Pages

Friday, July 6, 2012

மாலாடு

எங்க திருனவேலி ஜில்லாவில் எங்க பிரிவில் மாலாடு இல்லாத பண்டிகையே கிடையாது. பெண்ணுக்கு கல்யாண் நிச்சயதார்த்ததுக்கே 101 மாலாடுகள் தேங்காய்ஸைசில் சீராக வைப்பார்கள்.

தேவையான பொருட்கள்

 பொட்டுக்கடலை-----------------  200 கிராம்
 ஜீனி---------------------------------- 200 கிராம்
  ( அதாவது சரிக்கு சரி அளவு)
 முந்திரி பருப்பு-------------- 10 முதல் 15 வரை
 ஏலம்---------------------   5
 நெய்-------------------   150 மில்லி

 செய் முறை
                                   
                                            
 பொட்டுக்கடலையை தனியாக மிக்சியில் பொடிக்கவும்
       ஜீனியையும் தனியாக பொடிக்கவும்
                                                           
 இரண்டையும் நல்லா கலந்து மேலாக முந்திரி வறுத்துபோட்டு ஏலம் பொடித்து போட்டு கலக்கவும். நெய்யை நன்கு சூடாக்கி அதில் விட்டு கரண்டியால் நன்கு கலக்கி கை பொருக்கும் சூட்டிலேயே உருண்டைகளாக
                                             




பிடிக்கவும். மிகவும் சுவையாக இருக்கும்.

28 comments:

Yaathoramani.blogspot.com said...

மாலாடின் ருசியே தனிதான்
இப்போதுதான் என் பெண்ணின்
மறுவீடு நிகழ்ச்சிக்கு வீட்டிலேயே
தயார் செய்து கொடுத்து அனுப்பினோம்
ஏறக்குறைய தாங்கள் சொல்லியுள்ள
பக்குவத்திலேயே செய்திருந்தோம்
அருமையாக அமைந்தது
படங்களுடன் மிக மிக அருமையாக
விளக்கிப்போகிறீர்கள்,
பயன்படும் அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Tha.ma 1

வை.கோபாலகிருஷ்ணன் said...

மாலாடு செய்முறையும் படங்களும் என் நாக்கினில் நீரை வரவழைக்கின்றன.

பாராட்டுக்கள்.

அன்புடன்
vgk

சாந்தி மாரியப்பன் said...

ரொம்ப ருசியான செய்யவும் எளிமையான இனிப்பு.. சில சமயங்களில் என்னை எதிர்பார்க்காம என் பெண் செய்து எனக்கும் கொடுத்து அசத்திடுவா :-))

கோமதி அரசு said...

மாலாடு படங்கள், செய்முறை விளக்கம் எல்லாம் அருமை.
என் மாமியார் யார்வந்தாலும் உடனே செய்து தரும் பலகாரம்.(செய்வது எளிது என்பதால்)

துளசி கோபால் said...

என் பொண்ணுக்கு ரொம்பப்பிடிக்கும் சமாச்சாரம்.

நாளைக்கே செஞ்சு கொடுக்கப்போறேன்.

பகிர்வுக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

சுவையான குறிப்புக்கு நன்றி. திருநெல்வேலி ஸ்பெஷல் ஆயிற்றே. தேங்காய் அளவில் பார்த்ததில்லை. தீபாவளிக்கு நிச்சயமா எலுமிச்சை அளவில் இடம் பெறும்:)!

வெங்கட் நாகராஜ் said...

இனிக்கும் மாலாடு... எனக்கும் பிடிக்கும்.

பகிர்வுக்கு நன்றிம்மா.

MARI The Great said...

எனக்கும் ரொம்ப பிடிக்கும்!

Mahi said...

Have heard of this...had it once or twice! Looks good Lakshmi- ma! Am not getting fresh pottukadalai here, I think I should try making this once. As we are adding elakkai, the odor of pottukadalai will go off! :)

குறையொன்றுமில்லை. said...

ரமணி சார் வருகைக்கும் கருத்துக்கும் த். ம. ஓட்டுக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோபால் சார் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கவிதை வீதி சௌந்தர் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

சாந்தி உன் பெண்ணே செய்து அசத்தும் சுலபமான இனிப்புதான் இல்லியா?

குறையொன்றுமில்லை. said...

கோமதி அரசு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

துளசி கோபால் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராமல்ஷ்மி தீபாவளிசமயம் எலுமிச்சம்பழம் அளவில்தான் செய்வோம் கல்யாண சீர்னு வரும்போது அது தேங்கா சைசாயிடும்.

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கு நன்றி இந்த இனிப்பு பிடிக்காதவங்க யாருமே இல்லே

குறையொன்றுமில்லை. said...

வரலாற்று சுவடுகள் உங்களுக்கும் பிடிக்குமா மகிழ்ச்சி.

குறையொன்றுமில்லை. said...

மஹி வருகைக்கு நன்றி நானும் ஏலம் போடுவோம்னு சொல்லி இருக்கேனே

மாதேவி said...

அருமையான இனிப்பு உருண்டை.

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

குறையொன்றுமில்லை. said...

மாதேவி வருகைக்கு நன்ரி

குறையொன்றுமில்லை. said...

chicha வருகைக்கு நன்றி

ஸாதிகா said...

ஆஹா ..அருமையான லாடு..நான் ஒன்று எடுத்துக்கறேன் லக்ஷ்மிம்மா.கூடவே கொப்பரையை நறுக்கிப்போட்டால் இன்னும் சுவையாக இருக்கும் இல்லையா?

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா வா வா ஏன் ஒன்னெ ஒன்னு எடுத்துக்கரே நிறையா எடுத்துக்கோ. உனக்கில்லாததா?

ghost said...

bengal gram is to be used after frying it to achive golden brown colour and fried gram is not used

குறையொன்றுமில்லை. said...

ghost- என்னபேருங்க இது? பெங்கால் க்ராம் கடலைப்பருப்பு. நா சொன்னது அது இல்லே. பொரிகடலை.பொட்டுக்கடலைன்னும் சொல்வாங்க அதை வறுக்கவோ சூடு படுத்தவோ தேவை இல்லே அப்படியே உபயோகப்படுத்தலாம்.

என்னை ஆதரிப்பவர்கள் . .