Pages

Thursday, December 29, 2011

A ? 3 ( END)

 எப்பாது விடியும் என்று காத்துக்கொண்டிருந்தவர்போல விடிந்ததுமே எழுந்து மகன் நவீனையும் குளிப்பாட்டி ஸ்கூலுக்கு தயார் பண்ணினார். ஏதேது இன்னிக்கு மழைதான் கொட்டப்போகுது.என்று மனைவி கேலியாக கூறவும் மனசுக்குள் சிரித்துக்கொண்டார் பால்ராஜ். நேற்று நவீனுக்கு ஹோம் ஒர்க் சொல்லிக்கொடுத்ததில் எவ்வளவு பெரிய க்ளூ கிடச்சிருக்கு என்று நினைத்தார். டிபன் சாப்பிட்டு ஸ்டேஷன்  சென்றவர் அங்கும் செய்ய வேண்டிய சில அவசர வேலைகள் முடித்துவிட்டு 204- வண்டி எடுங்க என்றார். நேராக பூஜா வீடு. நேற்றுபோலவே வீடு அமைதியாக இருந்தது. வாச்மேனும் தோட்டக்காரனும் வாங்க ஐயா என்று வரவேற்றனர். நேராக ஹால் சோபாவில் சென்று அமர்ந்தார். கிச்சனில் இருந்து இட்லி வேகும் மணமு ம்பில்டர்காபி மணமும் வந்து அவர் நாசியை நிறைத்தது.வேலைக்காரர்கள் அனைவருக்குமே மூன்று வேளை ச்சாப்பாடும் இங்கேயேதான் தயார் செய்து கொடுப்பார்கள். பெரியம்மாவை ஹாலில் காணோம். இவர் வந்த சப்தம் கேட்ட சமையல்காரம்மா வாங்க சார்  காபி குடிக்கிரீங்களா என்றாள். காபி வாசனை ஹால்வரை வந்து மூக்கைத்துளைக்குதே கொண்டு வாங்கம்மா என்றார்.  நுரை ததும்ப சூடான சுவையான காபி கொண்டு தந்தாள் பெரியம்மா எங்கேம்மா. என்றார். மாடில பூஜை ரூமில் இருக்காங்க ஐயா இதோ போயி கூப்பிடுரேன் என்று மாடியில் போய் இவர் வந்திருக்கும் தகவல் சொன்னாள்.

Monday, December 26, 2011

A ? 2

 இன்ஸ்பெக்டர் பால்ராஜ் முடிக்க வேண்டிய பார்மாலிட்டீசெல்லாம் முடித்து பாடியை ஆம்புலன்சில் ஏறி அனுப்பியதும் அனைவரும் அழுதவாறே கலைந்து சென்றனர். ஸ்டேஷன் சென்ற இன்ஸ்பெக்டர், அன்றைய வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பிபோனார். வீட்டிலும்   சாப்பிடும்போதும் படுத்தபின்னும் கூட பூஜா பொண்ணின் முகம்தான் அவர் நினைவில் வந்து கொண்டே இருந்தது. சே என்ன ஒரு முட்டாள் தனம் பண்ணிட்டேன் ஏதோ குழந்தைப்பேச்சுன்னு எண்ணிட்டேனே. நான் கொஞ்சம் சீக்கிரமே போயிருந்தா அந்தப்பொண்ணைக்காப்பாத்தி இருக்கலாமோன்னுல்லாம் நினைவுகள். மறு நாள் டூட்டிக்கு வந்ததுமே ஃபோரன்சிக்கு போன் பண்ணி என்ன சார் ரிப்போர்ட் ரெடிபண்ணிட்டீங்களா என்றார்.  ஆமா சார் அதான் கொண்டு வந்திட்டு இருக்கேன். என்று உள்ளே வந்தார். சார் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் என்ன சொல்லுது? என்ரார் பால்ராஜ். சார் முகத்தை ஒரு மெலிசு பொருளால்  அழுத்தினதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் ஏற்பாட்டிருக்கு. வேர எந்தஒரு நகக்கீரலோ மற்ற அடையாளங்களோ ஏதுமில்லே. கிட்டத்தட்ட 5- நிம்ஷம் போராடியிருக்குஅந்தக்குழந்தை. ஒருவேளை அது தலகானியாகவும் இருக்கலாம். வேர ஃபிங்கர் பிரிண்ட்ஸ் ஏதும்  கிடைக்கல்லே இந்தாங்க சார் ரிப்போர்ட் என்று பால் ராஜிடம் கொடுத்து விட்டு கிளம்பி வாசல் வரை போனவர் சார் இன்னொரு விஷயம் அந்தப்பொண்ணு இடது உள்ளங்கையில் சிகப்புகலர் ஸ்கெச் பென்னால்  A  என்ற எழுத்து இருந்தது. சரி அந்தப்பொண்ணுகாலில் கொலுசு ஏதாச்சும் இருந்ததா? என்று பால்ராஜ் கேட்டார். இல்லே சார் கான்வெண்ட்ல படிக்கர குழந்தை இல்லியா கொலுசோ கையில் வளையலோ ஏதுமே இல்லே. என்று அவர் கிளம்பி போனார்.

