Pages

Tuesday, October 25, 2011

1960- ல் தீபாவளி (தலைதீபாவளி)













 தலைதீபாவளி கல்லிடைக்குறிச்சியில்தான் கொண்டாடினோம். கல்யாணம் ஆகி 6-வது மாசமே தீபாவளி வந்தது.பூனாவிலிருந்து நான்
 கணவர், மாமியார், மாமனார், மாமியாரின் அப்பா என ஐவரும் கிளம்பி
 கல்லிடை போனோம். எங்கதாத்தா அஞ்சு பேருக்கும் பர்ஸ்ட் க்ளாசில்
 டிக்கட் எடுத்துதந்தாங்க. பூனா டு மெட்ராஸ் ஒன்னரை நாள் ஆகும் மெட்ராஸ்டு திருனவேலி ஒன்னரை நாள் ஆகும். திருனவேலி டு கல்லிட
 பாசஞ்சர்தான்.புகுந்த வீட்டில் வெளியில் எதுவும் வாங்கி சாப்பிட மாட்டாங்க. வீட்லேந்தே (பத்தில்லாம) சப்பாத்தி, பூரி,சட்னி,அவல் வெல்லம் கலந்து என்று மூனு  நாளுக்கு தேவையான உணவுகள் தயார் செய்து எடுத்துக்கனும். அது தவிர ரெண்டு ப்ளாஸ்க் நிறைய  சூடுதண்ணி கொதிக்க கொதிக்க எடுத்துண்டு பால் பவுடர், ப்ரூ காபி பொடி ஜீனி எல்லாமும் தனியே எடுதுப்போம் இடையில் கொறிக்க கொஞ்சம் டிட்பிட்ஸ் எல்லாமும் உண்டு.
அந்தக்கால பர்ஸ்ட்க்ளாஸ் கம்பார்ட்மெண்ட் எல்லாம் தனி ரூம்போல விஸ்தாரமா இருக்கும் அட்டாச்டு பாத்தும் இருக்கும்.

Saturday, October 22, 2011

திருட்டு 2

சொன்னபடியே மாதவன் காரில் வந்து ரமணனை தன் வீட்டுக்கு கூட்டிப்போனார்.ஆபீசிலிருந்து கொஞ்சம் தள்ளியேதான் அவர் வீடு இருந்தது. வீடு நல்ல விஸ்தாரமாக சுத்தமாக இருந்தது. மாதவனின் மனைவியும் வாசலில் வந்து வாங்கோன்னுஅன்பாக அழைத்தாள்.15-வயதில் ஒரு பெண் குழந்தையும் வந்து ஹாய் அங்கிள் என்றுதன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள்.மூவர் அடங்கிய சின்ன குடும்பம்தான். ரமணன்
மாதவனிடம் எந்த ஊரு அப்பா அம்மா எல்லாம் எங்க இருக்காங்கன்னு சாதாரணமாகப்பேசிவிட்டு ஆமா மாதவன் வீடு நல்ல பெரிசா இருக்கே வாடகை அதிகமிருக்குமே என்றார்.மாதவன் பதில் சொல்ல வாய் திறக்கும் முன்பாகவே நல்லா சொன்னீங்க நாங்க எதுக்குவாடகை வீட்ல இருக்கனும்? இது சொந்தவீடுதான். போனவருஷம்தான் கட்டிமுடிச்சோம்.
எல்லாமே இவரின் சம்பாத்த்யம்தான்.என்று மாதவனின் மனைவி பெருமையாகச்சொன்னாள்.வீட்டிலும் எல்லாவிதமான விலை உயர்ந்த சாமான்களும் இருந்தன.மாதவன் மனைவியும்காதிலும் மூக்கிலும் வைரம் டாலடிக்க செழிப்பாகவே இருந்தாள். சரி வருமானத்தில் மிச்சம்
பிடித்து கட்டும் செட்டுமாக குடித்தனம் செய்து வாங்கி சேர்த்திருப்பாங்க போல இருக்குன்னு ரமணன் மனதில் நினைத்துக்கொண்டார்.அதேசமயம் மாதவனின் மூடும் மாறிவிட்டதையும்மனதில் குறித்துக்கொண்டார்.

