Pages

Thursday, December 29, 2011

A ? 3 ( END)

 எப்பாது விடியும் என்று காத்துக்கொண்டிருந்தவர்போல விடிந்ததுமே எழுந்து மகன் நவீனையும் குளிப்பாட்டி ஸ்கூலுக்கு தயார் பண்ணினார். ஏதேது இன்னிக்கு மழைதான் கொட்டப்போகுது.என்று மனைவி கேலியாக கூறவும் மனசுக்குள் சிரித்துக்கொண்டார் பால்ராஜ். நேற்று நவீனுக்கு ஹோம் ஒர்க் சொல்லிக்கொடுத்ததில் எவ்வளவு பெரிய க்ளூ கிடச்சிருக்கு என்று நினைத்தார். டிபன் சாப்பிட்டு ஸ்டேஷன்  சென்றவர் அங்கும் செய்ய வேண்டிய சில அவசர வேலைகள் முடித்துவிட்டு 204- வண்டி எடுங்க என்றார். நேராக பூஜா வீடு. நேற்றுபோலவே வீடு அமைதியாக இருந்தது. வாச்மேனும் தோட்டக்காரனும் வாங்க ஐயா என்று வரவேற்றனர். நேராக ஹால் சோபாவில் சென்று அமர்ந்தார். கிச்சனில் இருந்து இட்லி வேகும் மணமு ம்பில்டர்காபி மணமும் வந்து அவர் நாசியை நிறைத்தது.வேலைக்காரர்கள் அனைவருக்குமே மூன்று வேளை ச்சாப்பாடும் இங்கேயேதான் தயார் செய்து கொடுப்பார்கள். பெரியம்மாவை ஹாலில் காணோம். இவர் வந்த சப்தம் கேட்ட சமையல்காரம்மா வாங்க சார்  காபி குடிக்கிரீங்களா என்றாள். காபி வாசனை ஹால்வரை வந்து மூக்கைத்துளைக்குதே கொண்டு வாங்கம்மா என்றார்.  நுரை ததும்ப சூடான சுவையான காபி கொண்டு தந்தாள் பெரியம்மா எங்கேம்மா. என்றார். மாடில பூஜை ரூமில் இருக்காங்க ஐயா இதோ போயி கூப்பிடுரேன் என்று மாடியில் போய் இவர் வந்திருக்கும் தகவல் சொன்னாள்.



காபியை குடித்தவாரே அன்றைய பேப்பரை புறட்டிக்கொனிருந்தார் அப்போது சலுங்க், சலுங்க் என்ற சப்தம் கேட்டு திடுக்கிட்டு திரும்பி பார்த்தார். பூஜா போன் பண்ணின அன்று கேட்ட அதே சலுங்க் சப்தம். ஹாலில் யாரும் இல்லை. மாடியில் இருந்து பெரியம்மா இறங்கி வந்து கொண்டிருந்தாங்க. அவரை உற்றுப்பார்த்தார் பால்ராஜ். ஓ, இவங்க கிட்டேந்து தான் சலங்கை சத்தமா என்று எண்ணினார் அந்தம்மா இடுப்பில் சொருகி இருந்த சாவிக்கொத்திலிருந்துதான் அப்படி ஒரு சப்தம் வந்ததை சுலபமாக ஊகித்துவிட்டார். அப்போ நான் நினைப்பது சரிதானோ என்றும் எண்ணினார். அப்படியும் செயலில் இறங்க சிறிது தயங்கினார். என்ன இன்ஸ்பெக்டர் சார் கொலையாளியைப்பத்தி ஏதானும் தகவல் தெரிந்ததான்னுஅந்த அம்மா கேட்டாங்க. ஆமாம்மா ஆல்மோஸ்ட் நெருங்கிட்டேன். அப்படியா யாரு அது. என்று படபடப்புட கேட்டவளை, சொல்லத்தானேம்மா வந்திருக்கேன் அவசரப்பட்டா எப்படி? என்று சொன்னவர் சரி நான் நேராவே விஷயத்துக்கு வந்துடரேன்மா. ஏம்மா பூஜாவை இறக்கமே இல்லாம இப்படி கொலை செய்ஞ்சீங்க, என்று தடாலடியாக கேட்க்கவும் வெல வெலத்து போன அம்புஜம்மாள் என்ன இன்ஸ்பெக்டர் யார்கிட்ட என்ன கேல்வி கேக்குரீங்கன்னு புரிஞ்சுதான் கேக்குரீங்களா? கூல் கூல் அம்புஜம்மா மெல்லிசு தலைகாணியால் அவ முகத்தை அமுக்கி கொலை செய்ஞ்சிருக்கீங்க. ஏன் இப்படி செஞ்சீங்க என்றார். அம்புஜம்மாவுக்கோ ஒரே வேர்வை படபடப்பானது. ஏன் இப்படி அபாண்டமா ஒரு பழியை என்மேல சுமத்துரீங்க இன்ஸ்பெக்டர்.?