ஓ, அப்போ அந்தப்பொண்ணு ஒரு சின்ன  க்ளூ  கொடுத்திருக்கா. இப்ப  A- யில் ஆரம்பிக்கும் பேர் உள்ளவங்களை தரோவா விசாரிக்கணும். என்று 204- வண்டி எடுங்க என்றார். நேராக பூஜா வீடு. அந்த வீடே அமைதியாக இருந்தது. வாச்மேன் ஸ்டூலில் அமர்ந்து அன்றைய தினசரி படித்துக்கொண்டிருந்தார். தோட்டக்காரர் பெருக்கி குப்பை அள்ளிப்போட்டு மரம் செடிகளுக்கு பைப் மூலம் தண்ணீர்பாய்ச்சிக்கொண்டிருந்தார்.இன்ஸ்பெக்டர் உள்ளே போனதும் வீட்டின் பெரியம்மா ஹாலிலேயே உக்காந்திருந்தார்கள் வாங்க இன்ஸ்பெக்டர். என்ன விஷயம்.அம்மா. இங்க யாரெல்லாம் இருக்காங்க எனக்கு ஒவ்வொருவரையா விசாரிக்கணும் என்றார். இப்போ நான் இருக்கேன். இவ்வள்ளவு நாள் என் செல்லம் இருந்தா என்று சொல்லும்போதே அந்தம்மாவின் கண்களில் கண்ணீர், அப்புர,ம் வாச்மேன், தோட்டக்காரன், ட்ரைவர், வேலைக்காரி, சமையல் காரின்னு என்று 5- பேரும் பின்னால சர்வெண்ட் குவார்ட்டரில் தங்கி இருக்காங்க. என்றாள் பெரியம்மா. சரி முதல்ல வாச்மேனைக்கூப்பிடுங்க் அம்மா என்றார். ஆண்டனி இங்க வாப்பா ஐயா உங்க கிட்டல்லாம் எதோ விசாரணை செய்யணுமாம் என்றாள். பவ்யமாக வந்து நின்றார் வாச்மேன். கிட்டத்தட்ட 40- வயசு இருக்கலாம் போன்ற தோற்றம். சரி உங்க பேர் என்னங்க என்றார் பால் ராஜ். ஆண்டனிங்க என்றார். ஓ இவர்பேரு A- ல தான் ஆரம்பிக்குது . நீங்க எவ்வளவு வருஷமா இங்க வேலை செய்யுரீங்க? என்றார்.பால்ராஜ். ஐயா கடந்த 5- வருஷமா இங்கதாங்க வேலை செய்யுரேன். நல்ல சம்ப்ளம் மூனூவேளை சாப்பாடு துணிமணி எல்லாமே இங்கியே தந்துடுவாங்க இருக்க இடமும் பின்னாடியே கட்டி தந்திருக்காங்க. ரொம்ப சந்தோஷமா தான் இங்க வேலை பாக்குரேன் ஐயா பூஜா பொண்ணு எங்க கூடல்லாம் ரொம்ப அன்பாபேசிப்பழகுவாங்க ஐயா எந்தப்பாவிக்கு அவங்களை இப்படி இறக்கமில்லாம கொல்ல மனசு வந்ததோன்னு கண்ணீர் விட்டார். இவன் பேச்சில் தெரிந்த உண்மையால் மேற்கொண்டு அவரை விசாரிக்காமல், சரி தோட்டக்காரரைக்கூப்பிடுங்க என்றார். 50- வயசுக்கும் மேல் இருக்கும் தோட்டக்காரர் உள்ளே வந்தார். ஐயா கும்புடரேங்க.

