விடுவாள்.

Monday, September 19, 2011

மெட்ராஸ், நல்ல மெட்ராஸ்(11)

ஆசிரமம் பேரு ஜனகல்யாண்.வய்தான முதியோர்களுக்காக நடத்தப்படும் முதியோர் இல்லம்.16, முதல் 20 முதியோர்கள் அங்கே இருந்தார்கள். அவர்களுக்கு உறைவிடம் உணவு, உடுக்க உடை, பாதுகாப்பு கொடுத்து நன்கு கவனித்துக்கொள்கிராரகள்.அமைதியான சூழ் நிலையில் நன்கு பராமரித்து வருகிரார்கள்.பொழுது போக்குக்கு நிறைய புஸ்தகங்கள் , டி. வி எல்லாம் இருக்கு.ஆசிரமத்தைகவனித்துக்கொள்ள பணியாளர்களும் இருக்காங்க. சமையலுக்கும் தனியா ஆட்கள் இருக்காங்க. ரொம்ப அமைதியான இடம். அங்குள்ளவர்களின் முகங்களிலும் நிம்மதியும் சாந்தமும் பாக்க முடிந்தது. எங்க ஊரில் இந்த முதியோர் இல்லம் எல்லாம் மிகப்புதிய விஷயங்கள்தான். கூட்டுக்குடும்பமுறை சிதைந்துபோனதால் வந்த விளைவுதான் வேர என்ன சொல்ல. ஆண்டவன்படைப்பில் என்னல்லாம் ஏற்றத்தாழ்வுகள்.ஒருகாலத்தில் லட்சாதி பதியாக இருந்தவால்லாம் இன்று பிட்சாதி பதிகளா இருக்காங்க. அவர்களுக்கு தகுந்த வைத்திய வசதிகளும் செய்து கொடுக்கராங்க.

Friday, September 16, 2011

மெட்ராஸ், நல்ல மெட்ராஸ்(10)

 மறு நாள் ஆடி மாசப்பிறப்பு.எங்க ஊரிலிருந்து சுமார் 10-கிலோ மீட்டர்தூரத்தில் பாவனாசம் என்னும் புண்ணிய ஷேத்திரம் இருந்தது, அங்குபோய் குளித்து ஸ்வாமிதரிசனம் செய்தால் நாம் பண்ணிய பாவங்கள் எல்லாம் விலகி விடும்னு ஒரு நம்பிக்கை எல்லாருக்கும் உண்டு.காலை 6-மணிக்கு கால் டாக்சி கூப்பிட்டு நாங்க 4-பேரும் பாவனாசம் கிளம்பினோம். வழக்கம்போல சுகமான காலைப்பயணம். 15- நிமிஷத்தில் பாவனாசம் போய்ச்சேர்ந்தோம். அன்று ஆடி மாசப்பிறப்பென்று கொஞ்சம் நிரைய கூட்டம் இருந்தது. 30, 40 படிகள் கீழே இறங்கி ஆத்தங்கரை போக வேண்டி இருந்தது. ஆனா இங்கே படிகள் சரியான வரிசையில் இருந்ததால் ஈசியா இறங்கினோம். ஆறு நிற்ம்பி தண்ணீர் நிறைய சல சலன்னு ஓடிக்கொண்டிருந்தது. சுகமா சாரலும் கூட இருந்தது. தண்ணீரைப்பார்த்ததுமே நீச்சல் அடிக்கதான் தோனிச்சு. தண்ணீரில் காலைவைத்தது, ஐஸ்போல ஜில்லுனு இருந்தது. அதுக்கும் மேல கருப்பு கருப்பா பெரிசு பெரிசா மீன்களின்கூட்டம் இருந்தது,  அந்த பெரிய மீன்களைப்பார்த்ததும் தண்ணீரில் இறங்க வே பயம்மா இருந்தது. அத்தை மேலே போயி ஒருகடையில் இருந்து ரெண்டு பாக்கெட்பொரிகடலைவாங்கி வந்து ஆற்றின் நடுப்பகுதிதண்ணிரில்வீசிப்போட்டா.எல்லாமீனும் அந்த்ப்பக்கம் ஓடிப்போச்சு.அப்புரமா நாங்க் தண்ணீரில் இறங்கிஆசை தீர நீச்சல் அடித்து நிறையமுங்கி நன்றாககுளித்தோம். கரை ஏறவேமனசில்லாம ஏறிப்போயி ட்ரெஸ் மாத்திண்டு கோவில் போனோம். பாவனாசர்சாமி. பட்டரிடம் இந்தசாமி சிவந்தானேன்னு கேட்டோம்.இது கைலாச லிங்கம்,கல்யாண லிங்க்ம்,பரஞ்ஞோதி லிங்கம் மூனும் சேர்ந்து இங்க பாவனாசலிங்கமா தரிசனம் தரார்னு சொன்னார் உலகம்மன் சன்னிதிபாலசுப்ரமன்யர் சன்னதி வினாயகர்சன்ந்தி எல்லாம் போய் கண்குளிர தரிசன்ம் செய்தோம். இந்தக்கோவிலும் நல்ல பெரிசா இருக்கு. நல்லபராம்ரிக்கராங்க. சுத்தமாகவும் இருக்கு.