என் செல்லத்த நானே கொலை செய்வேனே சே நினைக்கவே கூசுது கூசாம என்மேல பழி போடுரீங்க. உங்க மேல நான் மான நஷ்ட வழக்கு போடுவேன் என்றெல்லாம் மிரட்டினாள். அம்புஜம்மா நீங்கதான்  கொலை பண்ணினீங்கன்னு   உங்களுக்கே நன்னா தெரியும்மா மறியாதையா ஒத்துகிடுங்க. இல்லேன்னா ஸ்டேஷன் கொண்டுபோய் வேரமாதிரி விசாரிக்க வேண்டிவரும் என்று மிரட்டினார்.

அப்ப நான் தான் கொலை செய்தேன்னு கண்டிப்பா சொல்ரீங்களா? இன்ஸ்பெக்டர். ஆமா நா தான் குற்றவாளி நீங்க கண்ணால பாத்தீங்களா நான் கொலை செய்த்ததை. என்று ஆங்காரமாகக்கேட்டாள்.கண்ணால பார்த்த சாட்சி இல்லாம எப்படி என்னைக்கைது செய்வீங்க என்று எக்காளமாக சிரித்தாள்  அம்மா நீங்க இப்போ சொன்னதெல்லாம் நான் என் செல்போனில் டேப் பண்ணிட்டேன் நீங்க தப்பிக்கவே முடியாது உண்மையை ஒத்துகிடுங்க. ஏன் கொலை பண்ணி நீங்கன்னு காரணமும் சொன்னா நல்லா இருக்கும். சரி இவ்வளவு தூரம் ஆனபிறகு நான் மறைப்பதில் எந்த அர்த்தமும் இல்லே. நானே உண்மையை எல்லாம் சொல்லிடுரேன். நீங்க ரிக்கார்ட் பண்ணிக்கோங்க.


என்று சொல்ல ஆரம்பித்தாள். பூஜாவின் அப்பா எனக்கு ஒன்னுவிட்ட தம்பி முறை வேணும்.  நானும் என் வீட்டுக்காரரும் ரொம்ப கஷ்ட ஜீவனம் தான் பண்ணிகிட்டு இருந்தோம் அவரு குடிச்சு குடிச்சுஅவரு போயி ச்சேர்ந்தபிறகு எனக்கு உறவுன்னு சொல்லிக்கயாரும் இல்லே அடுத்தவேளைச்சாப்பாடுக்கே கஷ்ட்டப்பட்ட வேண்டிவந்தது. என் நல்ல காலம் பூஜாவின் அப்பாஎங்க ஊருக்கு குலதெய்வம் சாமி கும்பிட வந்தான் . அவனிடம் போய் அழுதேன். சரிக்கா நீயும் எங்க கூட வந்துடுன்னு அவன்கூட அவன் வீடு கூட்டி வந்துட்டான், வீடா அது பங்களா. பூஜா ஒர் வயசுக்குழந்தை அப்போ. நான் அப்பலேந்து இங்கதான் இருக்கேன். பூஜாவோட அப்பாவுக்கு ஒருபயம் என்னன்னா அவ அப்பா,அம்மா  அவதாத்தா,பாட்டி அண்ணன் தம்பி எல்லாருமே சொல்லி வைததமாதிரி துர்மரணம் தான் அடைந்தார்கள்  அவங்க குடும்பத்தில் யாருக்குமே இயற்கையான மரணம் சம்பவிக்கவே இல்லே. யாரு கொடுத்தசாபமோ. போறும், போறும்னு சொல்ர அளவுக்கு காசு பணம் வசதில்லாம் இருக்கு.