 உங்க பேரு என்னங்க என்றார் பால்ராஜ் அண்ணாமலைங்க என்றார் தோட்டக்காரர். அடடா இவர்பேரும்  A-லயே ஆரம்பிக்குதே. என்று எண்ணி அவரையும் வாச்மேனிடம் கேட்ட கேள்வியைக்கேட்டார். அவரும் ஆண்டனி சொன்னதுபோல சொன்னார். சரி நீங்க போங்க என்று சொல்லிவிட்டு ட்ரைவரைக்கூப்பிட்டார். உங்க பேரு என்னங்க?ஆனந்த் ஐயா என்றார் ட்ரைவர் ஐயோ தலைய சுத்துதே. எல்லார் பேருமே A -  லெட்டரில் ஆரம்பிக்குதே. என்று நினைத்தவர் உள்ளே வேலை செய்து கொண்டிருந்த சமையல்காரம்மா, வேலைக்காரி எல்லாரையும் விசாரித்தார்.அவர்கள் பெயர்களும் ஆண்டாளம்மாள், அஞ்சலை என்றே இருந்ததில் பால் ராஜுக்கு ஏக குழப்பம். சரி பெரியம்மா உங்க பேரு என்னங்க என்றார் அம்புஜம் சார் என்றாள்  பால்ராஜ் தலையை உலுப்பியபடி நான் மறுபடி நாளைக்கு வரேன்னு கிளம்பினார். ஸ்டேஷன் போனதுமே கான்ஸ்டபிள்,  சார் ஏதானும் க்ளூ கிடைச்சுதா என்றார் எங்க?, குழப்பம்தான் நிறைய ஆச்சு அங்க இருக்கரவங்க எல்லார் பேருமே  A-  லதான் ஆரம்பிக்குது. எனக்கு ஒன்னுமே புரியல்லே. திரும்பவும் முதல்லேந்தே தொடங்கணும் என்று அலுப்புடன் சொன்னார். சார் உங்க மிஸஸ் ரெண்டு மூணுவாட்டி போன் பண்ணிட்டாங்க நீங்க வீட்டுக்கு கிள்ம்புங்க. நாங்க பாத்துக்கரோம் என்று கான்ஸ்டபிள் சொல்லவும் பால்ராஜுக்கும் வீட்டுக்குப்போய் கொஞ்சம் ஓய்வு எடுத்தால் தேவலாம் போலத்தான் இருந்தது. உடனே கிளம்பி வீடு போனார்.

