Pages

Wednesday, November 30, 2011

எனக்குள் நான் (பயங்கர) டேட்டா- தொடர் பதிவு

நண்பர் பிரகாஷ் என்னையும் இந்த தொடர் பதிவுக்கு அழைத்திருக்கார்.
என்னைப்பற்றி என் பல பதிவுகளில் விலாவாரியாக ஓபன் ஸ்டேட்மெண்ட்
கொடுத்தாச்சு. இப்ப புதுசா சொல்ல என்ன இருக்கு தெரியல்லே. அதான்
கொஞ்சம் மாத்தியோசிச்சேன்.

நான்.  நானே  நானோ யாரோ தானோ மெல்ல, மெல்ல மாறினேனோ?
பிறந்த நாள்--ஏன் பிறந்தாய் மகளே ஏன் பிறந்தாhttp://www.youtube.com/watch?v=CSD1juEt_eY
பிறந்த ஊர், வளர்ந்த இடம்-- யாதும் ஊரே யாவரும் கேளீர்.
http://www.youtube.com/watch?v=kSIcAh-4lj8
இருப்பது.- ஏ தில் ஹை முஷ்கில் ஹை ஜீனா யஹாம்( சாரி, இதுமட்டும் ஹிந்தி)    http://www.youtube.com/watch?v=7Xu44aq8Fog
படிப்பு.-வாழ்க்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம்.
http://www.youtube.com/watch?v=Wrk-BVzgy9s
வேலை.-செய்யும் தொழிலே தெய்வம்.
http://www.youtube.com/watch?v=u7X9zRoYon
 பிடித்த விஷயங்கள்.- அதோ அந்தப்பறவைபோல .
http://www.youtube.com/watch?v=FB_mHPsm6Bk


பிடிக்காதது.  இல்லாததொன்றில்லை.
http://www.youtube.com/watch?v=z2klpOa4SlU&feature=related
 நட்புக்காக.--தோழா தோழா தோள்கொடு கொஞ்சம் சாய்ஞ்சுக்கனும்.
http://www.youtube.com/watch?v=bZPP03w6Yh8
காதல். கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே.
http://www.youtube.com/watch?v=AMotc9NQ9B8
அன்பு பாசத்துக்கு.என்ன தவம் செய்தனை.
http://www.youtube.com/watch?v=Zb3oCguhjtY
மறக்கமுடியதது.-இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்.
http://www.youtube.com/watch?v=zRJjE3Y9LLg
மறக்க நினைப்பது. நினைக்கத்தெரிந்த மனமே உனக்கு மறக்கத்தெரியாதா?
http://www.youtube.com/watch?v=G84Nd2r0nEk
சந்தோஷம். எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்.
http://www.youtube.com/watch?v=9RjgxnK50oA
பலம். ஒவ்வொரு பூக்களுமே சொல்கிரதே.
http://www.youtube.com/watch?v=d4nftQgisrU
பலவீனம். சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்.
http://www.youtube.com/watch?v=EyrdQ7_lKF0
கோபம். ராதே உனக்கு கோபம் ஆகாதடி
http://www.youtube.com/watch?v=TsypI_e1DQs
ஏமாற்றம். ஏமாறாதே, ஏமாற்றாதே.
http://www.youtube.com/watch?v=5g2fSFVyIPE&feature=related
பிடிச்ச பொன் மொழி.-உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்.
http://www.youtube.com/watch?v=09EBJA1eTU4
பிடிக்காத பொன் மொழி. போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை

http://www.youtube.com/watch?v=S-jHNs31dJs&feature=related
பொழுது போக்கு. இது ஒரு பொன்மாலைப்பொழுது.
http://www.youtube.com/watch?v=hymujdC0mlw 
ரசிப்பது. செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்
http://www.youtube.com/watch?v=9svqcyNIgvo
பிடிச்ச சுற்றுலாத்தளம். போவோமா ஊர் கோலம்.பூலோகம்
http://www.youtube.com/watch?v=rix_wX6dd6c
நிறைவேராத ஆசை--சின்ன சின்ன ஆசை, சிறகடிக்கும் ஆசை
 .http://www.youtube.com/watch?v=Czhkrwzqvww
கடவுள்.- ஜனனி ஜனனி ஜகம் நீ.
http://www.youtube.com/watch?v=6eFjBl_r4jE
சமீபத்திய பெருமை. என்ன சொல்லப்பொகிராய்
http://www.youtube.com/watch?v=95wHqKPh49g 
தற்போதைய சாதனை. வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்.
http://www.youtube.com/watch?v=vwgLot131dg




