Pages

Monday, December 31, 2012

சிங்கப்பூர் 13

இன்று கிளம்புரேன். ஸோ சாங்கி ஏர் போர்ட் பத்திதான் இன்றைய பதிவு.
வீட்டை பூட்டிண்டு வராண்டாவில் இறங்கியதும் பூத்தொட்டியில் ரொம்ப
  குட்டியாக ஒரு பைனாப்பிள் காய்த்திருந்தது. பெரிய பைனாப்பிளே பாத்திருக்கோம் இல்லியா இந்த குட்டிபாக்கவே க்யூட்டா இருந்தது.  ஸ்டேஷனில் ஒரு ரெஸ்டாரெண்டில் ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிட போனோம்.
                 
பிரெட்டே மெல்லிசாதான் இருக்கும். அதையும் நடுவில் கீறி இன்னும் மெல்லிசாக்கி நடுவில் வெண்ணை ஜீனி தடவி  டோஸ்ட் பண்ணி தராங்க. ரொம்ப சுவையா இருந்தது. காபி கடுங்காப்பி போல கருப்பா தராங்க. காபி டேஸ்ட் தான் வந்தது. பால் குறைச்சலா சேர்க்கராங்க.
சாங்கி ஏர்போர்ட் பத்தி சொல்லிண்டே இருக்கலாம் அவ்வளவு விஷயம்.
அது ஒரு ப்ரும்மாண்ட தனி உலகம்தான். பார்க்க பார்க்க பிரமிப்பா இருக்கு ஒவ்வொரு இடமும்.முதல்ல லக்கேஜ் எல்லாம் செக்கின்ல போட்டுட்டு
 சாப்பிட போனோம். ஆனந்தபவன்ரெஸ்டாரெண்ட் இங்கே ஒரு பிராஞ்ச்
                     
           
 திறந்திருக்காங்க. ரொம்ப நல்லா இருக்கு. நல்ல சாப்பாடு கிடைத்தது.
 பிறகு  எஸ்கலேட்டரில் முதல் மாடிக்கு போனோம். மாடிக்கு போக படிக்
கட்டு எஸ்கலேட்டர் போல நடந்து போகவும் தரையே நகந்து போவதுபோல
எஸ்கலேட்டரும் இருக்கு. நாம வெரும்ன நின்னாலே போதும் போக
                     
வேண்டிய இடத்துக்கு போயிட முடிகிரது நடக்க முடியாதவங்களுக்கு இது ரொம்ப வசதியா இருக்கு. மாடியில் கைனடிக் ரெயின்னு ஒன்னு வச்சிருக்கா.
 பாக்க பாக்க அவ்வளவு அழகு. மழைதுளிகள் போல கோல்டன்கலரில் டியூ
                       
 மேலயும் கீழயுமா போயிட்டு போயிட்டு வந்துண்டே இருக்கு.இஙயும் குழந்தைகளுக்கு நிறையா விளையாட்டு மையங்கள் இருக்கு. ஷாப்பிங்க் மால் போல திரும்பின பக்கமெல்லாம் டியூட்டிஃப்ரீஷாப்ஸ்தான்.
                         
டெரசில் சன்ஃப்ளவர் கார்டன் இருக்கு. பூரா பூர சன்ஃப்ளவர்பூக்கள்தான்.
                         
                   
பக்கத்துக்கு பக்கம் டி. வி. கம்ப்யூட்டர் எல்லாமே ஓடிண்டு இருக்கு யாரு
வேனாலும் எத வேனாலும் யூஸ் பண்ணிக்கலாம்.இங்கயும் கிறிஸ்மஸ்
                           
அலங்கரங்கள் திரும்பின பக்கமெல்லாம் இருக்கு.ஸ்கை ட்ரெயின்ன்னு
                           
ஒன்னு ஓடிண்டே இருக்கு அதில் எந்த டெர்மினசுக்கு வேனும்னாலும் போக
 முடியுது. ஒவ்வொரு ஏற்பாடும் அவ்வளவு கச்சிதமா பண்ணி இருக்காங்க.
 பாக்க பாக்க அவ்வளவு சந்தோஷமா இருக்கு.இங்கயும் குழந்தைகளுக்கு
                   
