மறு நாள் ஆடி மாசப்பிறப்பு.எங்க ஊரிலிருந்து சுமார் 10-கிலோ மீட்டர்தூரத்தில் பாவனாசம் என்னும் புண்ணிய ஷேத்திரம் இருந்தது, அங்குபோய் குளித்து ஸ்வாமிதரிசனம் செய்தால் நாம் பண்ணிய பாவங்கள் எல்லாம் விலகி விடும்னு ஒரு நம்பிக்கை எல்லாருக்கும் உண்டு.காலை 6-மணிக்கு கால் டாக்சி கூப்பிட்டு நாங்க 4-பேரும் பாவனாசம் கிளம்பினோம். வழக்கம்போல சுகமான காலைப்பயணம். 15- நிமிஷத்தில் பாவனாசம் போய்ச்சேர்ந்தோம். அன்று ஆடி மாசப்பிறப்பென்று கொஞ்சம் நிரைய கூட்டம் இருந்தது. 30, 40 படிகள் கீழே இறங்கி ஆத்தங்கரை போக வேண்டி இருந்தது. ஆனா இங்கே படிகள் சரியான வரிசையில் இருந்ததால் ஈசியா இறங்கினோம். ஆறு நிற்ம்பி தண்ணீர் நிறைய சல சலன்னு ஓடிக்கொண்டிருந்தது. சுகமா சாரலும் கூட இருந்தது. தண்ணீரைப்பார்த்ததுமே நீச்சல் அடிக்கதான் தோனிச்சு. தண்ணீரில் காலைவைத்தது, ஐஸ்போல ஜில்லுனு இருந்தது. அதுக்கும் மேல கருப்பு கருப்பா பெரிசு பெரிசா மீன்களின்கூட்டம் இருந்தது, அந்த பெரிய மீன்களைப்பார்த்ததும் தண்ணீரில் இறங்க வே பயம்மா இருந்தது. அத்தை மேலே போயி ஒருகடையில் இருந்து ரெண்டு பாக்கெட்பொரிகடலைவாங்கி வந்து ஆற்றின் நடுப்பகுதிதண்ணிரில்வீசிப்போட்டா.எல்லாமீனும் அந்த்ப்பக்கம் ஓடிப்போச்சு.அப்புரமா நாங்க் தண்ணீரில் இறங்கிஆசை தீர நீச்சல் அடித்து நிறையமுங்கி நன்றாககுளித்தோம். கரை ஏறவேமனசில்லாம ஏறிப்போயி ட்ரெஸ் மாத்திண்டு கோவில் போனோம். பாவனாசர்சாமி. பட்டரிடம் இந்தசாமி சிவந்தானேன்னு கேட்டோம்.இது கைலாச லிங்கம்,கல்யாண லிங்க்ம்,பரஞ்ஞோதி லிங்கம் மூனும் சேர்ந்து இங்க பாவனாசலிங்கமா தரிசனம் தரார்னு சொன்னார் உலகம்மன் சன்னிதிபாலசுப்ரமன்யர் சன்னதி வினாயகர்சன்ந்தி எல்லாம் போய் கண்குளிர தரிசன்ம் செய்தோம். இந்தக்கோவிலும் நல்ல பெரிசா இருக்கு. நல்லபராம்ரிக்கராங்க. சுத்தமாகவும் இருக்கு.