 ஆனா அவனுக்கு மரணபயம் உள்ளூர இருந்துகொண்டே இருந்தது. என்னை அக்கா அக்கானு கூப்பிடுவான். பூஜாவுக்கு5- வயது நடக்கும் போதுஅவன் ஒரு உயில் எழுதினான். நான் கூட இப்ப என்னடா அவசரம் உயில் எழுத என்று கேட்டேன். இல்லேக்கா. எனக்கும் என் மனைவிக்கும் கூட இப்படி துர்மரணம் ஏற்பட்டால் என் பெண் அனாதை ஆகிடக்கூடாது. எப்ப என்ன நடக்கும்னே சொல்ல முடியாது இல்லியா. அதான் நான் சுய நினைவுடன் இருக்கும்போதே உயில்லாம் எழுதி ரிஜிஸ்டர் செய்துடரேன் என்றான். ஒருவிதத்தில் அவன் பயம் நியாயமானதாக்கூட இருக்கலாம்.ஏன்னா உயில் ரிஜிஸ்டர் செய்த அடுத்தவருடம் பூஜா அப்பாவும் அம்மாவும் ஒரு கார் ஆக்சிடெண்டில் ஒரே நேரம் போய்ச்சேர்ந்துட்டாங்க. அசையும், அசையா சொத்துக்கள் எல்லாமே பூஜா பேரில் எழுதி வைத்தான் அதற்கு என்னை கார்டியனாகவும் நியமித்தான்.



அவ்ள் இப்ப மைனர்தானே மேஜர்ஆனதும் நல்ல பைனாபார்த்து கல்யாணம் செய்து வைத்து எல்லா சொத்துக்களையும் சட்டப்படி அவளிடம் ஒப்படைக்கும்படியும் உயிலில் எழுதி இருந்தான். அவள  நன்றாக கவனித்துக்கொள்ள வதற்கு பிரதி உபகாரமாக என்பேரில் இந்தபெரிய பங்களாவையும் பேங்கில் கணிசமான ஒரு தொ கை பிக்சட்டில் போட்டு மாதம் 10,000  வட்டி வரும்படியும் அதை என் செலவுகளுக்கும் என்று ஏற்பாடு செய்திருந்தான். நான் இவங்க வீடு வந்தபிறகு எனக்கும் பண் ஆசை வந்தது. கோடிக்கணக்கான சொத்துக்கள் இந்த சின்ன பெண் பேருக்கு. எனக்கு வரும் இந்தவீடும் மாசம் 10,  000  ரூபா பணமும் மட்டும்தானா என்று என்மனசு கண்ணக்குப்போட்டதுஅதுவும் அனுபவ பாத்தியதைமட்டும்தான்.. அடுத்தவேளை சாப்பாட்டுக்கெ க்‌ஷ்ட்டப்பட்டகாலம்லாலாம்  நினைச்சுக்கூட பாக்கத்தோனலெ. நானும் பூஜாவிடம் ஒரு வெள்ளைதாளில் கையெழுது போட்டுத்தருமபடி எப்படில்லாமோ கெஞ்சி பார்த்தேன் அந்தப்பொண்ணு மாட்டேன்னு அடம்பிடிச்சா. எனக்கு எல்லா சொத்துமே பூஜா என்பேரில் மாத்திதருவதாக ஒரு பேப்பரில் எழுதி அவளிடம் கையெழுத்து வாங்கிடனும்னு ரொம்ப முயற்சி செய்தேன். பூஜா இல்லாம்லே போனா எல்லா சொத்தும் என்கைக்கு வந்துடுமேன்னு நினிச்சேன். பேராசைதான் . ஆனா பண ருசி கண்டுட்டா வேறு எதுமே கண்ணுக்கு தப்பாபடாது. இந்தப்பொண்ணைக்கொன்னுட்டேன். ஆனா அடுத்த நாள் வந்த வக்கீல் உயிலைப்படுச்சு காட்டினப்போ எனக்கு மயக்கமே வந்துச்சு.  அப்படி என் பெண்ணுக்கும் துர்மரனம் சம்பவித்தால் எல்லா சொத்துக்களும்   முதியோர் இல்லம், அனாதை ஆசிரமத்துக்குப்போய்ச்சேரணும்னு எழுதி வச்சிருக்கான் பூஜாவின் அப்பா. இது எனக்கு முன்னாடி தெரியாமபோச்சு. அப்படி தெரிஞ்சிருந்தா இப்படி ஒரு காரியம் பண்ணி இருக்கவேமாட்டேன். இப்ப சொத்தெல்லாம் யாருக்குமே பிரயோசனமில்லாம அனாதை ஆசிரமத்துக்கும் முதியோர் இல்லத்துக்கும் போயி சேரப்போகுது. இதைத்தான் பேராசை பெரு நஷ்டம்னு சொல்வாங்க இப்ப புத்தி வந்து என்ன பிரயோசன.ம் கொலைகாரின்னு ஒரு கேவலமான பட்டம்தான் மிச்சம். இப்ப நீங்க என்னை அரஸ்ட் பண்ணிக்கலாம்னு அந்த அம்மா அழுகையின் ஊடே சொல்லி முடிச்சாங்க.