  பொழுது போக நிறைய விளையாட்டுக்கள் இருக்கு. குழந்தைகளும் ஜாலியா சிரிச்சு விளையாடி ஃபௌண்டன்களில் கை நனைத்து கும்மாளமிட்டுக்கொண்டிருக்கிரார்கள். குட்டி குழந்தைகளுக்கு  ஒரு இடம்
                     
முழுவதும் பலூங்களை நிறப்பி அதில் விளையாட ஏற்பாடு செய்திருக்காங்க
இன்னொரு இடத்திஉல் சின்ன ஓடை மாதிரி தண்ணி ஓடிண்டு இருக்கு
                 
     
கரையெல்லாம் கலர் கலராக பூக்கள் மலர்ந்து சிரிக்கின்றன ஓடையில் கலர் கலரான மீன்கள் துள்ளி விளையாடிக்கொண்டிருந்தன.எத்தனை நேரம் பார்த்தாலும்மலுக்காத காட்சிகள்.
                               
மொத்தத்துல சிங்கப்பூர் லைஃப்  ஸ்டைல் காஸ்ட்லியா தான் இருக்கு.ரொம்பவே எக்ஸ்பென்சிவ்தான் ஆனா செலவழிக்குர காசுக்கு வஞ்சனை இல்லாம வசதிகளும் சவுகரியங்களும் தாராளமாகவே கிடைகின்றன. ட்ரான்ஸ்போர்ட் பராமறிப்பு உபயோகம் எல்லாமே கன கச்சிதம். காத்து கிடக்க வேண்டிய அவசியமே இல்லாமல் குறித்த நேரப்படி வந்து விடுகிரது,க்ளீன்  ஊரு.இவ்வளவு வாகனங்கள் ஓடினாலும் ஹார்ன் சத்தமோ பெட்ரோல் புகயோ தூசியோ துளிகூட இல்லே. ஸிஸ்டமேடிக்கா இருக்கு எல்லாமே.வயசானவங்களுக்கு, சின்ன குழந்தைகளுக்கு கவனம் எடுத்து  மதிப்பும் மறியாதையுமாக நடத்துரங்க.
சிங்கப்பூர் டிரிப் இனிமையான சந்தோஷமான அனுபவமாகவே அமைந்தது.
 அதையும் உங்க எல்லார் கூடவும் பகிர்ந்து கொண்டது இன்னும் அதிக சந்தோஷமா இருந்தது. பயணம் முடிந்தது.   GOOD  BYE.

Saturday, December 29, 2012

சிங்கப்பூர் 12

இந்த வாரம் சிங்கப்பூரின் பிரபல  செந்தோஸா கார்டன் பற்றி.
சிங்கப்பூர் பதிவு போட்டவங்க எல்லாருமே இதைப்பற்றி நிறைய
                           
சொல்லிட்டாங்க. நானும் திரும்ப அதையே சொல்லி போரடிக்க
 விரும்பலே. நான் சில விஷயங்கள் மட்டுமே பகிர்ந்துக்கரேன்.
                     
காலை கிளம்பி போனோம். முதலில் கேபிள் கார் பயணம் செய்து
               
       
நேரே செந்தோஸா போனோம்.ப்ரௌன் கலரில் சிங்கம் இருக்கும்
                           
 பகுதிக்கு முதலில் போனோம்.கேபிள்காரிலிருந்து கீழேபார்க்கும் போது கடலில் நின்றுகொண்டிருக்கும் கப்பல், வேகமாக சென்று கொண்டிருக்கும்
                       
               
ஃபெர்ரிபோட் எல்லாம் பார்க்க பார்க்க  சுகமான அனுபவம். லீவு நாள் ஆதலால் நிறைய சுற்றுலா பயணிகள் கூட்டம்.. எல்லார் கைகளிலும் கேமர க்ளிக்குகள் தான்நாங்களும் போட்டோல்லாம் எடுத்துண்டோம். இங்கயும் கிரிஸ்மஸ்
                       