டிஸ்கி. தொடர்பதிவு.
1சோதனைமேல் சோதனை போதுமடா சாமி.
http://www.youtube.com/watch?v=3BZ4Fx-GRKY
ஒய், திஸ் கொலவெறி, கொல வெறி, கொலவெறி டீ
http://www.youtube.com/watch?v=1JagUR48mXE&feature=related











Monday, November 28, 2011

காத்திருப்பு. 1

இந்திரபிரஸ்த் கார்டன் ஏர்கண்டிஷன் செய்ததுபோல குளு, குளு என்றிருந்தது. கார்டன் என்றால் குழந்தைகள் விளையாடும் பார்க்தான். அதற்கே உறிய சறுக்குமரம், ஊஞ்சல், குடைராட்டினம் கம்பி விளையாட்டு எல்லாமே இருந்தது. பக்கவாட்டில் இருந்த புல் வெளிகளையும் அழகாக மிருகங்களின் உருவத்தில் செதுக்கி ட்ரிம் செய்திருந்தது மிகவும் அழகாக இருந்தது. சுனிதாவும் சேகரும் அங்கிருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்து வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்த மிக்சரைக்கொறித்தவாரே தங்கள் எதிர்காலம் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். சேகர் வேலை இல்லா பட்டதாரி. சுனிதாவோ அந்தஊரிலேயே பெரும் செல்வந்தரின் ஒரே ஆசைமகள். இருவருக்கும் காதல் ஏற்பட்டு ஒருவருடமாகிரது.

Friday, November 25, 2011

கண்ணாடி

உலகில் கண்ணாடிகள் தோன்றி இராத காலம் அது. யாருமே தங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்த்ததில்லை. அப்போது முதன் முதலாக முகம் பார்க்கும் கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவனுக்கு அந்தக்கண்ணாடி கிடைத்தது.அதை வீட்டுக்கு கொண்டுவந்து ஒரு பெட்டியில் வைத்டுக்கொண்டு பின் அதை திறந்து பார்த்தான். அதில் அவன் முகம் தெரிகிரது. அது தன் முகம் தான் என்று அவனுக்குத்தெரியவில்லை.இதற்குள் ஒரு மனிதன் இருக்கிரான்.இதற்குள்ளே ஆனந்தமாக வசிக்கும் அவன் ஒரு தேவனாகத்தான் இருக்கவேண்டும், என்று எண்ணினான். உடனே கண்ணாடியை பெட்டியில் வைத்து பூட்டிக்கொண்டான்.

Friday, November 18, 2011

சில நம்பிக்கைகள்

எங்கேன்ஜ் மெண்ட் ரிங்க் மோதிர விரலில் ஏன் போடுராங்க?




தெரிஞ்சுக்கலாமா? வாங்க.

முதல்ல உள்ளங்கைரெண்டையும் சேத்து சாமி கும்பிடுவதுபோல வைங்க.

வைச்சீங்களா? இப்போ நடுவிரலைஉள்ளங்கையை தொடுவதுபோல உள்ள

மடக்கி வைங்க. பாக்கி நாலுவிரல்களையும் சேத்து கும்பிடு வதுபோல ஒட்டி

வைங்க.ஆச்சா? இப்ப முதல்ல ரெண்டுகட்டை விரல்களையும் கொஞ்சமா விலக்கிட்டு திரும்பவும் ஒட்டவச்சுக்குங்க. அடுத்து ஆள்காட்டி விரல்களையும்

அதுபோலவே கொஞ்சம் விலக்கிட்டு திரும்ப ஒட்ட வச்சுக்குங்க. அடுத்து

சுட்டுவிரலையும் அதேபோல விலக்கி, சேருங்க. இப்ப மோதிர விரலையும் விலக்கி சேருங்க.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!. என்னங்க முடியலை இல்லியா?