Monday, September 12, 2011

மெட்ராஸ், நல்ல மெட்ராஸ் (9)

துணீ துவைத்து குளிச்சு ஈரத்துணியுடனே வீடு வந்தோம். வரும் வழியில் வாய்க்காலில் தளும்பி ஓடும் தண்ணீரைப்பார்த்ததும் இங்கியே குளிச்சிருந்தா நிறைய முங்கி நீச்சலும் அடிச்சிருக்கலாமேன்னு தோனித்து.வீடு வரும் வழியிலேயே அத்தை என்னிடம் இங்க வந்தும் நீ காலை பிஸ்கெட் தான் வேனும்னுலாம் முரண்டு பண்ணக்கூடாது. அவா என்னதராளோ அதை சாப்பிடனும்னு மிரட்டலா சொல்லி கூட்டிண்டு வந்தா. நானும் பூம், பூம் மாடு போல தலையை ஆட்டிண்டு கேட்டுண்டேன் வேர வழி.எலாருக்கும் சுட சுட முறுகலாக கல் தோசை சூடாக வார்த்துப்போட்டா. தொட்டுக்க சாம்பார் ,சட்னி எல்லாம் பண்ணி இருந்தா. எனக்கு இப்படி காலேல சாம்பார்சட்னிலாம் சாப்பிட்டா ஹெவி ஆயிடும். நான் மட்டும் பொடி எண்ணை போட்டுண்டேன். எள்ளுமணக்க மிளகா பொடியும் செக்குலேந்து ஆட்டிவந்த நல்லெண்ணையும் அத்தனை ருசியா இருந்தது. இதுதான் கிரமத்து அசல்மணம் கூடவே திக்காக பில்டர்காபியும் தந்தா. ரெண்டு தோசை சாப்பிட்டதுமே வயிறு ஃபுல். சாப்பிட்டு அவசரமாக பெரியஹாலில் போயி ஊஞ்சலில் உக்காந்தேன். அப்பாடா வீசி வீசி ஆடினேன். கூடவே ஒருமாமியும் வெந்து உக்காந்தா. என்ன ஆனந்த அனுபவம் தெரியுமா. நேத்து நைட்டே ஒருமணி நேரம்தானே தூங்க கிடைச்சது ஊஞ்சல்லயே படுத்துட்டேன். சுகமா தூக்கம்வந்தது. எங்க தூங்க விட்டா.?

Friday, September 9, 2011

மெட்ராஸ், நல்ல மெட்ராஸ் ( 8)








அந்த ஹாலின் நடுவில் பெரிய மர ஊஞ்சல் என்னை வாவ்வான்னு கூப்பிட்டுது. தரைபூரா க்ரேனைட் பதிச்சு பள பளன்னு இருந்துச்சு. ஒரு பெரிய கல்யாணமே நடத்தலாம் போல அவ்வளவு பெரிய ஹால். ஒருபுறம், ஹோம் தியேட்டர் சுற்றி நிறய சோபா செட்ஸ், இன்னொரு புறம்  விஸ்தாரமாக பூஜாரூம். அங்கு இல்லாத சாமி படங்களே இல்லை. எல்லா படங்களையும் பள, பளன்னு துடைத்து வைத்து சந்தன குங்குமம் வைத்து மலர் மாலைகளால் அழகு படுத்தி இருந்தர்கள். தசாங்க மணமும் ஊதுபத்திமணமும் கமழ பூஜா ரூம் தெய்வீக மா இருந்தது. இன்னொரு புறமாக விருந்தினருக்காக ரெண்டு தனித், தனி ரூம்கள் நல்ல பெரிசா கட்டில் மெத்தை அட்டாச் பாத்துடன் அமர்க்களமாக இருந்தது. ஊஞ்சலை வீசி வீசி ஆட தாராளமாக இடமும் இருந்தது. ஒவ்வொரு அழகையும் கண்ணுக்குள் சிறை பிடித்தவாரே மெதுவாக நடந்துபோனேன். அத்தை, இதோ பாரு நேரா போயி ஊஞ்சல்ல உக்காராதே. அப்புரம் உன்னை அங்கேந்து எழுப்பவே முடியாதுன்னு மிரட்டியவாரே உள்ளே டைனிங்க் ஹால் கூட்டினு(கர, கரன்னு இழுத்துண்டு)போயிட்டா.ஒரே நேரத்ல 50 பேருக்கு இலை போட்டு பந்தி பரிமாறலாம்போல அவ்வளவு விஸ்தாரமான டைனிங்க் ஹால் இந்தக்காலத்துக்கு ஏத்தமாதிரி நடுவில் பெரிய டைனிங்க் டேபிலும் சேர்களும் கூட இருந்தது. மணக்க மணக்க பில்டர் காபி உபசாரம்பண்ணினா. அப்போ காலை 6.30 மணி தான் ஆகி யிருந்தது. அவர்கல் வீட்டிலும் பெரியவர்கள் சிறியவர்கள் என்று 6- பேர் இருந்தா, நாங்க 4 பேரு செந்தா மொத்தமா 10 பேரு இருந்தோம்.