               
அலங்காரங்கள் அமர்க்களமாக இருந்தது. அங்கேந்துபலவன் பீச் போனோம்
ரொம்ப சின்ன பீச் தான் குழ்ந்தைகள் நிறைய பேரு குளிச்சு கும்மாளமிட்டு
               
கொண்டிருந்தார்கள். கடலில் அலை கூட இல்லாமல் அமைதியாக இருந்தது
 குழந்தைகளுக்காக கரையில் சின்ன சின்ன பௌண்டன்களில் தண்ணீர்
                   
விழுந்துகொண்டே இருக்கு. அதில் வாண்டுகள் ஜாலியா
குளித்துக்கொண்டு இருந்தார்கள்.கொஞ்ச நேரம் அங்கே வேடிக்கை பார்த்தோம் சுற்றிவர   ரெஸ்டாரெண்ட் அதைச்சுற்றி விசிறி வாழை
 மரங்கள் நிறையா இருந்தது.
                             
                     
வெளியே வந்து ஓபன் பஸ்ஸில் கார்டன் பூராவும் சுத்திக்காட்டுராங்க அதில்
 போனோம். திரும்பிய இடம் எல்லாமே பெரிய , சிறிய பச்சை பசேல் மரங்கள்
அடர்ந்து பசுமையாக வளர்ந்திருந்து பெரிய தோப்புக்குள்ள சுத்துவது போலவே இருந்தது. இடை, இடையில் மழையும் சேர்ந்துண்டது. இங்க எப்ப
மழை பெய்யுனே சொல்ல முடியல்லே. எல்லாருமே கையில் குடையுடந்தான் வெளியே கிளம்புராங்க.அப்புரம் பறக்கும் ரயிலில் சுத்தினோம் அங்கே ரயில்வே ஸ்டேஷனில்  10 இறக்கைகளுடன் கூடிய ஒரு
                             

ஃபேன் சுத்திண்டு இருந்தது. ஒரு வீட்டிலும் சீலிங்க் ஃப்னே கிடையாது ஆனா இங்க இவ்வளவு பெரிய ஃபேன் இருந்தது.டூரிஸ்டுகளை எப்படில்லாம் கவர்ந்து இழுக்கலாம்னு
யோசிச்சு ,யோசிச்சு எல்லாமே சிறப்பாக வடிவமைதிருக்காங்க. ஆனாகூட
 இவ்வளவு கூட்டம் சேர்ந்தாலும் துலிகூட தூசியோ குப்பையோ இல்லாம
எல்லா இடங்களும் அவ்வளவு சுத்தமாக பராமறிக்குராங்க.அது நல்லா இருக்கு.அடிக்கடி மழை வேறு பெய்யுதா ஊரே அலம்பி விட்டதுபோல பளிச்சுனு இருக்கு. மரங்களும் தினமும் மழையில் குளிப்பதால் பசுமை
மாறாமல் கண்ணைப்பறிக்குது.

இரவு கடற்கரையில்  ஸாங்க்ஸ் ஆஃப்த ஸீன்னு ஒரு நிகழ்ச்சிக்கு போனோம்.
                     
கடற்கரை  மணலில் சுமாராக 3000 சேர்கள் போட்டிருந்தார்கள்.அத்தனை சேர்களுமே ஃபுல்லாயிட்டு. நம்ம சீட் எதுன்னு சைனீஸ்பெண்கள் வழி காட்டி
அழைத்து செல்கிரார்கள். டிக்கட் விலை எல்லாமே ஆனை விலை குதிரை
                           
விலயில் தான் இருக்கு. முதலில் 7,8 சின்ன பசங்களும் பெண்களுமாக அந்த
 நிகழ்ச்சி பற்றி சின்ன நாட்டிய நாடகம் மூலமாக விளக்குகிரார்கள். சைனீஸ்
பாட்டுக்கள் இருந்ததால எதுமே புரியல்லே. அது முடிந்ததும் லேசர் மூலமாக
கலர் கலராக உருவங்கள் வர வழைக்கிராங்க. மழை பெய்யுரமாதிரி, நெருப்பு
                               
