Pages

Wednesday, May 23, 2012

காத்திருப்பு. 3

வீட்டுக்கு வந்தவர்கள் சவிதாவிடம் நடந்ததெல்லாம் சொன்னார்கள்.  நீ என்னம்மா சொல்ரே என்ரார்கள். நான் சொல்ல என்ன இருக்கு. பெரியவங்க நீங்க பாத்து எது செய்தாலும் சரிதான் என்றாள்.மறு நாளே குடும்ப நல கோர்ட்டுக்குபோய் விஷயங்கள் எல்லாம் சொல்லி கேஸ் ஃபைல் செய்து சங்கருக்கு சம்மன் அனுப்பினார்கள். சம்மனைப்பார்த்ததும் கோபம் தலைக்கேற  விவாகரத்து வழக்கா போடுராங்க பாத்துடலாம் நானா அவங்களான்னு நான் சம்மத்ம் சொல்லாம விவாகரத்து வாங்கிடமுடியுமா அவங்களால என்று அப்பவும் திமிர்த்தனமாகவே பேசினான். அவன் அம்மா எவ்வளவோ சொல்லியும் கூட அவன் காதிலேயே வாங்கலே. கோர்ட்டில் வாய்தா வாங்கி ,வாங்கியே ஒரு வருடத்துக்கும் மேலே கேசை இழுத்தடித்தான் சங்கர். கோர்ட்டில் நீங்க சொல்ரபடி சங்கர் கிட்ட இது போல குறை இருக்கு என்பதற்கு உங்க கிட்ட எதானும் ஆதாரம் இருந்தா நம்மபக்கம் பலமாக இருக்கும் என்றார்கள். உடனே அடுத்த நாள் சவிதா அப்பா அம்மாவை கூட்டிக்கொண்டு டாக்டர் ராமமூர்த்தியை பார்க்கப்போனாள். வாம்மா சவிதா. என்ன விஷயம் என்றார். அவரிடம் எல்லா விஷயங்களும் விவரமாக சொல்லி விட்டு கோர்ட்ல கேஸ் நடக்கும் போது நீங்க வந்து சாட்சி சொல்ல முடியுமா என்று கேட்டாள் சவிதா. கண்டிப்பா சொல்ரேன்மா. அவனோட மெடிக்கல் ரிப்போர்ட் எல்லாம் என்னிடமும் ஒரு காப்பி இருக்கு. கேஸ் நம்ம பக்கம் தான் ஸ்ட்ராங்கா இருக்கு நாம ஜெயிச்சுடலாம் கவலையே படாதீங்கன்னு தைரியம் சொல்லி அனுப்பினார்.



 கோர்ட்டில் டாக்டர் சொன்ன சாட்சியத்தால் சங்கரின் ஏமாற்றுத்தனம் வெட்ட வெளியாகி விவாகரத்தாக தீர்ப்பு கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் அவங்க வீட்ல கொடுத்த சீர் எல்லாம் திரும்ப அவங்க கிட்டவே கொடுக்கணும் என்றும் தீர்ப்பானது. அந்தப்பொருட்களை திரும்ப கொடுக்கவே 6-மாசத்துக்கும் மேல இழுத்தடித்தான் சங்கர் அவர்களை.இந்தகூத்தெல்லாம் நடந்து முடியவே 2- வருடங்கள் ஆனது. சவிதாவும் பெற்றோரிடம் நான் ஏதானும் வேலைக்கு போரேன்பா. வீட்ல நலு சுவத்தையே பாத்துக்கொண்டிருந்தா பைத்தியமே பிடிச்சுடும் போல இருக்குன்னு சொல்லி ஒரு ப்ரைவேட் கம்பெனியில் டெலிபோன் ஆபரேட்டர் வேலையில் சேர்ந்தாள்.6 மாசம் அமைதியாகவே போனது. டெல்போன் ஆப்ரேட்டர்வேலையில் அவளுக்கு பூரா நாளும் வேலப்பளு மிக அதிக மாக இருந்தது. பாஸிடம் சொன்னாள். சரிம்மா நாளைக்கெ உனக்கு ஒரு அசிஸ்டெண்ட் ஏற்பாடு செய்துடரேன்மா. வேர கம்பெனில வேலை பார்த்தஒருவர் நாளை நம்ம கம்பெனியில் நாளை புதுசா ஜாயின் பண்ரதா இருக்கார். அவரை உனக்கு அசிஸ்டெண்டா போட்டுடரேன் சரிதானே என்றார். தேங்க்ஸ் சார் என்றாள் சவிதா. சொன்னதுபோல மறு நாள்
வின்செண்ட் அவளுக்கு அசிஸ்டெண்டாக வேலையில் சேர்ந்தான். பக்கத்து பக்கத்து டேபிளில் அமர்ந்து இருவரும் பொறுப்பாக வேலை பார்த்து வந்தனர்.

