Pages

Monday, January 16, 2012

கிலிபி 7 (ஆப்ரிக்கா)

மாப்பிள்ளை 2-மணிக்கு லஞ்சுக்குவந்தார். ஆபீஸ்போக தனி கார், வீட்டு உபயோகத்துக்கு தனி கார் என்று ஷெட்டில் இரண்டு கார் இருந்தது. சூடாக சுவையாக லஞ்ச். மூவரும் சேர்ந்து உக்காந்து பேசிக்கொண்டே சாப்பிட்டோம். மாப்பிள்ளை 3- மணிக்கு கிளம்பி திரும்பவும் ஆபீஸ்போனார். என் ரூம் போய் பெட்டிலேந்து துணிமணில்லாம் எடுத்து பீரோவில் அடுக்கி வைத்தேன். ஃப்ளைட் ட்ராவலில் இவ்வள்வு கிலோதான் லக்கேஜ் கொண்டுபோலாம்னு ஒரு கட்டுப்பாடு இருக்கே. எந்துணிமணி கொஞ்சமாதான் எடுத்து வெந்தேன் பாக்கி பூரா தமிழ் புக்ஸ்தான். இங்க தமிழ் புக்ஸ் கிடைக்காதுன்னு தெரியும் 2, 3  மாசத்துக்கு படிக்க தேவையான மாசாந்திர, வாராந்திர புக்ஸ் நாவல்ஸ் என்று15- கிலோவுக்குமேல கொண்டு வந்தேன். சாப்பிடாமகூட 4- நாள் இருந்துடுவேன். புக் படிக்காம ஒரு நாள் கூட இருக்க முடியாது. மாப்பிள்ளையும் நிரையா புக் படிக்கும் பழக்கம் உள்;ளவர்தான் ஆனா எல்லாம் இங்லீஷ் புக்ஸ்.  எனக்கு தமிழ் புக் படிக்கும்போது கிடைக்கும் ஆனந்த அனுபவம் வேர பாஷை புக் படிக்கும் போது கிடைக்காது.ஆனாலும் எல்லாமும் படிப்பேன் அவா வீட்லயும் டைனிங்க் ரூமில் பெரிய ஷெல்ப் நிறைய லைப்ரரி போல நிறைய இங்க்லீஷ் புக்ஸ் இருந்தது, நான் கொண்டு வந்த புக்ஸையும் அங்கே அடுக்கி வைத்தேன்.




                           
 மதியம் கொஞ்ச நேரம் படுத்து எழு ந்தேன். மேலே ஓட்டுக்கூரைதான் பூச்சி போட்டு வீட்டுக்குள் வந்துடக்கூடாதுன்னு அங்கியும் வலைக்கம்பி அடிச்சிருந்தா, நல்ல பாதுகாப்புதான். ரைட்டிங்க் டேபிளில் கொஞ்ச் நேரம் உக்காந்து எழுதிண்டு இருந்தேன்.பொண் முத ஹாலில் டி.வி.யில் என்னமோ பாத்துண்டு இருந்தா. நானும் அங்க போயி உக்காந்தேன் அப்போல்லாம் கம்ப்யூட்டரை ஆன் ஆஃப் பண்ணக்கூடத்தெரியாது. அது என்னதுன்னொ அது எதுக்கு உபயோகம்னோ கூட தெரியாது.ஷோபீஸ்போல வேடிக்கைமட்டுமே பார்த்தேன். இப்ப நினைச்சா சிரிப்பா இருக்கு.6-மணிக்கு மாப்பிள்ளை வந்தார், மூவரும் காபி குடிச்சு பேசிண்டு இருந்தோம் இண்டியா பத்தி சொந்தக்காரர்கள் பற்றி விமானப்பயணம் பற்றில்லாம் பேசினோம் தோட்டத்தில் சேர் கொண்டு போட்டுண்டு காத்தாட உக்காந்து பேசுவது சுகமான அனுபவம்தான். இருட்டிடவே உள்ளே வந்துட்டோம். இவா இருவரும் ஒவ்வொரு முறை