               
எரியுரமாதிரி, வாணவேடிக்கைகள் எல்லாம் காட்டுராங்க. ரொம்ப நல்லா இருந்தது.2,3 வருஷம் முன்ன இந்த நிகழ்ச்சி ஒரு மணி நேரம் காட்டுனாங்களாம். இப்ப அரைமணி நேரம்தான் காட்டுராங்க. நாட் பேட். நல்லாவே இருந்தது. 9 மணிக்கு ஷோ முடிஞ்சது.  இதற்கு இடையில் ஒரு ஃப்ரெண்ட் வீடு போனோ.ம் அவங்க பழைய சிங்கப்பூர் பகுதியில் இருந்தாங்க.
                   
நல்ல உபசரிப்பு.கொஞ்ச நேரம் பேசிட்டு கிளம்பினோம்.    மறுபடி ட்ரெயின் பயணம் வீடு போக 10 மணி ஆச்சு. எந்த நேரமானாலும் ட்ராவல்  பண்ணுவது  இங்கசுகமான அனுபவமாகவே இருக்கு. நான் பார்த்து ரசித்த காட்சிகள் எல்லாம் நீங்களும் பார்த்து ரசிக்கனும்னு ஒரு ஆர்வக்கோளாறினால் இந்த தடவை படங்கள் கொஞ்சம் அதிகப்படியா இணைச்சுட்டேன்


Thursday, December 27, 2012

சிங்கப்பூர் 11

இங்க அன்னலக்‌ஷ்மி ட்ரஸ்ட் பத்தி கொஞ்சம் சொல்லலாம்னு  நினைக்கிரேன். ரிஷிகேசத்திலிருந்து வந்த ஸ்வாமி சிவானந்தா
என்பவர்தான் இந்த அமைப்பை ஆரம்பித்து வைத்தவர். இவருக்கு
உறுதுணையாக இருந்தவர் டாக்டர் குப்புஸ்வாமி என்பவர். இந்த
அமைப்புக்கு டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்னு பெயர். இன்றுவரை
                                     
 சிற்ப்பாக செயல் படுத்தி வருகிரார்கள்.அன்னதானத்திற்கு மிகவும்
முக்கியத்துவம் கொடுத்து வருகிரார்கள். ஏன் தெரியுமா? அதிதி தேவோபவ என்பதற்கு விருந்தாளிகள் நமக்கு கடவுள் போல என்று அர்த்தம்  தானத்தில்
 சிறந்தது அன்ன தானம்னு சொல்வாங்க இல்லியா? வாழ்க்கையில்
யாருக்கு எவ்வளவு பொன்னும் பொருளும் அள்ளிக்கொடுத்தாலும்
 இன்னும் இன்னும்னு மனசு எதிர்பார்க்கும். அதுதான் மனுஷா சுபாவம்.
ஆனா சாப்பாடு விஷயத்தில் வயிறு நிறம்பிவிட்டால் அதற்கு மேல ஒரு
 வாய் சாதம் கூட சாப்பிட முடியாது. வயிறு நிறைந்து, மனசு நிறைந்து
சந்தோஷமா திருப்தியா போதும், போதும்னுசொல்லுவாங்க உண்டா
 இல்லியா. அவங்க திருப்தியா சாப்பிட்டு பொதும்னு சந்தோஷமா சொல்லுரதை பார்த்து அன்னம் அளிப்பவர்களுக்கும் சந்தோஷமாகவும்
திருப்தியாகவும் இருக்கும். தானம் அளிப்பவர் , பெறுபவர் இருவருக்குமே
 திருப்தி சந்தோஷம் தருவது அன்னதானத்தில் மட்டும் தான். அதனாலதான்
 இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிரார்கள்.
                             