வேலை பற்றிய பேச்சுக்கள் தவிர அனாவசியமாக எதுவுமே பேசமாட்டான்வின்செண்ட் இப்படியே ஒரு 6-மாசம் அமைதியாக சென்றது. ஒரு நாள் வேலை நேரம் முடிந்து கிளம்பும் போது வின்செண்ட் சவிதாவிடம் சவிதா உங்க கிட்ட கொஞ்சம் பர்சனலா பேசணும் காபி ஷாப் போயி பேசலாமா என்றான். திடுக்கிட்ட சவிதா என்கிட்ட என்ன பர்சனல்? என்றாள் ப்ளீஸ் வாங்க சொல்ரேன் என்றான். அரைமனதுடன் சவிதா அவன்கூட காபி ஷாப் சென்றாள். இதுபோல ஒரு ஆணுடன் தனியே காபி ஷாப் எல்லாம் சென்றிராததால் சவிதாவுக்கு ரொம்பவே தயக்கமாக இருந்தது. காபி ஆர்டர் செய்த வின்செண்ட் சவிதா நான் நேரிடையா விஷயத்துக்கு வந்துடரேன் நான் உங்களைத்திருமணம் செய்ய ஆசைப்படுரேன் என்று சொன்னான். திடுக்கிட்ட சவிதா என்ன , என்ன சொன்னீங்க? என்றாள் ஏன் சவிதா பதட்டப்படுரீங்க? இல்லே என்னப்பத்தி உங்களுக்கு என்ன தெரியும் திடீர்னு கல்யாணம் பண்ணிக்கரேன்னு சொன்னா என்ன அர்த்தம் என்றாள் கோபத்துடன். கோவப்படாதீங்க எனக்கு உங்களைப்பற்றி எல்லாமே தெரியும் நான் இங்கு வேலைக்கு வருவதற்கு முன் சங்கர் வேலை செய்த கம்பெனியில்தான் வேலை செய்தேன். அதனால உங்க வாழ்க்கையில் நடந்த எல்லா விஷயமும் தெரியும் எனக்கு. விவாக ரத்தான பெண்கள் மறு மணம் செய்யக்கூடாதுன்னு எங்காவது சொல்லி இருக்கா? ஏன் தயங்குரீங்க. முதல் கல்யாணம் தந்த அதிர்ச்சியில் கல்யாணம் என்றாலே வெருப்பா இருப்பீங்கன்னு தெரியும். இதுல உங்க மிஸ்டேக் ஏதுமே இல்லியே? அப்புரம் என்ன? அதுக்காக உங்க மேல பரிதாபபட்டோ, இறக்கப்பட்டோ உங்களை கல்யாணம் செய்யுரேன்னு சொல்லலே.உண்மையிலேயே உங்க அமைதியான குணம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.இதுல எந்த தப்பும் கிடையாது உங்க விருப்பம் தெரிஞ்சுக்கத்தான் தனியே கூட்டி வந்து பேசுரேன்.என்று அனபாக பேசினான். சவிதாவுக்கு ஒரே குழப்பம் என்ன பதில் சொல்வதுன்னு. எந்த முடிவுக்கும் வரமுடியாமல் தவிப்பாக இருந்தது. அவளுக்கும் சின்ன வயதுதானே?

