வாரா வாரம் சண்டே சண்டே வெளில கூட்டிண்டு போரா. அங்கு பாக்கவேண்டிய இடங்களுக்கு போய் வருகிரோம். வெளி நாட்டுக்கோ வெளி மானிலங்களுக்கோ பயணம் போனா அங்குள்ள சீதோஷ்ண நில, மக்களின் கலா சாரம் உணவு உடை, பேசும் பாஷை,கரன்சி என்று சொல்லும்போது தானே சுற்றுலா பயணம் பயனுள்ளதாக ஆகிரது. வேறு யாரானும் அதுபோல நாடுகளுக்குப்போகும் போது இதில் நாம் பகிரும் தகவல்கள் அவர்களுக்கு பயன்படுமே. அதுதானே பயனத்தின் நோக்கமும். வாரம் எல்லா நாட்களும் எனக்கு செமை போர் ஆகும். ஒரு வேலையும் செய்ய விடமாட்டா பொண்ணு. காலை ஒருமணி நேரம் ஹெல்த் கேர் , வாக், எக்சர் சைஸ் மட்டும்தான் உருப்படியா செய்துண்டு இருக்கேன். சாப்பிட்டு சாப்பிட்டு இப்படி பூரா நாளும் ரெஸ்ட்லேயே இருப்பது செமை போர். கொண்டு போன புக்கெல்லாம் படிச்சு முடிச்சாச்சு. டி. வி, யிலும் பாக்கும்படி ஏதும் இல்லை.வெளில எவ்வளவு நேரம் வேடிக்கை பாக்க? சாமி ரூமில் ஒரு பகவத்கீதை விளக்க உறைன்னு