ஃப்ரீயாதானே சாப்படு போடுரோம்னு அலட்சியம் காட்டாம , மிகுந்த பரிவுடன் ஒவ்வொருவரையும் கவனித்து உபசரிக்கும் பாங்கும் நல்லா கடைப்பிடிக்கராங்க.ருசியும் ரொம்ப நல்லாவே இருக்கு. ஆரோக்கியமா சுத்தமாகவும் இருக்கு. மெனு கார்டோ விலைப்பட்டியல் என்ற பேச்சுக்கே இடம்இல்லே.இதோடமட்டுமில்லாம, கலைகளில் ஆர்வம் உள்ளவங்களுக்கு
சிறப்பான பயிற்சியும் அளிக்கிராங்க. வாய்ப்பாட்டு நாட்டியம், நாடகம் வாத்தி
யங்களில் பயிற்சி என்று அளித்து வருகிரார்கள். என்னை எல்லா இடங்களும்
கூட்டிண்டு போயி சுத்தி காட்டினார்கள். ஆதரவில்லாத பெண்களுக்கு ஏதானும் கை வேலைகளில் பயிற்சி அளித்து வேலைக்கும் ஏற்பாடு செய்து
அவர்களின் வருமானத்திற்கும் வழி வகை செய்து வருகிரார்கள்.மெடிகல் அட்வைஸ், வசதி இல்லாதவங்களுக்கு இலவசமருத்துவ வசதி செய்து
கொடுக்கிரார்கள்.வாலண்டியராக அங்கு வந்து வேலை செய்பவர்களும்
டாக்டர், ப்ரொபசர், மைக்ரோஸாஃப்ட் ஆபீசர்னு பெரிய பெரிய ஆட்கள்தான்
 எந்தவித ஈகோவும் பார்க்காமல் சேவை மனப்பான்மை ஒன்றையே எண்ணி
செயல் பட்டு வருகிரார்கள்.

கலைக்கூடம் மிகப்பெரியதாக இருக்கு. ஒரு புறம் ஸ்வாமிசிவானந்தாவின்
உருவச்சிலைக்கு மாலை போட்டு நடுவில் வைத்திருக்கிரார்கள். பக்கத்தில்
                         
தினசரி கொலு போல படிக்கட்டுகளில் எல்லா கடவுள்களின் விக்ரகங்களும்
                           
                         
வச்சிருக்காங்க.னடராஜர் சிலையும் ஒரு புறம் இருக்கு. பார்த்து பார்த்து
    எல்லாம் சிறப்பாக செய்து வருகிரார்கள்.பாக்கவே ரொம்ப நல்லா இருக்கு.  இந்த அமைப்பின் கிளைகள் உலகில் பல இடங்களிலும் செயல் பட்டு வருகிரது.தமிழ் நாட்டில் சென்னை
கோவையிலும்,மலேஷியா,சிங்கபூர்,ஆஸ்ட்ரேலியா,இன்னும் பல இடங்களிலும் சிறப்பக செயல் பட்டு வருகிரது.கோவையில் சிவாஞ்சலி என்னும் அமைப்பில் செயல் பட்டு வருகிரார்கள். இவர்களை எவ்வளவு
 பாராட்டினாலும் தகும். 

Tuesday, December 25, 2012

சிங்கப்பூர் 10

அந்த சனிக்கிழமை மகனின் பர்த் டே இருந்தது. ராஜலஷ்மி அம்மா
வீட்லேந்து எல்லாரையும்  லஞ்சுக்கு கூட்டிண்டு வெளில போனோம்.
 அன்னலஷ்மின்னு ஒரு இடம்.லிட்டில் இண்டியா, சைனாடவுன் எல்லாம்
 தண்டி க்ளர்க்கீன்னு ஒரு அமைதியான சூழ் நிலை உள்ள இடத்தில் இருந்தது.
அதை ஹோட்டல்னு சொல்லமுடியாது. ரெஸ்டாரெண்டுன்னு வேணா
சொல்லலாம். வெளிப்புற சூழலே மன்சுக்கு ரொம்ப ரம்யமாக இருந்தது.
                     