 ஆமா நீங்க எப்படி என்மேல சந்தேகப்பட்டீங்க ? அது  பூஜா கான்வெண்ட்ல படிச்சபொண்ணு இல்லையா அததயம்மாவையு ம்ஆண்டின்னு தானே சொல்லும் அதான். அதன்  இடது உள்ளங்கையில் A   என்று எழுதி இருந்துச்சு எனக்கு அதுபுரியாம நான் வேர விதமா விசாரணை பண்ணுனேன் என்பையனுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும்போதுதான் இப்படியும் இருக்குமோன்னு சந்தேகமே வந்துச்சு. எப்படியோ கேஸ் க்ளியர் ஆச்சு.என்று அம்புஜம்மாளை ஸ்டேஷன் கூட்டிச்செல்ல பெண் கான்ஸ்டபிளை போன் பண்ணி வரச்சொன்னார்.

34 comments:

சி.பி.செந்தில்குமார் said...

டெரர் கும்மி பரிசுக்காக வாழ்த்துகள் முன்னதாக , பேராவை சின்ன சின்னதாக போட்டால் படிக்க எளிதாக இருக்கும்

Mahi said...

Avvvvvvv....kodumaikkara Aunty!

Money is never enough Lakshmi-ma! Story with a nice message!

Madhavan Srinivasagopalan said...

good message / story.

// அவ்ள் இப்ப மேஜர்தானே மைனர் ஆனதும் //

மைனர் - first..
மேஜர் -- later

ரசிகன் said...

அத்தை தான் கொலைகாரி அப்படிங்கறதே twist. அதை விட பெரிய twist சொத்து பூரா முதியோர் இல்லம் சேரனும் அப்படிங்கறது.

நல்ல கதை. வாழ்த்துக்கள்.

பால கணேஷ் said...

பணத்தாசை மனிதர்களை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும் என்பதை ஒரு விறுவிறுப்பான க்ரைம் கதை மூலம் செர்ல்லியிருக்கீங்க. நல்லா இருந்துச்சும்மா...

ரசிகன் said...

ஒரு வாரம் ஊர் சுற்றப் போகிறேன். இணையத்தின் பக்கம் வர முடியாது. அதனால் இப்போதே சொல்லி விடுகிறேன்... வரும் ஆண்டு உங்களுக்கும், உங்களை சார்ந்தவர்களுக்கும், உலகத்துக்கும் இனிமையான ஆண்டாக அமையட்டும்.

இராஜராஜேஸ்வரி said...