Wednesday, October 19, 2011

திருட்டு 1

லஞ்சுக்கான சைரன் ஒலி கேட்டதும் அவரவர்கள் கொண்டுவந்தடிபன் கேரியரை திறந்தனர். மதராஸி, பெங்காலி, மராட்டி, பஞ்சாபி சாப்பாடு ஐட்டங்களின் வாசனை மூக்கைத்துளைத்தது.பேசிக்கொண்டே எல்லாரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அது ஒரு பெரிய தொழிற்சாலை.வெடிமருந்துகள் தயார்பண்ணும் தொழிற்சாலை ஆதலால் ஊரைவிட்டு ஒதுக்குப்புறமாக அமைந்திருந்தது. நிறையபேரு அங்கு வேலை பார்த்துவந்தனர். சிலர் ஆபீஸ் குடியிருப்பிலும் சிலர் நகரத்தில் சொந்தவீடு கட்டிக்கொண்டும் வேலைக்கு வந்துபோய்க்கொண்டு இருந்தனர். காலை 9மணிமுதல் மாலை 5 மணிவரை வேலை நேரம். மதிய லஞ்ச் 1-மணி நேரம்.

Monday, October 17, 2011

அவசரம்

கிருஷ்னன் செண்ட்ரல் கவர்மெண்டில் வடக்கே வேலை பார்ப்பவர். ஒவ்வொரு வ ருடமும் ஆபீசில்  L.T.C. போட்டு மனைவி இரண்டு குழந்தைகளுடன் தமிழ் நாட்டில் முக்கிய இடங்களுக்கு போய் சுற்றிப்பார்த்து வருவார். அதுபோல இந்த வருடமும் கன்யாகுமாரி, மற்றும் பக்கத்தில் இருக்கும் சுற்றுலா தலங்களுக்கும் கிளம்பிபோனார்கள். மனைவி மீரா, பையன் ரவி 10- வயது, பெண் வாசவி,15 வயது. எல்லாஇடங்களும் சுற்றிவிட்டு கடைசியாக கன்னியாகுமாரியில் இரண்டு நாட்கள் தங்கி விவேகானந்தாராக்ஸ், காந்தி மண்டபம் குமரி அம்மன் கோவில் எல்லாம் சுற்றி, கடைகளில் கொஞ்சமாக பர்ச்சேசும் முடிந்து அன்று சாயங்காலம் கிளம்பினார்கள். முதலில் கேரளாவில் பார்க்கவேண்டிய இடங்கள் எல்லாம் பார்த்ததிலேயே எல்லாருக்குமே மனசு பூராவும் உற்சாகமா இருந்தது.

Wednesday, October 12, 2011

தவிப்பு 3

ரெண்டுமாசம் இப்படியே போச்சு. பிறகு பெண்ணுமாப்பிள்ளையும் வந்து அந்தப்பையனை டாக்டரிடம் கூட்டிப்போனார்கள். எல்லா டெஸ்ட்டும் பண்ணிப்பார்த்ததில் ஹெல்த் எல்லாம் சரியாகவே இருந்தது. மெண்டலி கொஞசம் ப்ராப்லம் தெரிந்தது. டாக்டர் அந்த மாப்பிள்ளை பையனிடம் நீங்க ஒரிஸ்ஸாவில் இந்தப்பையனை பாத்துக்கொண்டிருந்தவா கிட்ட விவரம் ஒன்னுமே கேக்கலியான்னார். ஐயோ அதையேன் கேக்குரீங்க அவங்க பேசுர பாஷையே புரியல்லே. அவங்களுக்கோ நான் பேசுவதே புரியல்லே. என்ன கேக்க ?  அப்போ இந்தபையனுக்கு என்ன தான் ஆச்சுன்னு ஒன்னுமேதெரியல்லியான்னார். டாக்டர். அவங்க யாரு இந்த அட்ரெஸ் எப்படிஅவங்களுக்குத்தெரிஞ்சது எப்படி தகவல் அனுப்பினாங்கன்னே இன்னிக்கு வரை தெரியல்லே. ஆண்டவன் கருணைன்னுதான் நினைக்கனும். இந்த 5 வருஷ்மா இந்தப்பையன் எங்க இருந்தான் எப்படி இருந்தான்னு ஒன்னுமே தெரியவே இல்லை. என்று மாப்பிள்ளைப்பையன் டாக்டரிடம் சொல்லவும் அவர் சரி அது தெரிஞ்சு நீங்க என்ன பண்ணப்போரீங்க அதைபத்தி எந்த ஆராய்ச்சியும் பண்ண வேண்டாம் அதை அப்படியே விட்டுடலாம்.