 ஹை அப்பா இன்னிக்கு சீக்கிரம் வந்துட்டாங்கன்னு அவர் 5- வயது மகன் நவீன் வந்து காலைக்கட்டிக்கொண்டான். அவரும் ஆசையுடன் குழந்தையை த்தூக்கி செல்லம் கொஞ்சி விட்டு யூனிஃபார்ம் மாற்றி லுங்கியில் பெட் ரூம் நோக்கி போனார். அவர் மனைவி கிச்சனில் இரவு சாப்பாடு தயார் செய்து கொண்டிருந்தாள். அப்பா எனக்கு ஹோம் ஒர்க் சொல்லிக்கொடுக்கரீங்களா என்று நவீன் அவர் கால்களை கட்டிக்கொண்டு செல்லம் கொஞ்சினான். நவீன் அப்பா ரொம்ப டயர்டா இருக்கேன்பா. அம்மாவிடமே கேட்டுக்கோயேன் என்றார்.உள்ளேயிருந்து வந்த அவர்மனைவி ஏங்க நவீன் தூங்கிட்டு இருக்கும் போதே ஆபீஸ்போயிடரீங்க இரவு அவன் தூங்கின பிறகு வீடு வரீங்க இன்னிக்குதான் அதிசயமா சீக்கிரமே வந்திருக்கீங்க போலீஸ்காரன்னா வீடு குடும்பம் குழந்தை குட்டியை கவனிக்க கூட நேரமே கிடையாதா. எனக்கும் தெரியும் உங்க வேலை ரொம்ப டென்ஷன் நிறைந்தது  நேரம் காலம் பார்க்காம உழைக்கணும் எல்லாமே எனக்கும் தெரியுங்க ஆனா சின்னப்பையன் அப்பாவின் நெருக்கம் கிடைக்காம எப்படி ஏங்கிப்போரான் தெரியுமா. இப்பவும் நீங்க இப்படி விலகிப்போனா குழந்தை ரொம்ப ஏங்கி போவாங்க. ஒன்னம் வகுப்பு படிக்கு குழந்தையின் ஹோம் ஒர்க் ஒன்னும் கஷ்ட்டமா இருக்காது. நீங்க அவன்கூட சிரிச்சு பேசி ஹோம் ஒர்க் சொல்லிக்கொடுங்க. அவனுக்கும் சந்தோஷமா இருக்கும் உங்களுக்கும் ரிலாக்சா இருக்கும் என்றாள் ஆமா நீ சொல்வதும் சரிதான்மா. நானே சொல்லிக்கொடுக்கரேன் என்று  நவீன் வாப்பா. என்ன ஹோம் ஒர்க் இருக்கு எடுத்துட்டுவா அப்பா சொல்லித்தரேன் என்றார். குஷியாக உள்ளே சென்ற நவீன் ஸ்கூல் பேக்கை எடுத்துவந்து அப்பாவின் முபு அமர்ந்தான்.

அப்பா, நாம வீட்ல தமிழ்லதான் பெச்ணும்னு நீங்க சொல்வீங்க இல்லியா. ஆனா என்னை கான்வெண்டில் சேர்த்துபடிக்க வைக்கரீங்க. காம்பவுண்டுக்குள்ள நுழைஞ்சதுமே இங்க எல்லாரும் இங்கிலீஷ்தான் பேசனும்னு சொல்ராங்க. அப்பா அம்மான்னு சொல்வதற்குபதில் மம்மி டாடின்னு சொல்ல சொல்ராங்க. அதுபோல சித்தப்பா, மாமா, அத்திம்பேர் இவங்களுக்கெல்லாம் இங்கிலீஷ்ல என்ன சொல்லனும்பா? என்றான் நவீன். சிரித்தவாரே  இவங்களையெல்லாம் மொத்தமா அங்கிள்னு சொன்னாலே போறும்பா. என்றார் பால்ராஜ். ஓக்கே. அப்போ சித்தி அத்தை மாமிக்கு? அதுக்கு ஆண்டின்னு சொல்லணும்பா. என்றார். ஏ அப்பா ஒரே வார்த்தைல எல்லார்பேரும் அடங்கிடுமாப்பா/ என்று ஆச்சர்யமாக கேட்ட மகனிடம் ஆமாண்டா செல்லம் அதான் இங்கிலீஷ் ஷார்ட்& ஸ்வீட். .  இரவு சாப்பாடு முடிந்து படுத்த பால்ராஜின் மூளையில் ஒருமின்னல் ஓ அப்படியும் இருக்குமோ. இப்படி ஒரு கோணத்தில் யோசிக்கவே இல்லியே? என்று அமைதி இல்லாமலே தூங்கினார்.

Friday, December 23, 2011

A?