மெலிதாக பூந்தூறலாக மழைவேறு பன்னீர்தெளித்ததுபோல வரவேற்றது.
வெளிப்புற கதவில் அழகான வேலைப்பாடுகள்.உள்ளே நுழைந்ததும் இனிமை
யான வயலின் இசை காதுக்கு விருந்தாக இருந்தது. பெரிய ஹால் சுமாராக
                     
 50, 60 டேபிள். சேர்கள் போட்டிருந்தது. நிறையா பேரு உக்காந்து சாப்பிட்டுக்
 கொண்டிருந்தார்கள். ஒரு புறம் சின்ன ஸ்டவ்வின் மேல் சூடு சூடாக சாப்பாடு
இருந்தது. யாருக்கு என்ன வேனுமோ எடுத்துக்கலாம் நோ லிமிடேஷன்.சுத்த
மான சுகாதாரமான முறையில் எல்லாமே ரெடியாக இருந்தது.
                       
 ஸெல்ஃப் ஸர்வீஸ் எல்லாரும் ப்ளேட், கிண்ணம், ஸ்பூன் எடுத்துண்டு யாருக்கு என்ன வேனுமோ எடுத்துண்டு டேபிளில் வந்து உக்காந்தோம்
 புடவைகட்டிண்டு பாந்தமாக சில பெண்மணிகள் ஒவ்வொரு டேபிளாக
 வந்து நல்லா சாப்பிடுங்க. சங்கோசப்படாதீங்க. வயிறு ஃபுல்லா சாப்பிடுங்க
 சாப்பாட்டுக்கு பிறகு குடிக்க என்ன வேனும்? லஸ்ஸி, கரைத்தமோர், லெமன்
ஜூஸ் எல்லாம் இருக்கு என்ன வேனும் சொல்லுங்க என்று பார்த்து பார்த்து
 உபசரிதது மனதுக்கு நிறைவாக இருந்தது.அன்று சனிக்கிழமையாக இருந்ததால் ஸ்பெஷலாக எள்ளு சாதமும் பண்ணி இருந்தாங்க. பாலக் புலாவ்
சாம்பார், ரசம், ரெண்டு பொரியல், ரெண்டு கூட்டு, சப்பாத்தி, ராய்த்தா பாதாம்
கேக் என்று அமர்க்களமான விருந்து சாப்பாடுதான். சுவையும் ரொம்பவே
 நன்றாக இருந்ததுகூடவே வடாம் வத்தல் வகைகள். பேசிக்கொண்டே ரசித்து
ருசித்து சாப்பிட்டோம். லஸ்ஸி கரைத்தமோர் கொண்டு தந்தா. ரொம்ப டேஸ்டா இருந்தது.
                                         
ராஜலஷ்மி அம்மாவின் மருமகள் அங்கே வீணை கத்துக்கராங்க. அவங்ககிட்ட இந்த அமைப்பை பற்றி கேட்டேன். அவங்க நேரே உள்ளயே
கூட்டிட்டு போனாங்க.உள்ள போனதுமே பிரமிப்பாக இருந்தது. அந்த அமைப்பை பற்றி சொன்னாங்க.இங்க சாப்பாட்டுக்கு காசே வாங்கறதில்லே
அவங்களாக இஷ்டப்பட்டா உண்டியலில் அவங்களால இயன்ற காசு போடலாம் அதுவும் கட்டாயமில்லே. அந்தப்பணமும் ஒரு ட்ரஸ்ட்டுக்கு சேவை செய்யதான் போயிச்சேருது. இங்க வேலை செய்கிரவர்களும் காசு
   வாங்காம சேவை மனப்பான்மையில் வாலண்டியரக வந்துதான் வேலை
 செய்யுராங்க.அன்னதானம் தினசரி சேவை. அது தவிர கலைச்சேவைகள்
பரதம் பாட்டு, இன்ஸ்ட்ருமெண்ட் பயிற்சி எல்லாம் ஆர்வமுள்ளவங்களுக்கு
கத்து கொடுக்கராங்க.அதுக்கு மட்டும் கொஞ்சம் பணம் வாங்குராங்க. இது
போல அன்னலஷ்மி க்ரூப் உலகின் பல இடங்கலளில் செயல்பட்டு வருவதாக
 சொன்னாங்க. அது பத்தி இன்னமும் நிறையா சொன்னாங்க. மிகவும் நல்ல
விஷயமாக இருந்தது.