Wednesday, November 16, 2011

மழலை உலகம் மகத்தானது

 பதிவர் ரசிகன் இந்த தலைப்பில் தொடர்பதிவு எழுத அழைப்பு அனுப்பி இருக்கார்.
  நிறையபதிவர்கள்இதுபத்திநிறையஎழுதிஇருக்காங்க.எனக்குத்தெரிந்தவிதத்தில் நானும் கொஞ்சம் சொல்ரேன். எனக்கு வெளிவிவகாரம் பழக்கமில்லை. வீட்டுப்பறவை நான். வீட்டில் நடந்ததை வைத்து என் எண்ணங்களை ச்சொல்ரேன். எனக்கு என் முதல் பெண் பிறந்தப்போ என் வயது13.( நம்பித்தான் ஆகனும்) வரிசையா 5குழந்தைகள் 19-வயதில் கடைசி குழந்தை. அப்போல்லாம்  பெரியகுடும்பம். மாமியார், மாமனார், தாத்தா, நாங்க இருவர் , 5 குழந்தைகள் என்று வீடு நிறம்பி மனிதர்கள் அவர்களுக்கு காலை என்ன டிபன் செய்யலாம்?, என்னமதிய சாப்பாடு , இரவு சாப்பாடு பண்ணலாம் என்று யோசிச்சு செயல் படுவதிலேயே பூரா நாளும் சரியா இருக்கும் . அதுதவிர வீடு பெருக்கிமெழுகி, பாத்திரம் தேய்த்து துணி துவைத்து என்று மூச்சு முட்ட வேலைகள் சரியா இருக்கும் என் குழந்தைகள் கூட செலவு செய்ய நேரமே இருக்காது. எப்படி வளர்ந்தார்கள் என் று தெரியாமலே வளர்ந்து ஆளாகி இன்று பெரிய பெண்ணுக்கே 50 வயது.

Tuesday, November 8, 2011

டாக்டர் 2



நித்யா கன்யாவிடம் கன்யா என் அப்பா எனக்காக மெடிகல் ஸீட் ஏற்பாடு செய்திருப்பதாக சொல்ராங்க.ஆனா எனக்கு மெடிகல்ல இண்ட்ரெஸ்ட்டே இல்லே. டாடி கிட்ட எப்படி சொல்லன்னும் புரியல்லே. அதான்.

ஏண்டி பிடிக்கல்லே?ஒவ்வொருத்தர் மெடிக்கல் கிடைக்கலியேன்னு எவ்வளவு தவியா தவிக்கராங்க? நீ என்னடான்னா பிடிக்கலேங்கரே? ஏன் காரணம் என்கிட்ட சொல்லேன். என்று கன்யா கேட்கவும் உன்கிட்ட சொல்லாம வேர யாருகிட்டேடி சொல்லப்போரேன். டாக்ட்டருக்குப்படிக்க எனக்குபிடிக்கலே. நாள்பூரா வியாதிக்காரங்க மத்திலயேஅவங்க வேதனையான புலம்பல் களுக்குமத்தியில், அசிங்கம் பார்க்காம ஆப்ரேஷன் ரத்தம் வாடைகளுக்குமத்தில என்னால சகிச்சுக்கவே முடியாது. அது தவிர கால நேரம் பாக்காம எந்தன்னேரமானாலும் ட்ரீட்மெண்ட் கொடுக்க அலர்ட்டாவே இருக்கனும்.னமக்குன்னு செலவுபண்ண நேரமே இருக்காது

இப்படி எல்லாவிதத்திலும் நம்ம சுதந்திரத்தையும் விட்டுக்கொடுத்து ஆயிரக்கணக்கில் பணத்தையும் செலவு செய்து அப்படியாவது இந்தபடிப்பில் சேரனுமான்னுதான் யோசனையா இருக்கு. நா ஆரம்பத்திலேந்தே சொகுசா செல்லமா சகல வசதிகளுடனு வளர்ந்தவ இல்லியா என்னால இப்படி கஷ்ட்டப்பட முடியுமாடி?அதுவும் கைராசி இல்லேன்னா பேரும் கெட்டுப்போகும் ஒரு சி. ஏ. படிச்சு பேங்க்ல ஆபீசரா 10- டு 5 வேலைன்னா ஓ. கே. அதுதான் எனக்கு சரிவரும் . ஆமா உனக்கு மேலே படிக்க ஆசை இல்லியாடி?