இன்ஸ்பெக்டர் பால் ராஜ் ஒரு கைதியின் கேஸ் கட்டை மும்முரமாக படித்துக்கொண்டிருந்தார்.ஸ்டேஷனில்  இன்ஸ்பெக்டரும் கூட 4 கான்ஸ்டபிள்களும் இருந்தார்கள். அப்போது டேபிளில் இருந்த போன் அடிக்கவும் இன்ஸ்பெக்டர் பால் ராஜ் எஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஹியர் என்றார். மறுபுற்மிருந்து  சார் இது பி,2 போலீஸ் ஸ்டேஷந்தானே என்று கேட்டது ஆமா, நீங்க யாரு உங்களுக்கு என்ன வேனும்? சார் நான் பூஜா மௌண்ட் கார்மலில் 5-வது படிக்கரேன். எனக்கு இன்ஸ்பெக்டரிடம் பேசணும் என்றது. நான் இன்ஸ்பெக்டர் பால் ராஜ்தான் பேசுரேன் சொல்லுங்க என்றார். சார் என்னை யாரோ கொலை பண்ணிடுவாங்களோன்னு பயம்மா இருக்கு. எனக்கு போலீஸ் பாதுகாப்பு வேணும் என்றதுபோன் குரல். பாப்பா 5-வது படிக்கரேன்னு சொல்ரே அப்போ உனக்கு 10- வயதுக்குள்ளதான் இருக்கணும் நீ டி.வி. சீரியல் நிறையா பாக்குரியா? வேண்டாததெல்லாம் கற்பனை பண்ணிகிட்டு இருக்கியா? ஐயோ அப்படில்லாம் இல்லே  சார் நான் உண்மைதான் சொல்ரேன். அப்படி அந்தப்பெண் பேசிக்கொண்டிருக்கும் போதே மெல்லிசாக சலுங்க், சலுங்க் என்று ஒரு சலங்கை சப்தம் போனில் கேட்டது பின்னணியில். அந்த பாப்பா காலில் கொலுசு போட்டிருக்கோ என்னமோ காலை ஆட்டிகிட்டே பேசுதோ என்னமோ அதான் இப்படி சலங்கை சத்தம் கேக்குதோன்னு பால்ராஜ் நினைத்துக்கொண்டார்.பிறகு எந்தவித சப்தமும் வராமல் போன் அமைதியாகி விட்டது.  பால்ராஜுக்கு ஒரே குழப்பம் என்னடா இது அந்தப்பொண்ணு எங்கேந்து பேசுரேன்னுகூட ஏதும் சொல்லலே. என்ன பிரச்சனைன்னும் சொல்லலே. இப்போ நாம என்ன பண்ணனு யோசித்து கான்டபிள் 204- இங்க வாங்க. இப்ப எனக்கு ஒரு போன்கால் வந்தது எக்சேஞ்சுக்கு கேட்டு இந்த அட்ரெஸ் கேட்டுவாங்க என்றார்.

Friday, December 16, 2011

காவலன் 3



என்னங்க, ராஜாவுக்கு வயசாயிண்டே போறது . அடுத்த லீவுல வரப்போ அவனுக்கு நல்ல பொண்ணாபார்த்து கல்யானம் பண்ணிடலாங்க என்றாள் அம்மா. ஆமா நீ சொல்வது சரிதான். ஏண்டா ராஜா அங்கியே ஏதானும் பொண்ணு பாத்து வச்சிருக்கியா என்றார். ஐயோ என்னப்பா இது நீங்கபாத்து யாரைச்சொல்ரீங்களோ அவளைத்தான் கல்யாணம் செய்துப்பேன் என்றான்.மகனின் இதபதிலால் பெற்றோருக்கு ரொம்பவே சந்தோஷம். சரி அப்பா ஒரு முக்கியமான விஷயம் பத்தி உங்க கிட்ட பேசணும். என்றான். என்னடா ராஜா சொல்லுப்பா. அப்பா நேத்து இரவு நான் நம்ம சன்னதி தெரு வழியாதான் வந்தேன். நீங்களும் உங்க வயசுக்காரங்க சிலரும்கோவில் வாசல்ல உக்காந்து சீட்டு விலையாடிகிட்டு இருந்தீங்க. பாக்கவே மனசுக்கு ரொம்ப கஷ்ட்டமா இருந்ததுப்பா. அம்மாவை இரவு தனியே வீட்ல விட்டுட்டு நீங்க இப்படி சின்னப்பிள்ளை போல சீட்டு விளையாடல்லாம் போலாமாப்பா? ஓஅதுதான் விஷயமா. நீ ஒரு வார்த்தைல கேள்வியா கேட்டுட்டே. இதுக்கு பின்னால ஒரு கதையே இருக்குப்பா.