Tuesday, December 18, 2012

JUST RELAX

 சிங்கப்பூர் பயணத்தொடருக்கு 10 நாள் லீவு. அதுவரை கொஞ்சம் பாட்டுக்கள் கேட்டு ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க.

Friday, December 14, 2012

சிங்கப்பூர் 9

அடுத்த நாள் மகன் ஆபீசிலிருந்து வந்ததும் அம்மா கிளம்பு, கிளம்பு இன்னிக்கு
உனக்கு ரொம்ப பிடிச்ச இடத்துக்கு கூட்டிண்டு போரேன்னான்.இந்த ஊர்ல
எனக்கு என்ன இடம் பிடிக்கும்னு இவன் சொல்ரான்னு நினச்சுண்டே கிளம்பினேன். நடந்தே செங்காங்க் ஸ்டேஷன் போனோம். ரயில் ஏறி எங்கியானும் கூட்டிண்டு போகப்போரானோன்னு நினைச்சேன். ஸ்டேஷனில் கிறிஸ்மசை முன்னிட்டு திரும்பின பக்கமெல்லாம் அமர்க்களமாக அலங்காரங்கள் செய்திருக்கா. பழைய மாடல் பாய் மரக்கப்பல் ஒன்றை மேலேந்து தொங்க விட்டிருந்தா. போட்டோவில் சரியா கவர் பண்ண
                           
             
முடியல்லே ரொம்ப உசரத்ல இருந்தது.ஏறி இறங்க லிப்டும், எஸ்கலேட்டரும்தான். 4-வது மாடிக்கு கூட்டிண்டு போனான். ப்ளாட்பாரத்துக்கு போகாம 4-வது மாடிக்கு எங்க போரான்னு யோசிண்டே பின்னால போனேன். எல்ல ஸ்டேஷன்களுமே பெரிய ஷாப்பிங்க் மால்கள் போலவே சகலவிதமான சாமான்களும் கிடைக்கின்றன.வித விதமான கடைகளை வேடிக்கை பாத்துண்டே போனேன். சடன்னா ஒரு இடத்துக்குள்ள கூட்டிண்டு போனான். நிமிந்து பாத்தா. திரும்பின பக்கமெல்லாம் புத்தக கடல்தான். எனக்கு லைப்ரரி போயி புக் பார்க்க படிக்க ரொம்ப பிடிக்கும். பசங்கல்லாம் வேடிக்கையா இப்பவும் சொல்லுவாங்க
                                 
அம்மாவை ஒரு ரூமுக்குள்ள அடச்சு சுத்திவர நிறையபுக்சும் கொடுதுட்டா சோருதண்ணிகூட இல்லாம எவ்வளவு நேரம்னாலும் படிச்சுண்டே இருப்பான்னு. அது என்னமோ உண்மைதான் புக் படிக்க ஆரம்பிச்சா உலகமே மறந்துடும் எனக்கு.பிரும்மாண்டமான லைப்ரரிஅது. நுழைந்ததும் நிறையா ஆங்கில புத்தகங்களிருந்தது, இன்னும் கொஞ்சம் உள்ளே போனா மற்ற மொழி புத்தகங்கள் குழந்தைகளுக்கு காமிக்ஸ் முதலான புக்ஸ் பெண்களுக்கு சமையல்குறிப்பு அழகு குறிப்பு, ஹெல்த் கேர்னு பலவிதபுக் நடுப்பகுதிக்கு
                       
போனதும் தமிழ் புத்தகங்கள் 10 ஷெல்புகளில் வகை பிரித்து அடுக்கி அழகாக வைத்திருந்தார்கள். தமிழ் புக்ஸ் பாத்ததுமே என் முகமெல்லாம் சந்தோஷ சிரிப்பு பார்த்து மகன் என்னம்மா உனக்கு பிடிச்ச இடம்தானேன்னு கேக்கரான் ஆமான்னு சொல்லி என்னலாம் புக் இருக்குன்னு சுத்தி சுத்திவந்து பாத்துண்டே இருந்தேன். இல்லாத  புக்கே இல்லே என்னும்படி, டெய்லி
                   

பேப்பர், வாராந்திரிகள், மாசாந்திரிகள் , நாவல்கள்,  நாவல்களில் பலவகைகள் அங்கே இல்லாத ஆசிரியர்களே இல்லே. எதை எடுக்க எதை விடன்னே புரியாம எல்லாபுக்கையும் மேலோட்டமா பாத்துண்டே இருந்தேன். சுத்திவர நிறைய குஷன் சேர்கள் டேபிள் சேர்கள் என்று அங்கெயெ உக்காந்து படிப்பவர்களுக்கு வசதிகள் செய்திருக்காங்க. நிசப்தமாக சுத்தமாக இருந்தது லைப்ரரி.
                               