Wednesday, September 7, 2011

மெட்ராஸ், நல்ல மெட்ராஸ் (7)

திரு நெல் வேலி ஸ்டேஷன் அப்பல்லாம் ரொம்ப சாதாரணமா ஐயோ பாவமா
 இருக்கும். இப்ப  நல்லா பள, பளப்பா இருக்கு. டைல்ஸ்பதித்ததரை, எல்லா இடத்துலயும் மின்விளக்குகள். என்று அமர்க்களமா இருந்தது.எனக்கு திருன
வேலி டு கல்லிடை, பாசஞ்சர் வண்டியில் போகனும்போல இருந்தது.(ஹி,ஹி)
அப்போல்லாம் செங்கோட்டை பாசஞ்சர்னு ஒரு பாசஞ்சர் கல்லிடை வழியா
தான் போகும். அதில் பயணம் செய்வது தனி சுகம். அதில் கரி எஞ்சின்தான்
 இருக்கும். சீட் எல்லாம் மர பெஞ்ச்தான் ஜன்னலில் குறுக்கு கம்பிகளே இருக்
காது. தலையை முழுசா வெளில நீட்டி வேடிக்கை பார்க்கமுடியும். அப்போ இஞ்சின்லேந்து வர கரிப்புகை தலைபூராவும் அப்பிக்கொள்ளும் அதுமட்டுமில்லே, வேடிக்கை பார்க்கும் எல்லார்கண்களிலும் கரிப்பொடி
 விழுந்து எல்லார் கல்களுமே மிளகாய்ப்பழ சிவப்பாக இருக்கும். ஆனாலும்
 கண்ணை கசக்கிண்டே வேடிக்கை பார்ப்போம்.

Friday, September 2, 2011

மெட்ராஸ், நல்ல மெட்ராஸ் (6)

காத்து இப்படி அடிச்சா தூக்கமா வருதேன்னு ஜன்னல் கண்ணாடியை
போட்டேன்.வண்டிக்குள்ள ஒரே அமைதி. ரொம்ப நேரமா காதுல ஹெட்
 போன் போட்டுண்டு பாட்டுக்கேட்டா காது வலிக்கும். அதனால அதையும்
 எடுத்துட்டேன். ஜன்னலை சாத்தினா இறுக்கமா புழுக்கமா இருந்தது. அது
 சரிப்படலே. திரும்ப ஜன்னலை திறந்து வச்சேன். பாத் ரூம் போயி குளிர்ந்த தண்ணி ஊத்திண்டு முகத்தை நல்லா அலம்பிண்டு வந்து உக்காந்தேன்.
 அப்போ கொஞ்சம் தூக்கத்தை தடுக்க முடிந்தது. சின்ன டார்ச் கையில்
 வச்சிருந்தேன். அதை வச்சுண்டு புக் படிச்சுண்டு கொஞ்ச நேரம் ஓட்டினென்.
 அந்தகம்மி லைட்டுல சரியா படிக்க முடியல்லே கண்ணெல்லாம் வலிச்சது
 தான் மிச்சம். அரை மணி நேரம்தான் படிக்க முடிஞ்சது. இப்ப பாத்து டைம்
 ரொம்ப மெதுவா போரதுபோலவே இருந்தது.திரும்பவும் போயி முகத்துல
 தண்ணி ஊத்திகிட்டு வந்தேன். வெளில பூரா ஒரே இருட்டு.என்ன பண்ணலாம்னு ஒரே யோசனை.  மதுரை வரும்போது தூங்கிட்டா கஷ்ட்டம்
ஆச்சேன்னு முழிச்சுகிட்டு இருக்க ரொம்பவே முயற்சி செய்ய வேண்டி
 இருந்தது . தூங்கிட்டேன்னா மிடில்ல எழுந்துக்கவே மாட்டேன் டீப் ஸ்லீப்தான்
 மொபைலி அலாரம் வச்சுக்கலாம்னு நினைச்சேன். அது அடிக்கிர சத்ததில்
 என்னைத்தவிர மத்தவங்கல்லாம் தான் எழ்ந்துப்பாங்க.   நான் இல்லே. ஹா  ஹா.

என்னை ஆதரிப்பவர்கள் . .