  இண்டியா வந்து திரும்பும் போது நிறைய தமிழ்பட, ஹிந்திப்பட சி.டி. பாட்டுக்கள் சி,டி எல்லாம்வாங்கி வருவா. அது ஒரு கப்போர்ட் நிறைய வச்சிருந்தா.அதுதான் அவர்களுக்கு டைம் பாஸ்டி.வி. ல எக்ஸ்ட்ரா பணம் கட்டினா சில ஹிந்தி சேனல்ஸ் வருமாம். ZEE, B4U, SONY  இதுபோல கொஞ்ச்ம் வருமாம். மாப்பிள்ளையாவது நாள் பூரா ஆபீசில் வேலை செய்யறார். பொழுது போவதே தெரியாது பொண்ணுக்கு வீட்டில் ரொம்பவே போர் ஆகும். வீடு வேர நல்ல பிரும்மாண்டமாஇருக்கு. அதில் பகல் நேரம் அவள்  மட்டுமே தனியா இருக்கனும்.

                                             

                      


                                                    
 சமையல் வேலை வீட்டு வேலை என்று எவ்வளவுதான் பிசியா வச்சுண்டாலும் தனிமைதான் அதிகமானபொழுதுகள் இண்டியாவுக்கு அடிக்கடி போன் பேசவும் முடியாது. 10- நாளுக்கு ஒரு முறைதான் போன் பேச முடியும். இப்ப நான் வந்தது அவா இருவருக்குமே ரொம்ப சந்தோஷமா இருந்தது.எனக்கு டெய்லியுமே ரெண்டு முறை குளிக்கணும். ரொம்ப வருஷபழக்கம். நான் குளித்து வந்ததும் மூவரும் டின்னர். நான் எப்பவும் இரவு ஒரு கைப்பிடி சாதமும் லூசாக நிறைய மோரும் விட்டுண்டு கரைச்சு ரெண்டுக்ளாஸ் குடிப்பேன் அவ்வளவுதான் என் டின்னர். அதுபோல காலையிலும்


                         
 4மேரிபிஸ்கெட்டும் காபி மட்டுமே மதியம் லஞ்ச் மட்டும் ரெண்டு சப்பாத்தி பாஜியும் டால் ரைஸ் தயிர் சாதம் ஊறுகா என்று சரியாக சாப்பிடுவேன். அவர்களும்  சாதம் சாப்பிடுவதே இல்லே. இங்கே அரிசி நல்லா கிடைக்காதாம் ஒன்னு பாஸ்மதி இல்லைனா தாய் அரிசி பாஸ்மதி வெயிட் போடும் தாய் அரிசி சாப்பிடமுடியாம ஸ்மெல் வரும். அதனால அவா இருவரும் சப்பாத்தி மதியம் இரவும் டிபன் ஐட்டம்தான்.சாப்பிட்டு ஒரு சி. டி போட்டு பாத்தோம் 10 மணி படுக்கப்போனோம் அங்க உள்ள டைம் டிபரண்ட் முதல்ல குழப்பமா இருந்தது.அப்புரம் கொஞ்சம் கொஞ்சமா பழகிடுத்து.



                           
 மறு நா 7-மணிக்கு எழுந்து வீட்டைச்சுற்றி இருக்கும் தோட்டம் சுற்றி அரைமணி நேரம் வாக்கிங்க். பறவைகளின் கீச் கீச் சப்தங்கள், மரங்களிருந்து வரும் இயற்கையான வாசம் மரங்களின் ஊடாக வரும் சூரியக்கதிர்கள். இலைகளின் தலையாட்டலில் நம் மீது வந்து மோதும்தென்றல் காற்றின் சுகம் என்று வாக்கிங்க்  ரசனையுடன் முடித்தேன். காலையில் நான் மட்டுமே வாக் போவேன் தோட்டக்காரன் சிரிச்சுன்டே குட் மார்னிங்க் சொல்வான் .  மாலை மாப்பிள்ளை ஆபீசிலிருந்து வந்ததும் காபி குடித்தத்தும் நானும் அவரும் கார்டனைச்சுற்றி சுற்றி வாக் பண்ணிண்டு இருப்போம். அவர்காதில் வாக்மேனில் பாட்டு கேட்டுண்டே நடப்பார். வேக வேக நடை. நான் கொஞ்ச்ம் ஸ்லோவாதான் நடப்பேன். பொண்ணு