மகனிடம் கேட்டேன் வீட்டுக்கு புக் எடுத்துண்டு போலாமான்னு . ஓ, எஸ் தாராளமா எடுதுட்டு போலாம் 3- வாரம் கழிச்சு திரும்ப கொண்டு வச்சுட்டு வேர புக்  எடுத்துண்டு போலாம்னான். ஒரு நேரத்ல எவ்வளவு புக் எடுக்கலாம்னு கேட்டேன் எவ்வளவு வேனாலும் எடுக்கலாம் 3- வாரத்ல திரும்ப கொண்டுவரனும் அவ்வளவுதான்னு சொன்னான். என்ன சார்ஜ் பண்ணுவான்னு கேட்டேன் சிரிக்கரான். காசெல்லாம் கிடையாது எல்லாமே ஃப்ரீசர்வீஸ்தான்.  ஃப்ரீ சர்வீசென்றாலும் ஏனோ தானோ என்று இல்லாமல் மிகவும் அருமையாக பரமரித்துவருகிறார்கள். ஒரு வெளி நாட்டில் நம் தமிழுக்கு செய்யும் பெருமையும் மறியாதையும் பார்க்க பார்க்க அவ்வளவு சந்தோஷமா இருக்கு. அங்கேந்து இன்னொரு கௌண்டர் கிட்ட போனோம்
                               
கம்ப்யூட்டர் மாதிரி ஒரு மிஷின் இருக்கு அதில் எவ்வளவு புக் எடுத்துட்டு போரோமோ அதை வைக்கனும் என்னிக்கு என்ன தேதில எவ்வளவு புக்  எடுதுண்டு போரோம், என்னிக்கு திரும்ப கொண்டு கொடுக்கணும்னு விவரம் எல்லாம் அதில் பதிவாகிரது. ஏ. டி. எம் .கார்ட்போல இங்கியும் லைப்ரரி

                       
மெம்பர்ஷிப் கார்ட் தான் அதையும் மிஷினில் வைத்தா என்ன கார்ட் ஹோல்டர்ஸ் புக் எடுத்துட்டு போராங்கன்னும் காட்டுது, என்ன ஸிஸ்டமேடிக் நடவடிக்கைகள். நல்ல விஷயம்  எங்க இருந்தாலும் யாரு பண்ணீனாலும் அதிலிருந்து நாமும் கத்துக்கலாம்.
இதுபோல எல்லாஸ்டேஷன்களிலுமே லைப்ரரி இருக்கு எங்கேந்துவேணாலும் புக் எடுத்துக்கலாம் எங்கவேணும்னாலும் கொண்டு வைக்கலாம்.தமிழுக்கு எவ்வளவு சிற்ப்பான சேவை செய்கிறார்கள் இல்லியா?  நானும் சுஜாதா, பாலகுமாரன்,இந்திராசௌந்திரராஜன்,ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை நாவல்களில் 5,6 எடுத்துண்டேன் , மகன் கேட்டான் இது நீ ஒரு வாரத்துக்குள்ள படிச்சுமுடிச்சிடுவே இன்னம் எடுத்துக்கோன்னான். இல்லே இதெல்லாம் படிச்சுட்டு இத கொண்டு வச்சுட்டு வேற எடுக்கலாம்னு சொன்னேன்.லைப்ரரி விட்டு வெளியே வரவே மனசு வல்லே. அங்கியே குட்டி போட்ட பூனை போல சுத்தி சுத்தி வந்துண்டே இருந்தேன்.

என்னை ஆதரிப்பவர்கள் . .