Wednesday, December 14, 2011

காவலன் 2

காலை 8- மணிக்கு எழுந்த ரகு பின்புறம்போய் பல்தேய்த்துவிட்டு நேரே கிச்சன் போய் அம்மாவுக்கு குட்மார்னிங்க் சொன்னான். அம்மா சூடு சூடாக காபி கொடுத்தாள். குடித்துவிட்டு அம்மா நான் குளிச்சுட்டு வந்துடரேன்னு சொல்லி சோப்பு டப்பா, டவல் எடுத்துண்டு வெளியே போகும் போது அப்பா குளித்து சாமி ரூமில் பூஜையில் இருந்தார். ஆத்தங்கரை நோக்கி நடந்த ரகு தெருக்களைக்கடந்து வாய்க்கால் தாண்டி ஒத்தையடிப்பாதை வழியே ஆத்தங்கரை நோக்கி நடந்தான். முன்பெல்லாம் இருபுறமும் பச்சை பசேல்னு வயல்வெளிகள் கண்ணுக்கும் மனதுக்கும் பசுமையாக இருக்கும். இப்போது இருபுறமும் வயல் வெளியே கண்களில் தென்படாமல் எல்லா நிலங்களையும் ப்ளாட் போட்டு விற்று கட்டிடங்களாக எழும்பிக்கொண்டிருந்தன. வழிபூராவும்
 ஒரு ஈ காக்கை கூட இல்லாமல் வெ றிச்சோடி இருந்தது.

Monday, December 12, 2011

காவலன். 1

ரகு விமான நிலையம் விட்டு வெளியே வந்து டாக்சி பிடித்து போகவேண்டிய இடம் சொல்லி அமர்ந்தான்.குறைந்தது ஒருமணினேரமாவது ஆகும் அவன் போய்ச்சேரவேண்டிய இடம் வர. வெளி நாட்டில் வேலை ரகுவுக்கு. வெளி நாடு போகும் போதும் வரும்போதும் இந்த விமானங்கள் நடு இரவில் தான் இருக்கின்றன.அம்மா அப்பாவுக்கு ஒரே பையன் ரகு. அவன் பிறந்தது வளர்ந்தது எல்லாமே ஒரு சிறிய கிராமத்தில்தான்.மேல்படிப்புக்கு பக்கத்தில் உள்ள பெரிய நகரம் போக வேண்டி வந்தது. படித்தபடிப்பு வீணாகாமல் வெளி நாட்டில் வேலைக்கும் முயற்சி செய்து ரெண்டு வருடங்களாக வெளி நாட்டு வேலை. முதலில் அவன் அப்பா அம்மா இதற்கு ஒத்துக்கொள்ளவே இல்லை. உள் நாட்டிலேயே ஏதானும் நல்ல வேலையில் சேர்ந்துக்க சொன்னார்கள். ரகுதான் பிடிவாதமாக வெளி நாடு சென்றான். வருடம் ஒருமுறை வந்து தாய் தந்தை யுடன் ஒருமாசம் இருந்துவிட்டுபோவான்.

Wednesday, December 7, 2011

படாடோபம்.