அந்தப்பையனாலயும் எதுவும் சொல்ல் முடியல்லே . இப்ப கிடைச்சுட்டானே . நடந்தவை நடந்தவையாக வே இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்று டாக்டர் சொல்லவும் ஆமா அதுவும் சரிதான்னு இவங்களும் அதுபத்தி அதிகம் அலட்டிக்காம விட்டுட்டாங்க. ஆமா அதுக்குத்தானே உங்க கிட்ட கூட்டிவந்திருக்கோம் என்று சொன்னான்.மாப்பிள்ளைப்பையன்.டாக்டராலயும் எதுவும் சரியா சொல்ல முடியல்லே. மருந்து மாத்திரை எழுதிக்கொடுத்தார் அரைகுறைமனதுடனே வீடு வந்தார்கள்.அந்தப்பையனின் அக்காவும் மாப்பிள்ளையும் அந்தப்பையனிடம் அன்பாக பக்குவமாக பேசினார்கள். மாப்பிள்ளைப்பையன் ஆபீசிலேயே ஒரு வேலையும் போட்டுக்கொடுத்தான். வேலைக்கு போய்வந்தாலாவது அவனிடம் நல்ல மாற்றம் தெரியுதான்னு பாக்கலாமேன்னு. அதுக்கு நல்ல சம்பளமும் கொடுத்தான். அந்தப்பையனும் எந்த தகறாறும் செய்யாமல் வேலைக்கு ஒழுங்கா போயி வந்தான். அவனின் சம்பளம் அந்தக்குடும்பத்துக்கு ரொம்பவே தேவையாக இருந்தது.

Monday, October 10, 2011

தவிப்பு 2

அந்த லெட்டரை மாப்பிள்ளையிடம் கொண்டு காட்டினார் அந்த அப்பா. மாப்பிள்ளைப்பையனும் நான் போயி பாக்குரேன்னு சொல்லி ஒரிஸ்ஸா கிளம்பி போனான். எங்கியோ ஒரு ஒடுக்குப்புறமாக இருந்தது அடரஸ்.   அங்கு 10- அடிக்கு 10-அடி ஒரு ரூமில் ஹிப்பிகள் போல ஆண்களும் பெண்களுமாக 10- பேரு கஞ்சா புகைத்துக்கொண்டு மயக்கத்தில் ஆடிக்கொண்டு இருந்தார்கள் யாருக்குமே சுய நினைவு இருப்பதுபோலவே தெரியல்லே இந்தப்பையன் மட்டும் கோழிக்குஞ்சு போல ஒரு ஓரமா ஒட்டிண்டு உக்காந்து இருந்தான். ரூம்பூராவும் புகைமண்டலம்தான்.அங்குபோயி அந்தப்பையனிப்பார்த்ததும் மாப்பிள்ளைப்பையனுக்கு ரொம்ப சந்தோஷமாச்சு. உடனே அவனைக்கூட்டி வந்தா. அந்தப்பைனை அங்கேந்து ஏன் கூட்டிப்போரேன்னு கூட யாரும் எதுவும்கேக்கவும் இல்லே கண்டுக்கவும் இல்லே. அந்தமாப்பிள்ளைப்பையனோ பக்கத்தில் இருவரிடம் பேச்சுக்கொடுத்துப்பார்த்தான் இவர் பேசும் பாஷை அவங்களுக்குத்தெரியல்லே அவர்கள் பேசும் பாஷை இவருக்கு புரியல்லே.சரி பையனாவது கிடைச்சானேன்னு அவனைக்கூட்டிண்டுவரும்போது

Friday, October 7, 2011

தவிப்பு.