 நீங்க எங்க அப்பா அம்மாவை சந்தித்து பேசுங்க. என் அப்பா தீவிர  மதவாதி. உங்க பேரைப்பார்த்தாலே நீங்க வேற்று மதத்தவர்னு தெரியுது. அப்பா, அம்மா இதுக்கெல்லாம் சம்மதிக்கவே மாட்டாங்க என்றாள். சவிதா அப்பா அம்மா, விருப்பம், வீட்டுப்பெரியவங்க விருப்பமெல்லாம் பற்றி யோசிக்கரீங்க உங்க விருப்பம் பற்றியும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க இது உங்க வாழ்க்கை நீங்கதான் முடிவெடுக்கணும். உங்க விருப்பம்தெரிஞ்ச பிறகுதான் உங்க வீட்ல வந்து பேசலாம்னு இருந்தேன். நீங்க உங்க விருப்பம் சொல்லுங்க. என்றான்.
எனக்கு ஒன்னும் புரியல்லே என்ன பதில் சொல்ரதுன்னும் தெரியல்லே நீங்க எங்க வீட்ல வந்து பேசுங்க என்றாள்.அப்போ உங்களுக்கு என்னை மணப்பதில் எந்த  மறுப்பும் இல்லேதானே. நா நாளைக்கே உங்க வீட்டுக்கு வந்து பெரியவங்களிடம் பேசுரேன்.என்றான். இருவரும் காபி ஷாப் விட்டு அவரவர் வீடு சென்றார்கள். இரவுபூராவும் சவிதாவுக்கு உறக்கமே வராமல் ஒரே குழப்பமாக இருந்தது. எனக்கு இன்னொரு கல்யாண்ம அவசியமா. அம்மா அப்பாகூட எவ்வள்வு நாள் இப்படியே இருக்கமுடியும் என்று பலவித் ம்ன உளைச்சலில் உறக்கம் பிடிக்காமல் புறண்டு கொண்டே இருந்தாள். மறு நாள் சொன்னபடியே வின்செண்ட் சவிதா வீடு வந்தான். தன்னை அறிமுகம் செய்துகொண்டு நேரிடையாக கல்யாணம் பற்றி பேசினான். பெற்றவர்களுக்கோ ஒரே திகைப்பு. என்ன சொல்ரான் இந்தப்பிள்ளை. இதை எப்படி எடுத்துக்கரது. சரி சவிதாவையும் நம்மகூடவே முதிர் கன்னியாக எவ்வளவு நாள்தான் வைத்திருக்க முடியும் எல்லா விஷயமும் தெரிந்தும் ஒருவன் அவளைக்கல்யாணம் செய்துக்கரேன்னா நல்ல விஷயம்தான் ஆனா இவன் வேர மதத்துக்காரனா இருக்கானே நம்ம சொந்த பந்தம்லாம் என்ன சொல்லுவார்களோ தெரியல்லியேன்னு அவர்களும் குழம்பினார்கள்.

 மறு படியும் வின்செண்டே அவர்களுக்கு புரியும் விதமாக எடுத்துக்கூறினான். இது உங்க பொண்ணு வாழ்க்கை சார். அவ நல்லா இருக்கணும் என்பது தானே உங்க விருப்பம் நான் அவளை நல்லாவே கவனிச்சுக்குவேன்.  சரிப்பாஎங்க சொந்தக்காரங்களிடமும் இது பத்தி பேசிப்பாக்குரேன் எல்லாரும் ஒத்துகிட்டாங்கன்னா எங்களுக்கும் மறுப்பில்லே நீ ரெண்டு நா கழிச்சு வா என்றார்கள். சரி சார் நான் வேறு மதம் என்பதற்க்காக என் உடம்பில் பச்சை ரத்தமா ஓடுது ? எல்லா ஜாதி மதக்காரங்க உடம்பிலும் சிவப்பு ரத்தம்தானே ஓடுது. மதத்தைக்காரணம்காட்டி மறுபடி பொண்ணுவாழ்க்கையைபிரச்சினை ஆக்கிடாதீங்க நான் அவ்வளவுதான் சொல்லமுடியும் பிறகு உங்க விருப்பம் போல செய்யுங்க என்று சொல்லி விட்டு கிளம்பினான். மறு நாளே சொந்தக்காரங்க படையெடுப்பு எல்லோரிடமும் விஷயம் சொல்லப்பட்டது கோவக்கார மாமா மட்டுமே கொஞ்ச்ம் குதித்தார். எல்லாரும் கூடி பேசினதில் எல்லாருக்குமே சவிதாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக்கொடுப்பதில்  ஆர்வம் இருந்தது நன்றாகவே புரிந்தது. மறுபடியும் வின்செண்ட் வந்து பெசினதும் மறுப்பேது கூராமல் சம்மதிதனர். வீட்டளவில் சுருக்கமாக்வே கல்யாணம் நடத்தி அதை பதிவும் செய்தனர்.