 டிங்க், டாங்க்,  டிங்க், டாங்க்,  காலிங்க் பெல்லில் குருவி அழைத்தது. காவேரி கதவைத்திறந்ததும் அவள் முகத்தில் சந்தோஷ ஆச்சரியம். ஹாய் லல்லி வாடி வா, நிஜம்ம நீதானா நான் சொப்பனம் கானுரேனா? நீயும் லீவுக்கு வந்திருக்கியா? என்று மிகவும் அன்புடன்  தன் தோழி லலிதாவை வீட்டுக்குள் அழைத்துப் போனாள் காவேரி.இருவரும் சிறுவயது தோழிகள் ஒரே ஊரைச்சேர்ந்தவர்கள் .திருமணம் முடிந்து வேறு, வேறு ஊர்களில் செட்டில் ஆனவர்கள். 6, 7-வருடங்களுக்குப்பிறகு இருவரின் சந்திப்பு. உள்ள வாடி என்று கையைப்பிடித்து அழைத்துக்கொண்டு நடு கூடத்தில் இருந்த மர ஊஞ்சலில் போய் உக்கார வைத்தாள் அவளும் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டாள்.உள்ளே பார்த்து சித்தி இங்க வாயேன் யாரு வந்திருக்கா பாரேன்னு கூப்பிட்டாள் சித்தியும் வந்து அடடே லலிதாவா வாம்மா எவ்வ்ளவு வருஷம் ஆச்சு உன்னப்பார்த்து இப்ப எந்தௌஉர்ல இருக்கே? எத்தனை குழந்தைகள். ஆத்ல அம்மா அப்பா நன்னா இருக்காளான்னு கேள்விகளை
 அடுக்கிக்கொண்டே போனாள்.உடனே காவேரி சித்தி முதல்ல அவளுக்கு  சாப்பிட ஏதானும் கொண்டுவாங்க என்றாள்.

Friday, December 2, 2011

காத்திருப்பு 2

 போன்பேச்சை முடித்துக்கொண்டுவந்த டாடி, என்னம்மா சொல்லிக்கொண்டிருந்தேன்? நம்ம அந்தஸ்துக்கு தகுந்தமாப்பிள்ளைபற்றி சொல்லிண்டு இருந்தேன் இல்லியா? எனக்கு பிடிக்காதுன்னு நினைத்தா சேகர் ஏழைன்னு என்கிட்ட சொன்னே? நம்மிடம் இருக்கும் சொத்தே நாலு தலைமுறைக்கு கானும். மேலும் மேலும் சொத்து எதுக்கு? என் பெண்ணை பூப்போல வச்சு காப்பாத்தர ஒரே குணம் மட்டும்தான் நான் மாப்பிள்ளையாவரப்போரவனிடம் எதிர்பார்க்கிரேன்.  ஆனாலும் உத்யோகம் புருஷ லட்சணம் இல்லியா நம்ம கம்பெனியிலேயே பெரிய பதவி கொடுத்துட்டாபோச்சு  எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லேம்மா உன் விருப்பம்தான் என் சந்தோஷம் சேகர் வரட்டும் நானே பேசி அவன் தயக்கத்தை போக்கி கல்யாணப்பேச்சை ஆரம்பிச்சுடரேன். இப்பகுஷியாடா? ஆமா மணி 8- ஆச்சே இன்னும் சேகரைக்காணோமே என்னாச்சும்மா எனக்கு தெரியும் டடி என் விருப்பத்துக்கு மாறா நீங்க ஏதுமே சொல்ல மாட்டீங்கன்னு நான் சேகரிடம் சொல்லிகிட்டே இருந்தேன் ஆனா அவந்தான் நம்பவே இல்லே  சரி டாடி அவன் உங்க கூட பேசத்தயங்கி வீட்லயே இருக்கானோ என்னமோ? நீங்க குளிச்சுட்டுவாங்க டாடி நாம சாப்பிட்டு அவனை  அவன் வீட்லயே போயி பார்த்த்ட்டு வரலாம் ப்ளீஸ்டாடி. என்று கெஞ்சலாக கூறினாள் அவரும் குளித்துவந்து சமையல்காரன் சூடாக பரிமாறிய உணவை முடித்துக்கொண்டு இருவரும் சேகர் வீடு போகும்போது இரவு 10- மணி ஆனது. பெல் அடித்ததும் சேகரின் வயதான மாமாதான் வந்து கதவைத்திறந்தார்.

என்னை ஆதரிப்பவர்கள் . .