கொஞ்சம் வருஷம் முன்பு எனக்குத்தெரிந்தவர் வீட்டி நடந்த சம்பவம் இது.
 கணவன், மனைவி வயதுக்குவந்த பெண் ஒன்று, ஆண் ஒன்று என்று சின்னக்குடும்பம் அது. பெண்ணும் பையனும் ஒரு தனியார்  நிறுவனத்தில் வேலை பார்த்து கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் அவர்கள் குடும்பவாழ்க்கை நடந்து வந்தது. பையன் 21, வயது, பெண் 23 வயது.குடும்பத்தலைவர் வெலைக்கு ஏதும் செல்வதில்லை.ஆரம்பத்தில் மஸ்கட்டில் நல்ல வேலையில் இருந்து நன்கு சம்பாதித்தவர்தான். அவரின் போதாத வேளை அந்தவேலை போய்விட்டது. 4-பேர் இருக்கும் சிறு குடும்பத்துக்கு பையன், பெண்ணின் சம்பளம் போதுமானதாக இருக்கவே அவர் வேலைக்கு போக எந்தமுயற்சியும் எடுக்கவே இல்லை. வாடகை வீடுதான். ஒண்டிக்குடுத்தனம் தான். அமைதியாக போய்க்கொண்டிருந்த குடும்பத்தில் பெண்ணால் சிறு குழப்பம். வேறு பாஷைப்பையனை லவ் பண்ணி அவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிட்டா. அவர்களிடமோ பெண்கல்யாணத்திற்கென்று ஒருபைசா கூட சேமிப்பு கிடையாது

Sunday, October 2, 2011

அஞ்சலி

ஒரு நல்ல மனிதரின் நினைவுகள். இன்று அக்டோபர் 2...  10-வருடம் முன்பு அவர் இந்த தேதியில் தான் காலமானார். பார்க்கும் அனைவரிடமும் அன்புமட்டுமே காட்டத்தெரிந்தவர். வீட்டுக்கு ஒரே பிள்ளயாக பிறந்ததால் அனைவருடனும் சகோதரபாச்த்துடனே பழகுவார்.யாருக்கு எந்த உதவி தேவைன்னாலும் முதல் ஆளாக போய் உதவுவார். சரியான வயதில் திருமணம் குழந்தைகள் என்று நடந்தது. கடவுள் பக்தியில் கன்மூடித்தனமானபக்தி உள்ளவர்.கோவிலில் ஸ்வாமி ஊர்வலம் இருந்தால்  ஸ்வாமிக்கு அல்ங்காரம் எல்லாம் சிறப்பாகப்பண்ணுவார். வீட்டிலும் ஒரு பண்டிகையும் பண்ணாமல் இருந்ததில்லை பூஜை புனஸ்காரம் எல்லாம் முறையாகப்பண்ணிவருவார்.தாராளமாககுழந்தைச்செல்வங்களும்பிறந்தார்கள்.
குழந்தைகளைச்சிறந்தமுறையில் வளர்த்து நன்கு படிப்பு வேலை திருமணம் என்று தன்கடமைகளைமிகச்சிறப்பாகவே செய்து முடித்தார்.செண்ட்ரல் கவர் மெண்ட் உத்யோகத்தில் இருந்ததால் ஊர் ஊராக மாறி, மாறிபோகவேண்டி இருந்தது.எல்லா இடங்களிலுமே அவருக்கு மிக நல்ல பெயர் கிடைத்தது.

என்னை ஆதரிப்பவர்கள் . .