 இவர்கள் விட்டில் மாமனார், மாமியார், வின்செண்டின் அண்ணா தங்கை என்று கூட்டுக்குடும்பமாக வசித்துவந்தனர். எல்லாருமே சவிதாவிடம் அன்பாகவே பழகினார்கள். எந்தப்பிரச்சினையும் இல்லாமல் இரண்டு வருடங்கள் ஓடின. சவிதா சைவ உணவுக்கு பழகி இருந்தவள். இவர்களோ அசைவ விரும்பிகள் அது ஒரு விஷயம்தான் சவிதாவால் அட்ஜஸ்ட் செய்து கொள்ளமுடியாமல் இருந்தது.இரண்டு வருடம் ஆனதும் மாமியார்க்காரி ஏண்டா வின்செண்டு இப்ப குழந்தை வேனாம்னு ஏதானும் ப்ளான் பண்ணி இருக்கீங்களா என்றாள்.  சே சே, அப்படில்லாம் ஏதும் இல்லேம்மா என்றான் வின்செண்ட் பின்ன ரெண்டு பேரும் டாக்டரைப்போயி பாருங்க கல்யாண்மாகி அடுத்தவருஷமே குழந்தை பெத்துகிட்டாதான் நல்லது ரெண்டு வருஷமாகுது எதுக்கும் டாக்டரைப்போயி பாத்துடுங்க என்றாள். வின்செண்டும் சவிதவைக்கூட்டிக்கொண்டு டாக்டரிடம் போனான். இருவரையும் பரிசோதித்த டாக்டர் நீங்க் ரெண்டு பேருமே குழந்தை பெத்துக்க முழு தகுதியுடந்தான் இருக்கீங்க. எந்தக்குறைபாடும் இல்லேன்னு மெடிகல் ரிப்போர்ட்டையே கைல் தந்தார்கள். வீடுவந்து சொன்னதும் எல்லாருக்குமே திருப்த்திதான் சிலருக்கு லேட்டாதான் குழந்தை பாக்கியம் கிடைக்கும் போல இருக்குன்னு சமாதானப்படுத்திக்கொண்டனர். அவர்கள் வீட்டில் ஒரு மழலையை எதிர் பார்த்து அனைவரும் காத்துக்கொண்டிருக்கிரார்கள். சீக்கிரமே அந்தபாக்கியம் கிடைக்க நாமும் வாழ்த்துவோம் அவர்களை.

20 comments:

நிரஞ்சனா said...

ஹப்பா... அந்த சவிதாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சதுன்னு முடிச்சப்பறம் தான் மனசு அமைதியாச்சு. அவங்களுக்கு சீக்கிரமே குழந்தை பாக்கியம் கிடைக்கட்டும்னு உங்களோட சேர்ந்து நானும் வாழ்த்தறேன்மா.

பால கணேஷ் said...

போன பகுதியைத் தவற விட்டதுகூட நல்லதாப் போச்சு. சுபமான முடிவைப் படிச்சு சந்தோஷப்பட முடிஞ்சுதே... அருமையான சிறுகதை. அவர்களுக்கு என் வாழ்த்தையும் சேர்த்துக்கோங்க.

Madhavan Srinivasagopalan said...

நாமும் வாழ்த்துவோம் அவர்களை

சாந்தி மாரியப்பன் said...

கதையின் முடிவு நிறைவா இருக்கும்மா..

ஸாதிகா said...

லக்‌ஷ்மிம்மா உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்தறேன்மா.அருமையான முடிவு தந்து கதையை நிரப்பமாக்கி விடடீர்கள்.

முற்றும் அறிந்த அதிரா said...

கதையை அழகாக்கிக் கொண்டு வந்து நல்ல முடிவோடு முடித்துவிட்டீங்க.

Yaathoramani.blogspot.com said...

அதிர்ச்சியான துவக்கம்
ஆயினும் அருமையான முடிவு
மனம் கவர்ந்த படைப்பைத் தந்தமைக்கு
மனப்பூர்வமான வாழ்த்துக்கள்

குறையொன்றுமில்லை. said...

நிரஞ்சனா கதையை ரசித்ததற்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கணேஷ் கருத்துக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

சாந்தி வருகைக்கு நன்றீ

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா வருகைக்கும் ரசனைக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

அதிரா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரமணி சார் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி

K said...

நல்ல அழகான முடிவு லக்ஸ்மி அக்கா! சபீதாவின் வாழ்க்கை சிறப்பாக மாறியது எமக்கும் மகிழ்ச்சிதான்! அவர்கள் இருவருக்கும் குழந்தைப் பாக்கியம் கிடைக்க வாழ்த்துவோமாக!

குறையொன்றுமில்லை. said...

மணி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

மாதேவி said...

கதையை அழகாக சொல்லியுள்ளீர்கள். நல்ல முடிவு.

இராஜராஜேஸ்வரி said...

சீக்கிரமே மழலை பாக்கியம் கிடைக்க நாமும் வாழ்த்துவோம் அவர்களை.

குறையொன்றுமில்லை. said...

இராஜராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

ஹேமா said...

படபடப்போட வாசிக்க வச்சு நல்ல முடிவையும் தந்திட்டீங்கள் அம்மா.அழகாக கதை எழுதுறீங்கள் அம்மா !

குறையொன்றுமில்லை. said...

ஹேமா வருகைக்கு நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .