Pages

Monday, October 29, 2012

கோஸ் சட்னி

முட்டைகோசில் பொரியல் கூட்டுவகைகள் தானே செய்வார்கள்.
 நான் கொஞ்சம் வித்யாசமா சட்னி செய்தேன். நல்லா வந்தது.
 தேவையான பொருட்கள்
                                   
கோஸ்---------   கால் கிலோ
சிவப்பு மிள்கா வத்தல்--------  4
 உளுத்தம்பருப்பு---------   2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம்----------------  சிறிதளவு
 உப்பு--------------    தேவையான அளவு
புளி----------  ஒரு கோலி குண்டு அளவு
 எண்ணை------------  ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு-----------  ஒரு ஸ்பூன்
                                 

செய்முறை
 கடாயில் எண்ணை ஊற்றி உளுந்து மிள்காய் போட்டு சிவந்ததும் பொடியாக அரிந்து வைத்திருக்கும் கோசையும் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும். நன்கு ஆறியதும் உப்பு புளி சேர்த்து நைசாக அரைக்கவும் கடுகு பெருங்காயம் தாளிக்கவும். தோசை இட்லி சப்பாத்தி எல்லாவற்றுடனும் நன்றாக ஜோடி சேரும்.
                                         
                                         

Monday, October 22, 2012

எலுமிச்சம்பழ ரசம்

தேவையான பொருட்கள்
                                         
எலுமிச்சம்பழம் -----------------------  2
தக்காளிப்பழங்கள்--------------------   2
பச்சை மிளகாய்-----------------------   4
இஞ்சி-------------------------------------  ஒரு சிறியதுண்டு
துவரம்பருப்பு-------------------------- ஒரு கப்
மஞ்சபொடி------------------------   அரை ஸ்பூன்
பெருங்காயப்பொடி----------------  ஒரு ஸ்பூன்
உப்பு ----------------------------------   தேவையான அளவு
கொத்துமல்லி தழை------------   ஒரு கைப்பிடி
கடுகு---------------------------------  ஒரு ஸ்பூன்
ஜீரகம் -----------------------------  ஒரு ஸ்பூன்
 நெய்------------------------------  2 ஸ்பூன்
                                     
செய்முறை
துவரம்பருப்ப  குக்கரில் குழைய வேகவிடவும்
கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு ஜீரகம் போட்டு பொரிந்ததும் கீறி வைத்திருக்கும் மிளகா இஞ்சி சேர்க்கவும் சிவந்ததும் கட் செய்து வைத்திருக்கும் தக்காளி களச்சேர்க்கவும்.மேலாக மஞ்சபொடி பெருங்காயப்பொடி உப்பு சேர்த்து சுருள கிளறி வெந்ததும் வெந்து வைத்திருக்கும் துவரம் பருப்பைச்சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்கவிட்டு
                                             
நுரைத்து வந்ததும் கீழே இறக்கி கொத்துமல்லித்தழை தூவி எலுமிச்சம் பழங்களை மேலாக பிழியவும்.
                                         
                                     

Wednesday, October 10, 2012

வாழக்காய்ப்பொடிமாஸ்

தேவையான பொருட்கள்

நாட்டு வாழைக்காய்கள்.-------------  2
துருவிய தேங்காய்ப்பூ---------------   ஒரு கப்
பச்சை மிளகாய்-----------------------   2
தேங்கா எண்ணை------------------   2 ஸ்பூன்
கடுகு------------------------------------   1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு------------------    1 ஸ்பூன்
பெருங்காயப்பொடி-----------  சிறிதளவு
கரிவேப்பிலை---------------   சிறிதளவு
 உப்பு---------------------- தேவையான அளவுக்கு
 செய்முறை
                         
 வாழைக்காய்களை இரண்டாக வெட்டி வேக விடவும்
தோல் கறுத்து நிறம் மாறியதும் எடுத்துதண்ணீரை
                                     
வடியவிடவும். உள்ளே பதமாக வெந்திருக்கும். தோலை
நீக்கி கேரட் சீவியில் மிருதுவாக துருவிக்கொள்ளவும்
                                       
கடாயில் எண்ணை ஊற்றி கடுகுபோட்டு பொரிந்ததும்
பருப்பு மிளகாய் கருவேப்பிலை பெரிங்காயப்பொடி சேர்ந்து
                                       
சிவந்ததும் துருவி வைத்திருக்கும் வாழைக்காய்களை
சேர்த்து 5 நிமிடங்களுக்கு கிளறிவிடவும்.கீழே இறக்கி
 தேங்காய்த்துருவல் தூவி அலங்கரிக்கவும்.
                               
நீக்கிய தோலைக்கூட தூக்கி எறியாமல் சின்னதாக கட்
சேய்து பொரியல் பண்ணிடலாம்.அதுவும் நல்லா இருக்கும்

Monday, October 8, 2012

கோவக்காய் சாதம்

தேவையான பொருட்கள்
 அரிசி-------------  கால் கிலோ
 கோவைக்காய்-----------    15
 மஞ்சபொடி---------------  அரை ஸ்பூன்
வறுத்து பொடித்த எள்ளுபொடி---- 2 ஸ்பூன்
தனியா பொடி------------- ஒருஸ்பூன்
கரம் மசால பொடி---------  ஒரு ஸ்பூன்
 காரப்பொடி-------------   ஒருஸ்பூன்
பெருங்காயப்பொடி-------- சிறிதளவு
 உப்பு------------ தேவையான அளவு
 எண்ணை------- 3 டேபிள் ஸ்பூன்
 நெய்------------   ஒரு ஸ்பூன்
கொத்துமல்லித்தழை----- ஒரு சிறு கட்டி
                   
செய்முறை
அரிசியை நன்கு கழுவி வடியவைக்கவும்.
 பொடிவகைகளை ஒரு ஸ்பூன் எண்ணை
ஊற்றி பேஸ்ட் போல கலந்து கொள்ளவும்.
கோவைக்காயை கழுவி  மேல்புறமும் கீழ்
                       
புறமும் காம்பு நீக்கி மேல்புறம் பாதியாகவும்
 கீழ்புறம் பாதியாகவும் கீறிக்கொள்ளவும்
 அதாவது + போல கீறிக்கள்ளவும். கலந்து
 வத்திருக்கும் பேஸ்ட்டை காய்களுக்குள்
சமமாக அடைக்கவும். பிரஷர் பேனில் எண்ணை
                                                       
 ஊற்றி ஜீரகம் தாளிது அரிசியைப்போட்டு 5 நிமி
டங்களுக்கு வறுக்கவும் .ஈரப்பதம் போனதும்
 ஸ்டப் செய்து வத்திருக்கும் காய்களையும்
                                                             
சேர்த்து கலந்து ஒன்றுக்கு இரண்டு பங்கு தண்ணீர்
 ஊற்றி 3 விசில் வரும் வரை வேக விடவும்.ஆறிய
பிறகு மேலாக ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி கொத்தமல்லி
 தழைகள் தூவி அலங்கரிக்கவும்.
                                

Friday, October 5, 2012

பொரிச்ச குழம்பு

தேவையான பொருட்கள்.
பயத்தம் பருப்பு------------   100 கிராம்
வாழைக்காய்---------------  2
முருங்கைக்காய்---------- 2
புடலங்காய்---------------- சிறிய துண்டு
 சேனைக்கிழங்கு--------  சிறிய துண்டு
கேரட்----------------------   1
கத்தரிக்காய்-------------  2
பூசனிக்காய்------------ ஒரு பெரிய துண்டு
சாம்பக்காய்----------- ஒரு பெரிய துண்டு
பீன்ஸ் ----------------   15
                               

அரைக்க
 துருவிய தேங்காய்--------- ஒரு மூடி
மிளகு--------------------------  ஒரு ஸ்பூன்
 ஜீரகம் ---------------------- ஒரு ஸ்பூன்
 காய்ந்த மிளகா வத்தல்-------   2
தாளிக்க
 கடுகு-----------  ஒரு ஸ்பூன்
 உளுத்தம் பருப்பு----   ஒரு ஸ்பூன்
 காய்ந்த மிள்காவத்தல் ------ ஒன்று
 கருவேப்பிலை-------- ஒரு ஆர்க்
 தேங்கா எண்ணை------- ஒரு டேபிள் ஸ்பூன்
 உப்பு தேவையான அளவு
மஞ்சப்பொடி------ ஒருஸ்பூன்
                                 
செய் முறை
 காய்களை நன்கு கழுவி கொஞ்சம் பெரிய துண்டங்களாக நறுக்கி கொள்ளவும் பிரஷர் பேனில் காய் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மஞ்ச்ப்பொடிபயத்தம்பருப்பு சேர்த்து 3 விசில் வரும் வரை வேக விடவும். முருங்கைக்காயை தனியாக வேக வைத்து சேர்க்கவும் காய்களுடன் சேர்த்து வேக விட வேண்டாம். அரைக்க
                                 
கொடுதிருக்கும் பொருட்களை மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். காய்கள்
                                 
வெந்ததும் உப்பும் சேர்த்து அரைத்த விழுதையும் சேர்த்து 5 நிமிடங்களுக்கு
                           
கொதிக்க விட்டு இறக்கவும். தாளிக்க கொடுத்திருக்கும் பொருட்களை தேங்கா எண்ணையில் மெலாக தாளித்து சேர்க்கவும்
                             
                               

Tuesday, October 2, 2012

அஞ்சலி


ஒரு நல்ல மனிதரின் நினைவுகள். இன்று அக்டோபர் 2...  13-வருடம் முன்பு அவர் இந்த தேதியில் தான் காலமானார். பார்க்கும் அனைவரிடமும் அன்புமட்டுமே காட்டத்தெரிந்தவர். வீட்டுக்கு ஒரே பிள்ளயாக பிறந்ததால் அனைவருடனும் சகோதரபாச்த்துடனே பழகுவார்.யாருக்கு எந்த உதவி தேவைன்னாலும் முதல் ஆளாக போய் உதவுவார். சரியான வயதில் திருமணம் குழந்தைகள் என்று நடந்தது. கடவுள் பக்தியில் கன்மூடித்தனமானபக்தி உள்ளவர்.கோவிலில் ஸ்வாமி ஊர்வலம் இருந்தால்  ஸ்வாமிக்கு அல்ங்காரம் எல்லாம் சிறப்பாகப்பண்ணுவார். வீட்டிலும் ஒரு பண்டிகையும் பண்ணாமல் இருந்ததில்லை பூஜை புனஸ்காரம் எல்லாம் முறையாகப்பண்ணிவருவார்.தாராளமாககுழந்தைச்செல்வங்களும்பிறந்தார்கள்.
குழந்தைகளைச்சிறந்தமுறையில் வளர்த்து நன்கு படிப்பு வேலை திருமணம் என்று தன்கடமைகளைமிகச்சிறப்பாகவே செய்து முடித்தார்.செண்ட்ரல் கவர் மெண்ட் உத்யோகத்தில் இருந்ததால் ஊர் ஊராக மாறி, மாறிபோகவேண்டி இருந்தது.எல்லா இடங்களிலுமே அவருக்கு மிக நல்ல பெயர் கிடைத்தது.

என்னை ஆதரிப்பவர்கள் . .