வந்து கிட்டத்தட்ட, 3, 4 மாசம் ஆயிடுச்சு. நாளை கிளம்பனும். பெண்ணுக்கும் மாப்பிளைக்கும் என்னை திரும்ப அனுப்பமனமே இல்லே. ஆசை ஆசையா எல்லா இடங்களும் சுற்றிக்காட்டினார்கள். மறு நாள் காலை 10 மணிக்கு மும்பாசாவில் இருந்து நைரோபிக்கு ஃப்ளைட், நைரோபிலேந்து மும்பைக்கு மாலை 7 மணிக்கு ஃப்ளைட் இருந்தது. இரவு அக்கம்பக்கம் உள்ளவங்க வழி அனுப்பவந்தாங்க வேலைக்காரி தோட்டக்காரன் வாச்மேன் எல்லாருமே ஏன் மேம் இப்பவே இண்டியா திரும்ப போரீங்க இன்னும் கொஞ்ச நாள் இருங்கன்னு சொல்லிகிட்டே இருந்தாங்க. மறு நா காலை 4- மணிக்கே எழுந்து நானும் மாப்பிளையும் காபி குடிச்சு 5 மணிக்கு காரில் கிளம்பினோம். ஆப்ரிக்க ட்ரைவர் கூடவந்தான். மொம்பாசா போகவே 2 மணி நேரம் ஆகுமே. விடிந்தும் விடியாத காலைப்பொழுது, குளுமை யான காற்று வீச, சில்வண்டுகளின் ரீங்காரமும், பறவைகளின் இன்னிசைக்கச்சேரியும் கூடவர கார் பயணம் சுகம்.
பாதி வழி போகும்போதே டயர் பஞ்சர் ஆச்சு. அது சரிபண்ணிட்டு கிளம்பி மொம்பாசா போய்ச்சேரும்போது 8.30- ஆச்சு. 9 மணிக்கு ஏர்போர்ட் போய்ச்சேர்ந்தோம். வழக்கமான பார்மாலிட்டீஸ் எல்லாம் முடிந்து உள்ளேபோய் உக்காந்தோம். கரக்டாக 10 -மணிக்கு ஃப்ளைட் கிளம்பி 11- மணி நைரோபி போய்ச்சேர்ந்தோம்.
பாதி வழி போகும்போதே டயர் பஞ்சர் ஆச்சு. அது சரிபண்ணிட்டு கிளம்பி மொம்பாசா போய்ச்சேரும்போது 8.30- ஆச்சு. 9 மணிக்கு ஏர்போர்ட் போய்ச்சேர்ந்தோம். வழக்கமான பார்மாலிட்டீஸ் எல்லாம் முடிந்து உள்ளேபோய் உக்காந்தோம். கரக்டாக 10 -மணிக்கு ஃப்ளைட் கிளம்பி 11- மணி நைரோபி போய்ச்சேர்ந்தோம்.
Tweet | |||||