பேராசை பெரு நஷ்டம்..

அருமையான கதைக்குப் பாராட்டுக்கள்..

ஸ்ரீராம். said...

அவசரப் பட்ட அத்தயம்மாவின் கதை....நல்ல முறையில் சொல்லியிருக்கிறீர்கள் .

sundar said...

கதை உத்தி, திருப்பங்கள் நன்றாக உள்ளது. பத்தி பிரித்து எழுதினால் நலம்

வாழ்த்துக்கள் புத்தாண்டிற்கும் தொடர்ந்து எழுதவும்

radhakrishnan said...

பேராசை பெருநஷ்டமாகிவிட்டதே.
உள்ளதும் போய் ஜெயிலுக்கும் போக
வேண்டியதாயிற்றே.என்ன மனிதர்கள்?
மேலும் நாம் செய்யும் காரியங்கள்
யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று
சொல்லவே முடியாது.
நல்ல கதை நன்றி அம்மா.

ஹேமா said...

வாழ்வே பணம்தான் என்றாகிறது.எப்படித்தான் அருமையான கருக்களோடு கதைகள் எழுதுகிறீர்களோ.வாழ்வின் அனுபவங்களாகக்கூட இருக்கலாம்.வாழ்த்துகள் அம்மா !

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கருத்துள்ள த்ரில்லர் கதை...

நல்லா வந்து இருக்கும்மா....

வாழ்த்துகள்....

மகேந்திரன் said...

அருமையான கதை அம்மா

குறையொன்றுமில்லை. said...

செந்தில் வருகைக்கு நன்றி. முன்னதாகவே வாழ்த்திட்டீங்க. உங்க வாழ்த்துக்காகவே பரிசு கிடைச்சாகனும். இல்லைனா ஷேம் ஆயிடும்.

குறையொன்றுமில்லை. said...

மஹி வருகைக்கு நன்றீ

குறையொன்றுமில்லை. said...

மாதவன் தவறை சுட்டிக்காட்டியத்தற்கு நன்றி..மாத்திட்டேன்.

குறையொன்றுமில்லை. said...

ரசிகன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கணேஷ் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரசிகன் உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் pபுத்தாண்டு நல் வாழ்த்துகள்.. ஊருக்கெல்லாம் போய் எஞ்சாய் பண்ணிட்டு வாங்க.

குறையொன்றுமில்லை. said...

ஸ்ரீ ராம் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

இராஜ ராஜேச்வரி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

சுந்தர் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராதா கிருஷ்னன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஹேமா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

மஹேந்திரன் வருகைக்கு நன்றி

சாந்தி மாரியப்பன் said...

பணத்தாசை ஒருத்தரை என்னமா மாத்திருது.. வளர்த்த பாசம் கூடவா இல்லாம போகும்.

குறையொன்றுமில்லை. said...

சாந்தி வ்ருகைக்கு நன்றி

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

பதிவு நல்ல இருந்தது....முயற்சி தொடரட்டும்...........நான் உங்க ப்லோகுக்கு வந்தேன்ல நீங்களும் எங்க ப்லோகுக்கு வாங்க ...........

www.tvpmuslim.blogspot.com

குறையொன்றுமில்லை. said...

திருவாளப்ப்த்தூர் முஸ்லீம் வாங்க வாங்க நானும் வரேன். நன்றி

மாதேவி said...

அருமையாக எழுதியுள்ளீர்கள்.

பிறக்கும் புத்தாண்டு இனிய ஆண்டாக அமைய வாழ்த்துகள்.

குறையொன்றுமில்லை. said...

மாதேவி வருகைக்கு நன்றி

radhakrishnan said...

சகோதரி,
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

M.R said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

எப்படித்தான் கெட்டிக்காரத்தனமாக நடந்து கொண்டாலும்
தீங்கு செய்பவர்கள் மாட்டிக் கொண்டுதான் ஆவார்கள்
கதை சொல்லிச் சென்ற விதம் அருமை
வாழ்த்துக்கள்
த.ம 5

என்னை ஆதரிப்பவர்கள் . .