நித்யா இந்தவிஷயத்தில் நான் உன் எண்ணங்களிருந்து நேர்மாறானது என் எண்ணம். எனக்குமட்டும் பணவசதி இருந்தா நான் தேர்ந்து எடுப்பது இந்த டாக்டர் படிப்பைத்தான்.சின்ன வயசிலேந்தே என்லட்சியமே, ஏன் வெறின்னு

கூட சொல்லலாம்.டாக்டர் படிப்புதான் . ஆனா என்ன செய்ய பணம்னா ஆட்டிவைக்குது. நீ ஈசியா சொல்லிட்டே காரணங்களை. அது உன் விருப்பம். ஆனா கொஞ்சம் யோசிச்சுப்பாரு, உடல் உபாதையுடன், வலி வேதனைகளுடன் வருபவர்களை, நம்ம படிப்பால்,னம்மால் தீர்க்கமுடிந்தால் அது எவ்வளவுநல்ல விஷயம்.னம்மாலும் மற்றவர்கள் படும் துன்பங்களை த்தீர்க்கமுடிகிரதே? வலி நீங்கி மன நிறைவுடன் செல்பவர்களைப்பார்த்தால் நம் மனசுக்கு எவ்வளவு அமைதி கிடைக்கும்.எத்தனை வியாதி அவஸ்தியுடன் வருபவர்களையும் நாம் படிக்கும் படிப்பால் குணப்படுத்தி அவர்களுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் கொடுக்கமுடியுமே அதே சமயம் நம் குண

நலன்களிலும்னல்லவித மாறுதல்களை நம்மால் உணற முடியும்.வேதனைப்படுபவர்களை சந்தித்து சந்தித்து மற்றவர்களிடம் பொறுமையாகவும் சாந்தமாகவும் பேசும் குணம் படிப்படியாக வந்துவிடும். நாம்

கவனமாக செயல் பட்டால் மக்கள் நம்மை தெய்வத்துக்கு சம்மாக மதிப்பார்கள். என்னைப்பொறுத்தவரை டாக்டர் படிப்புதான் உயர்ந்தபடிப்பு என்பேன் என்றாள் கன்யா.

ஏ அப்பா, உன் மனசுல இவ்வளவு ஆசை இருக்கா, ஏன் இத்தனை நாள் சொல்லலேடிஎன்றாள் நித்யா.

போடி முடவன் கொம்புத்தேனுக்கெல்லாம் ஆசைப்படக்கூடாது இல்லியா அதான் உன்கிட்ட கூட சொல்லல்லே என்றாள்

சரிடி நேரமாச்சு நான் கிளம்புரேன் என்று சொல்லி நித்யா வீடு போனாள்.

இரவு சாப்பாட்டின்போது நித்யா தன் அப்பாவிடம் டாடி உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனுமே என்றாள். நான் என்ன சொன்னாலும் மறுக்காம செய்வீங்களா டாடி? என்றாள்.

என்னடா செல்லம், நீகேட்டு நான் என்னிக்காவது மறுப்பு சொல்லி இருக்கேனா தயங்காம சொல்லுடா என்றார்.

வந்து டாடி......... எனக்கு மெடிக்கல் படிக்க விருப்பம் இல்லே. என்று தயங்கியவாரே ஆரம்பித்தாள் .

ஏண்டா செல்லம் பிடிக்கலியா?வேர எதுல சேரனுமோ சொல்லுடா உன் விருப்பத்துக்கு மாறா நான் என்னிக்குமே எதுவுமே செய்யமாட்டேண்டா என்றார்.

டாக்டர்படிப்பு தனக்கு ஏன் பிடிக்கலை என்பதற்கு விரிவாக காரணங்களை சொல்லிவிட்டு என்ஃப்ரெண்ட் கன்யா இருக்கா இல்லியாப்பா அவளுக்கு மெடிகல் சேர ரொம்ப ஆசை இருக்கு ஆனா வசதி இல்லே.அவளுக்கு அந்த ஸீட்டை வாங்கி கொடுங்க டாடி. என்றாள் டாடியு மகள் விருப்பப்படியே

கன்யாவை மெடிக்கலில் சேர்க்க எல்லா ஏற்பாடுகளும் செய்தார்.