  எக்சர்ஸைஸ் சைக்கிள் வச்சிருக்கா, முதல்ரூமில் அதில் அவள் ஒருமணி நேரம் சைக்கிளிங்க் செய்வா. இருக்கர இடம் டாக்டர் சௌரியம் இல்லாத        இ  டம் .ஹெல்த் கேர் கண்டிப்பா எடுத்துண்டே ஆகனும். சாப்பாட்டிலும் பாலன்ஸ்டு டயட்டிங்க், இதுபோல வாக்கிங்க் எக்சர்சைஸ் எல்லாம் பண்ணினாதான் சரியா இருக்கும் .. உள்ளே வந்து யோகா, மெடிடேஷன் பிராணாயாமம் என்று ஒரு அரை மணி நேரம் டைம் பாஸ்.  7-மணிக்கு ஒவ்வொருவராக குளித்துவந்து ஏதானும் ஒரு பழம் எடுத்துப்போம்.  9- மணிக்கு சாப்பிட்டு ஏதானு ஒரு சி டி, போட்டு பார்ப்போம்.வாசலிலில் ஒரு வாச்மேன் எப்பவுமே இருக்கான். இரவு நேர காவலுக்கு ஒருவன் பகல் நேர காவலுக்கு ஒருவன் மாறி, மாறி வரா. எல்லாருமே என்னிடம் மேம் ,மேம்ன்னு அன்பா இருந்தா. மறு நாள்  மப்பிள்ளை ஆபீஸ் சுற்றிப்பார்க்க போலாம்னு சொல்லி இருந்தார் மூவருமே குளித்து ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டு 9- மணிக்கு ரெடி ஆகி கிளம்பி மாப்பிள்ளை ஆபீஸ் போனோம். நாங்க வெளில போகணும்னு முதலிலேயே எலினா கிட்ட சொல்லி இருந்தோம் அவளை மத்யானமா வரச்சொல்லி இருந்தோம்.

 ( நன்றி-கூள் இமேஜ்)                                                        (தொடரும்.)

33 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

எனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .

ஆமினா said...

அருமையான்ன பொழுதை அங்கே கழிச்சுருக்கீங்கன்னு தெரியுது மாமி... புக்ஸே 15 கிலோவ்வ்வ்வ்வ்வ்வ்வா????? அடேங்கப்பா :-)

பால கணேஷ் said...

நல்ல காற்று, பறவைகள் சத்தத்தோட வாக்கிங்... அருமை. சைக்கிளிங் நல்ல உடற்பயிற்சிங்க. தெ.ஆ.பயண அனுபவம் இனிமையா உங்களுக்கு அமைஞ்சிருக்குன்னு புரிஞ்சிக்க முடியுது.

மனோ சாமிநாதன் said...

அனுபவங்கள் அழகு!
அந்த தனியான ஒற்றைப்பாதையும் பின்புறத்தில் இயற்கையழகும் மிக அழகு!!

இராஜராஜேஸ்வரி said...

அப்போல்லாம் கம்ப்யூட்டரை ஆன் ஆஃப் பண்ணக்கூடத்தெரியாது. அது என்னதுன்னொ அது எதுக்கு உபயோகம்னோ கூட தெரியாது.ஷோபீஸ்போல வேடிக்கைமட்டுமே பார்த்தேன். இப்ப நினைச்சா சிரிப்பா இருக்கு/

சென்ற வருடம் வரை எனக்கும் அப்படித்தான் ..

இப்போது சிரிப்பாகத்தான் இருக்கிறது..

கோமதி அரசு said...

ஒன்று விடாமல் எல்லாவற்றையும் அழகாய் சொல்லி வருகிறீர்கள்.

நாங்களும் உங்களுடன் வந்து கொண்டு இருக்கிறோம்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல அனுபவங்கள் அம்மா.... உங்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் அம்மா...

முற்றும் அறிந்த அதிரா said...

படிக்க படிக்க சுவாரஷ்யம்... தொடருங்கோ..

குறையொன்றுமில்லை. said...

நண்டு நொரண்டு வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஆமி வா வா ரொம்ப நா கழிச்சு வந்திருக்கே. பயணம் போவதே எஞ்சாய் பண்ணத்தானே?

