Pages

Tuesday, August 31, 2010

பக்தி.

வால்மீகி முனிவர் ராமாயணம் எழுதி முடித்தார்.உடனே அது ,யாருக்கு சொந்தம்

என்ற கேள்வி எழுந்தது. எங்களுடையது, உங்களுடையது, என்று தேவர், அசுரர்,

மானிடர் அடித்துக்கொண்டார்கள். கடைசியில் வழக்கைத் தீர்க்க சிவ பெருமானைக் கூப்பிட்டார்கள். அவர் பாகப்பிரிவினை செய்யலானார். கோடிஸ்லோகத்தில் தேவருக்கு33 லட்சம், அசுரருக்கு 33 லட்சம், மனிதருக்கு

33 லட்சம், பாக்கி ஒரு லட்சம், அதையும் மும்மூன்று கூறுகளிட்டுக் கொண்டே வரும்போது இறுதியாக ஒரு ஸ்லோகம் மிஞ்சிற்று. ஒருஸ்லோகத்திற்கு 32

எழுத்துக்கள். அதையும் 10, 10, ஆக பிரித்துக்கொடுத்தார். 2 எழுத்துக்கள் மிஞ்சின.ரா............ம.............. அவற்றை என்ன செய்வது? வழக்கைத்தீர்த்ததற்கு

ஊதியம் வேண்டாமா? எனக்கு என்று சொல்லி எடுத்துக்கொண்டார். கோடி

ஸ்லோகங்களின் சாரம் அந்த 2 எழுத்துக்களில் இருந்தது.




அவற்றைப்பெற்றதால், ஞானத்தில் எந்த தேவனோ, அசுரனோ, எந்த மனிதனோ சிவபெருமானுடன் போட்டியிட்டு ஜெயிக்க முடியாமல் போயிற்று.

4 comments:

sundari arjun said...

மாமி ராம ஜெயம் ஏன் எழுதுரோம் என இதுவரை தெரியாது.உங்க விளக்கம் அருமை.இது போல ஆன்மீகம் பற்றி எழுதுங்க படிக்க ஆவலா உள்ளேன்.

குறையொன்றுமில்லை. said...

சுந்தரி நான் இப்பதான் உன் பதிவைப்பார்தேன்.
ஆன்மிகம் எல்லாருக்கும் பிடிக்க மாட்டேங்குதேம்மா. உன்னைப்போல ஒருவர் ரசித்தாலும் கூட போதும். இன்னும் ஆர்வமுடன் எழுத தோன்றும்.

cheena (சீனா) said...

ஆன்மிக்கருத்துகளைத் தொடர்ந்து எழுதுக - படிப்பதற்கு வாசகர்கள் அதிகம் உள்ளனர் - வாழ்க வளமுடன்

குறையொன்றுமில்லை. said...

சீனா சார் இன்னிக்கே என் எல்லா பதிவும்
படித்து பின்னூட்டம் போட்டீங்களா?
உங்க பின்னூட்டம் எனக்கு மிகவும் உற்சாக
மா இருக்கு. நன்றிங்க.

என்னை ஆதரிப்பவர்கள் . .