மறு நாள் நித்யா வீடு வந்த கன்யா என்னடி நித்தி நம்ம ஃப்ரெண்ட் ஷிப்பை இப்படி கடனாளி ஆக்கிட்டியே என்னை.ஆனாலும் உனக்கு உனப்பாவுக்கும் ரொம்ப பெரிய மனசுடி நான் சம்பாதிக்க ஆரம்பித்ததும் உன்கடனை முதலில் அடைப்பதுதான் என் வேலையா இருக்கும். உங்களை என் வாழ் நாள் பூராவும் மறக்கவே மாட்டேண்டி என்று கண்களி நீர் வழிய கன்யா நித்யாவை கட்டிக்கொண்டாள்.

Monday, November 7, 2011

டாக்டர் 1



வெங்காய சாம்பாரின் வாசனை அந்த சாப்பாட்டு அறையையும் தாண்டி தெருவில் போவோர் வருவோரின் நாசியையும் கவர்ந்தது.

டாடி, நம்ம தாமு பண்ற சமையல் மாதிரி வேர யாராலயுமே பண்ணமுடியாது

நீங்க என்ன சொல்ரீங்க டாடி?

அதில் என்ன சந்தேகம் அம்மா?அதிலயும் நீ பாசானசந்தோஷத்தில் ஜமாய்ச்சுட்டான். என்று அப்பாவு மகளும் மாறி, மாறி சமையல் கார தாமுவை புகழ்ந்து தள்ளினார்கள்.

தாமு சங்கோசத்தில் நெளிந்தவனாக என்ன குழந்தே,என்னப்போயி இப்படில்லாம் புகழரே. நா எப்பவும் போலத்தான் செய்ஞ்சிருக்கேன். என்றான்

தாமு உனக்கு என்ன வேனும்னு கேளேன். உனக்கு ஏதானும் தரனும்போல இருக்குன்னு நித்யா கேட்டாள்.

குழந்தே நீ பெரிய படிப்பெல்லாம் படிச்சு பெரிய கைராசிக்கார டாக்டரா ஆக்னும்மா.உன் குழந்தைக்கும் என்கையால் தான் முதல் சோறு ஊட்டனும்

எனக்கு வேர என்னவேனும் சொல்லும்மா?





உடனே நித்யாவின் அப்பா ,னித்யா பாத்தியா ஒன்னு சொல்லவே மறந்துட்டேன் நல்ல வேளை தாமு நினைவு படுத்தினான். உனக்காக மெடிக்கல் ஸீட்டுக்கு நிறைய டொனேஷன்லாம் கொடுத்து ஏற்பாடு செய்திருக்கேன் பலத்த சிபாரிசிக்கும் தெரிந்தவர்களிடம் சொல்லி வச்சிருக்கேன்.ரொம்ப அலைஞ்சு திரிஞ்சு ஸீட் வாங்கி இருக்கேன்மா தாமுச் சொல்ராப்ல நீ கைராசியான பெரிய டாக்டரா வரனும்மா. நல்லா பேரும் புகழும் வாங்கனும்மா. என்றார்.

இதைக்கேட்டதும் நித்யாவின் முகம் வாடி விட்டது. பதில் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டு எழுந்துபோனாள்.

நித்யாவின் தகப்பனார் வரதன் நல்ல பணவசதி படைத்தவர்தான். ஒரே செல்லமகள் நித்யா.அவள் 10-வயதில் அவ அம்மா இறந்தபிறகு அப்பாதான் அவளுக்கு எல்லாமாக இருந்தார். வீட்டில் அப்பா, மகளைத்தவிர சமையலுக்கு தாமு, அவனை வீட்டில் ஒருவனாகவே நடத்தி வந்தார்கள். இது தவிர தோட்டக்காரன், கார் ட்ரைவர், வாச்மேன், வேலைக்காரிகளாலேயே வீட்டில் சிறிது நடமாட்டம் இருக்கும். நித்யாவுக்கு மனம் விட்டு பேசு ஒரே தோழியாக எதிர் வீட்டு கன்யா இருந்தாள். இருவரும் ஒன்றாம் வகுப்புமுதல் சேர்ந்தே படித்து இன்று காலேஜ் படிப்புவரை தொடரும் நெருங்கிய தோழியாக இருந்து வந்தார்கள் இருவருமே போட்டி போட்டு நன்றாக படிப்பவர்கள் எப்பவும் முதல் ரெண்டாம் இடம் இவர்களுக்குத்தான்,