குறையொன்றுமில்லை. said...

கணேஷ் வருகைக்கு நன்ன்றி

குறையொன்றுமில்லை. said...

மனோ மேடம் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

இராஜ ராஜேஸ்வரி உங்களுக்கும் அப்படித்தானா? வருகைக்கு நன்ரி

குறையொன்றுமில்லை. said...

கோமதி அரசு வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கு நன்ரி

குறையொன்றுமில்லை. said...

அதிரா வருகைக்கு நன்ரி

RAMA RAVI (RAMVI) said...

அவ்வளவு புத்தகமா எடுத்துண்டு போனீங்க??ரொம்ப நன்றாக உங்க அனுபவத்தை சொல்லரீங்க அம்மா. நாங்களும் உங்க மாப்பிள்ளை ஆபீஸை சுற்றிப்பார்க்க தயாராக இருக்கோம்.

ADHI VENKAT said...

பயண அனுபவம் ரொம்ப நல்லா போயிட்டிருக்கும்மா.... தொடருங்கள்.

குறையொன்றுமில்லை. said...

ரமா வருகைக்கு நன்றி.

குறையொன்றுமில்லை. said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி

ரசிகன் said...

வாழ்க்கையை அனுபவிக்கிறீங்க. கலக்குங்க.

சாந்தி மாரியப்பன் said...

ஆனந்தமான அழகான அந்த தோட்டத்துல உக்காந்து புக் படிக்கிற சுகமே அலாதியா இருந்துருக்குமே..

ஜோரா இருக்கு பயண அனுபவங்கள்.

குறையொன்றுமில்லை. said...

ரசிகன் வருகைக்கு நன்ரி

குறையொன்றுமில்லை. said...

சாந்தி வருகைக்கு நன்றி

ஹேமா said...

ம்...அடுத்து இப்பத்தான் எல்லாத்தையும் வாசிக்கிறேன் !

குறையொன்றுமில்லை. said...

ஹேமா நிதானமா ஒவ்வொரு பகுதியாபடிங்க. நன்றி

radhakrishnan said...

அடேயப்பா, ரொம்ப டயட் கான்ஷியஸா
க இருக்கீங்களே!
கம்ப்யூட்டர் இல்லாமல் பொழுது போக்கியிருக்கிறீர்கள். இப்போது நினைத்துக் கூடப் பார்க்க முடியாதே!
பகிர்வு அருமையாக இருக்கிறது.நன்றி அம்மா

குறையொன்றுமில்லை. said...

வாங்க ராதாகிருஷ்னன், ஏது லேட்டு? வருகைக்கு நன்றி

*Chennai Plaza - சென்னை ப்ளாசா* said...

நானும் முன்பு கம்பியுட்டர்ன்னா என்ன வோ ஏதோன்னு வேடிக்க பார்ப்பேன்
அந்த நினைவு வந்து விட்டது லஷ்மி அக்கா


ஜலீலா

*Chennai Plaza - சென்னை ப்ளாசா* said...

நானும் முன்பு கம்பியுட்டர்ன்னா என்ன வோ ஏதோன்னு வேடிக்க பார்ப்பேன்
அந்த நினைவு வந்து விட்டது லஷ்மி அக்கா


ஜலீலா

குறையொன்றுமில்லை. said...

சென்னை ப்ளாசா வாங்க வருகைக்கு நன்றி, நீங்க ஜலீலாதானா?

Geetha Sambasivam said...

பதினைந்து கிலோ புத்தகமா?? ஆச்சரியம் தான். மற்ற இந்தியப் பொருட்கள் எல்லாமும் அங்கே கிடைக்குமா? இந்தியாவிலே இருந்து எதுவும் கொண்டு போகவேண்டாமா?

நம்ம வீட்டுத் தோட்டத்திலேயே நடை பழகுவது என்பது தனி இன்பம் தான்.

குறையொன்றுமில்லை. said...

கீதா சாம்பசிவம் இந்திய பொருட்கள் எல்லாம் கிடைப்பதே இல்லே கிடைத்ததைவச்சு சமாளிக்கரா.

என்னை ஆதரிப்பவர்கள் . .