கன்யாவின் அம்மா 4- வீடுகளில் சமையல் வேலைகள் செய்து, அப்பளாம் வடாம் செய்துவிற்று பெண்ணை இவ்வள்வுதூரம் கஷ்ட்டப்பட்டு படிக்கவைத்தாள். நித்யா கன்யாவைதேடி வந்தசமயம் அம்மாவு பெண்ணும் வடாம் தயார் செய்வதில் ஈடுபட்டிருந்தார்கள். நித்யாவைப்பார்த்ததும் வாடி வா

நானே உன் வீட்டுக்கு வரனும்னு இருந்தேன் நீயே வந்துட்டே. பாத்தியா நாம இருவருமே 95% எடுத்து பாசாகி விட்டோம். கங்க்ராட்ஸ். மேல என்ன செய்யப்போரே?ரொம்ப சந்தோஷமா இருக்கில்லியாடின்னு கன்யா கேக்கவும் ஆமாடி ஒருபக்கம் சந்தோஷம் தான். ஒருபக்கம் ஒரே யோசனையாவும் இருக்குடீ. என்றாள். நித்யா

உடனே கன்யா என்னடி எவ்வளவுசந்தோஷமான விஷயம் நீ சுரத்தே இல்லாம இருக்கியே என்னாச்சு என்கிட்ட சொல்லமாட்டியா? என்றாள்

அதெல்லாம் ஒன்னுமில்லே, நீ மேற்கொண்டு என்னபடிக்கப்போரே அதைச்சொல்லு முதல்ல என்றாள் நித்யா.

நானா, என்ன சொல்ல இவ்வளு படிக்க வைக்கவே என் அம்மா ரொம்ப கஷ்ட்டப்பட்டுட்டா. இதுக்கும் மேல அவங்களை கஷ்ட்டப்படுத்த விரும்பலே.

டைப் ஷார்ட் ஹாண்ட் படிச்சு ஏதானும் கம்பெனில ஒரு வேலைல சேரவேண்டியதுதான். என்று கன்யாவும் சுரத்தில்லாமலே பதில் சொன்னாள்                                                                                                                                        (தொடரும்)

Wednesday, November 2, 2011

ருசி.

என்னம்மா இது டெய்லி இரவு வெரும் மோர் சாதமும் ஊறுகாயும் மட்டுமே போட்டு போரடிக்கரே. வெரைட்டியா பண்ணக்கூடாதா?  யாரு ரமணியா படிக்கர வயசில நாக்கு ருசி தேடினா படிப்பு அவ்வளவுதான்.போட்டதை தின்னு.மோருக்கும் ஊறுகாய்க்கும் ஆலாப்பறக்கும் நேரமும் வரும் அப்போ தெரியும் அதோட அருமை. அப்பாவின் கோபக்குரல்.
எதை வேணாலும் சாப்பிடலாம் அப்பா  இந்த மோறும் ஊறுகாயும் அலுத்துப்போகுதுப்பா.  இதுமகன் ரமணி.
 பேசாமபோட்டதை தின்னுட்டுப்போ. இல்லேன்னா ஒன்னும் சாப்பிடாமலேயே போய்க்கோ.அப்பாவுக்கு கோபத்தில் மூக்கு சிவந்தது.
  ஏங்க, வயசுப்பிள்ளை வாய்க்கு ருசியா கேக்கத்தான் செய்யும். இப்பதானே சாப்பிடர வயசு.இதுக்குப்போயி ஏங்க இப்படி கோவப்படுரீங்க? இது அம்மா.
வந்துட்டேல்லே?ச்ப்போர்ட்டுக்கு. குட்டி சுவர்தான் பிள்ளை.எப்ப கண்டிக்கும் போதும் இப்படி ஊடேல வராதேன்னு சொல்லி இருக்கேன்ல? ஏண்டி உனக்கு புரியமாட்டேங்குது? இது அப்பாவின் கோபம்.


என்னை ஆதரிப்பவர்கள் . .